Cinemaரஜினிகாந்த்தை திடீரென சந்தித்த இளையராஜா...காரணம் இது தான்

ரஜினிகாந்த்தை திடீரென சந்தித்த இளையராஜா…காரணம் இது தான்

-

தமிழ் சினிமாவின் இரு மேதைகளாக கருதப்படுபவர்கள் ரஜினிகாந்த்தும் இளையராஜாவும். இவர்கள் இருவர் இடையே நீண்ட கால நட்பு உள்ளது. ரஜினி நடித்த பதினாறு வயதினிலே துவங்கி, பல படங்களில் ஏராளமான ஹிட் பாடல்களை தந்துள்ளார் இளையராஜா. இந்நிலையில் ரஜினிகாந்த் வீட்டிற்கு திடீரென சென்ற இளையராஜா, அவருடன் பல மணி நேரம் மனம் விட்டு பேசி உள்ளார்.

பிறகு புறப்பட்டு சென்ற இளையராஜாவுடன் ரஜினிகாந்தும் புறப்பட்டு சென்றுள்ளார். இளையராஜாவின் ஸ்டூடியோவிற்கு சென்ற ரஜினி, அங்கு இசைக்கச்சேரிக்காக நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியை கண்டு ரசித்துள்ளார். எதிர்வரும் ஜுன் மாதம் 2 ம் தேதி இளையராஜாவின் 79வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோயம்புத்தூரில் இளையராஜாவின் இசைக்கச்சேரி நடைபெற உள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சியை தான் ரஜினி கண்டு ரசித்துள்ளார்.

இசைக்கச்சேரி ஒத்திகையை பார்த்து விட்டு இளையராஜாவை மனம் திறந்து பாராட்டி உள்ளார் ரஜினிகாந்த். தனது பிறந்தநாளை முன்னிட்டு நடக்கும் இந்த இசை கச்சேரிக்காக தான் தனிப்பட்ட முறையில் ரஜினிகாந்த்திற்கு அழைப்பு விடுப்பதற்காகவே இந்த திடீர் சந்திப்பு நடந்துள்ளது. விரைவில் ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்தின் வேலைகள் துவங்கப்பட உள்ளது. இதனால் ரஜினி தற்போது ஓய்வில் இருக்கிறார். படப்பிடிப்பை துவங்குவதற்கு முன் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் ரஜினிகாந்த் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Latest news

பெண்களுக்கான பணிக்குத் திரும்பும் குயின்ஸ்லாந்து அரசாங்க நிதிகள்

பெண்கள் மீண்டும் பணியில் சேர உதவும் வகையில் மானியங்களை வழங்க குயின்ஸ்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, குறைந்தது 6 மாதங்களாவது வேலையில்லாமல் இருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட...

ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புர்காவை தடை செய்வதற்கான திட்டம்

பொது இடங்களில் புர்கா மற்றும் பிற முகத்தை மூடும் ஆடைகளை தடை செய்ய வேண்டும் என்று செனட்டர் பவுலின் ஹான்சன் இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளார். அவர்...

ஆஸ்திரேலியாவின் நம்பகமான நண்பராக மாற அமெரிக்கா தயார்

ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதியில் முக்கிய வருவாய் ஈட்டித் தரும் கனிமங்களாகக் கருதப்படும் முக்கியமான கனிமங்கள், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யத் தயாராகி வருகின்றன. ஆஸ்திரேலியாவின் முக்கியமான கனிமத் துறையில் முதலீடு...

ஆஸ்திரேலியாவின் உலக பாரம்பரிய தளங்களுக்கு என்ன நடக்கிறது?

ஆஸ்திரேலியாவில் உலக பாரம்பரிய தளங்களாக பட்டியலிடப்பட்ட நான்கு இயற்கை தளங்களின் நிலை 2020 முதல் குறைந்துள்ளது. இந்த உயிரினங்களுக்கான பாதுகாப்பு முயற்சிகள் குறைந்துவிட்டன என்பதை சர்வதேச இயற்கை...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஏழைகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவில் வறுமை அதிகரித்து வருவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் (UNSW) மற்றும் ஆஸ்திரேலிய சமூக சேவைகள் கவுன்சில் (ACOSS) நடத்திய...

Qantas ஹேக்கர்கள் குறித்த அரசாங்கத்தின் முடிவு

Qantas வாடிக்கையாளர் தரவு திருட்டுக்காக சைபர் குற்றவாளிகளுக்கு பணம் செலுத்தத் தயாராக இல்லை என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 5.7 மில்லியன் Qantas வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட...