Cinemaரஜினிகாந்த்தை திடீரென சந்தித்த இளையராஜா...காரணம் இது தான்

ரஜினிகாந்த்தை திடீரென சந்தித்த இளையராஜா…காரணம் இது தான்

-

தமிழ் சினிமாவின் இரு மேதைகளாக கருதப்படுபவர்கள் ரஜினிகாந்த்தும் இளையராஜாவும். இவர்கள் இருவர் இடையே நீண்ட கால நட்பு உள்ளது. ரஜினி நடித்த பதினாறு வயதினிலே துவங்கி, பல படங்களில் ஏராளமான ஹிட் பாடல்களை தந்துள்ளார் இளையராஜா. இந்நிலையில் ரஜினிகாந்த் வீட்டிற்கு திடீரென சென்ற இளையராஜா, அவருடன் பல மணி நேரம் மனம் விட்டு பேசி உள்ளார்.

பிறகு புறப்பட்டு சென்ற இளையராஜாவுடன் ரஜினிகாந்தும் புறப்பட்டு சென்றுள்ளார். இளையராஜாவின் ஸ்டூடியோவிற்கு சென்ற ரஜினி, அங்கு இசைக்கச்சேரிக்காக நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியை கண்டு ரசித்துள்ளார். எதிர்வரும் ஜுன் மாதம் 2 ம் தேதி இளையராஜாவின் 79வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோயம்புத்தூரில் இளையராஜாவின் இசைக்கச்சேரி நடைபெற உள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சியை தான் ரஜினி கண்டு ரசித்துள்ளார்.

இசைக்கச்சேரி ஒத்திகையை பார்த்து விட்டு இளையராஜாவை மனம் திறந்து பாராட்டி உள்ளார் ரஜினிகாந்த். தனது பிறந்தநாளை முன்னிட்டு நடக்கும் இந்த இசை கச்சேரிக்காக தான் தனிப்பட்ட முறையில் ரஜினிகாந்த்திற்கு அழைப்பு விடுப்பதற்காகவே இந்த திடீர் சந்திப்பு நடந்துள்ளது. விரைவில் ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்தின் வேலைகள் துவங்கப்பட உள்ளது. இதனால் ரஜினி தற்போது ஓய்வில் இருக்கிறார். படப்பிடிப்பை துவங்குவதற்கு முன் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் ரஜினிகாந்த் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Latest news

ஆஸ்திரேலிய தொழில்துறைக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் டிரம்ப்

ஆஸ்திரேலிய எஃகுத் தொழிலுக்கு கடுமையான அடியாக, இறக்குமதிகள் மீதான தற்போதைய வரிகளை இரட்டிப்பாக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சிக்கிறார். ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1 பில்லியன்...

நாளை முதல் உயரும் மாணவர் கடன் விகிதங்கள்!

நிலுவையில் உள்ள மாணவர் கடன்களைக் கொண்ட மூன்று மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு $2.5 பில்லியனுக்கும் அதிகமான கடன் அதிகரிப்பு நாளை முதல் அமலுக்கு வரும். மாணவர் கடன்களை 20...

இளைஞர்களின் போதைப் பழக்கத்தால் முழு நாடும் ஆபத்தில்

புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், Vaping-ஐ பயன்படுத்தும் இளைஞர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருப்பதாக ஒரு புதிய தரவு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் சுகாதார நிறுவனத்தின்...

வயிற்றில் இருக்கும் குழந்தைகளையும் கொல்லும் காஸா போர்

26 வயதான பாலஸ்தீனப் பெண் ஒருவர், தான் எல்லாவற்றையும் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறுகிறார். பல வருட IVF சிகிச்சைக்குப் பிறகு, ஜூலை 2023 இல்...

வயிற்றில் இருக்கும் குழந்தைகளையும் கொல்லும் காஸா போர்

26 வயதான பாலஸ்தீனப் பெண் ஒருவர், தான் எல்லாவற்றையும் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறுகிறார். பல வருட IVF சிகிச்சைக்குப் பிறகு, ஜூலை 2023 இல்...

நியூ சவுத் வேல்ஸில் பூந்தொட்டியால் அடித்து தாயைக் கொன்ற நபர்

நியூ சவுத் வேல்ஸில் போதைக்கு அடிமையான 59 வயதான David Andrew Mapp என்ற நபர் தனது வயதான தாயாரை பூந்தொட்டியால் அடித்துக் கொன்றதாக வழக்குப்...