Cinemaரஜினிகாந்த்தை திடீரென சந்தித்த இளையராஜா...காரணம் இது தான்

ரஜினிகாந்த்தை திடீரென சந்தித்த இளையராஜா…காரணம் இது தான்

-

தமிழ் சினிமாவின் இரு மேதைகளாக கருதப்படுபவர்கள் ரஜினிகாந்த்தும் இளையராஜாவும். இவர்கள் இருவர் இடையே நீண்ட கால நட்பு உள்ளது. ரஜினி நடித்த பதினாறு வயதினிலே துவங்கி, பல படங்களில் ஏராளமான ஹிட் பாடல்களை தந்துள்ளார் இளையராஜா. இந்நிலையில் ரஜினிகாந்த் வீட்டிற்கு திடீரென சென்ற இளையராஜா, அவருடன் பல மணி நேரம் மனம் விட்டு பேசி உள்ளார்.

பிறகு புறப்பட்டு சென்ற இளையராஜாவுடன் ரஜினிகாந்தும் புறப்பட்டு சென்றுள்ளார். இளையராஜாவின் ஸ்டூடியோவிற்கு சென்ற ரஜினி, அங்கு இசைக்கச்சேரிக்காக நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியை கண்டு ரசித்துள்ளார். எதிர்வரும் ஜுன் மாதம் 2 ம் தேதி இளையராஜாவின் 79வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோயம்புத்தூரில் இளையராஜாவின் இசைக்கச்சேரி நடைபெற உள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சியை தான் ரஜினி கண்டு ரசித்துள்ளார்.

இசைக்கச்சேரி ஒத்திகையை பார்த்து விட்டு இளையராஜாவை மனம் திறந்து பாராட்டி உள்ளார் ரஜினிகாந்த். தனது பிறந்தநாளை முன்னிட்டு நடக்கும் இந்த இசை கச்சேரிக்காக தான் தனிப்பட்ட முறையில் ரஜினிகாந்த்திற்கு அழைப்பு விடுப்பதற்காகவே இந்த திடீர் சந்திப்பு நடந்துள்ளது. விரைவில் ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்தின் வேலைகள் துவங்கப்பட உள்ளது. இதனால் ரஜினி தற்போது ஓய்வில் இருக்கிறார். படப்பிடிப்பை துவங்குவதற்கு முன் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் ரஜினிகாந்த் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Latest news

நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாறுமா?

நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாற வேண்டுமா என்பது குறித்த நீண்டகால விவாதம் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொண்டு நியூசிலாந்தின் பாதுகாப்பை...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...

உலகில் புற்றுநோய் குறித்த புதிய WHO அறிக்கை

உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் புற்றுநோய் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. 10 புற்றுநோய் நோயாளிகளில் 4 பேருக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்...

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

மறைந்த ஆஸ்திரேலிய வீரரின் நினைவாக அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடிகள்

ஜப்பானில் மலையில் பனிச்சறுக்கு விளையாடும்போது இறந்த ஆஸ்திரேலிய சறுக்கு வீரரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மெல்பேர்ணில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. அதன்படி, அவர் படித்த மெல்பேர்ணில்...