Cinemaரஜினிகாந்த்தை திடீரென சந்தித்த இளையராஜா...காரணம் இது தான்

ரஜினிகாந்த்தை திடீரென சந்தித்த இளையராஜா…காரணம் இது தான்

-

தமிழ் சினிமாவின் இரு மேதைகளாக கருதப்படுபவர்கள் ரஜினிகாந்த்தும் இளையராஜாவும். இவர்கள் இருவர் இடையே நீண்ட கால நட்பு உள்ளது. ரஜினி நடித்த பதினாறு வயதினிலே துவங்கி, பல படங்களில் ஏராளமான ஹிட் பாடல்களை தந்துள்ளார் இளையராஜா. இந்நிலையில் ரஜினிகாந்த் வீட்டிற்கு திடீரென சென்ற இளையராஜா, அவருடன் பல மணி நேரம் மனம் விட்டு பேசி உள்ளார்.

பிறகு புறப்பட்டு சென்ற இளையராஜாவுடன் ரஜினிகாந்தும் புறப்பட்டு சென்றுள்ளார். இளையராஜாவின் ஸ்டூடியோவிற்கு சென்ற ரஜினி, அங்கு இசைக்கச்சேரிக்காக நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியை கண்டு ரசித்துள்ளார். எதிர்வரும் ஜுன் மாதம் 2 ம் தேதி இளையராஜாவின் 79வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோயம்புத்தூரில் இளையராஜாவின் இசைக்கச்சேரி நடைபெற உள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சியை தான் ரஜினி கண்டு ரசித்துள்ளார்.

இசைக்கச்சேரி ஒத்திகையை பார்த்து விட்டு இளையராஜாவை மனம் திறந்து பாராட்டி உள்ளார் ரஜினிகாந்த். தனது பிறந்தநாளை முன்னிட்டு நடக்கும் இந்த இசை கச்சேரிக்காக தான் தனிப்பட்ட முறையில் ரஜினிகாந்த்திற்கு அழைப்பு விடுப்பதற்காகவே இந்த திடீர் சந்திப்பு நடந்துள்ளது. விரைவில் ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்தின் வேலைகள் துவங்கப்பட உள்ளது. இதனால் ரஜினி தற்போது ஓய்வில் இருக்கிறார். படப்பிடிப்பை துவங்குவதற்கு முன் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் ரஜினிகாந்த் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Latest news

WhatsApp அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சங்கள்

Meta நிறுவனம் WhatsAppல் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, WhatsApp பயனர்கள் அரட்டைகளை Filter செய்வதற்கான திறனைப் பெறுவார்கள். இவை பல்வேறு அளவுகோல்களின் கீழ் பயனர்களின் அரட்டைப் பட்டியலை...

ஆராதனையின் போது கத்தியால் குத்தப்பட்ட ஆயரிடம் இருந்து முதல் முறையாக சிறப்பு அறிக்கை

இணையத்தில் ஒளிபரப்பாகும் சேவையின் போது கத்தியால் குத்திய இளைஞனை மன்னிப்பதாக பிஷப் மேரி இம்மானுவேல் தெரிவித்துள்ளார். அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு, தாக்கியவரை பகிரங்கமாக மன்னித்து, தனது...

கத்திக்குத்துக்குப் பிறகு மீண்டும் திறந்த கடை உரிமையாளர்கள்

சிட்னியின் Bondi சந்திப்பில் உள்ள Westfield  ஷாப்பிங் மால் இன்று காலை 11 மணிக்கு திறக்கப்பட்டது. கத்திக்குத்தால் 6 உயிர்களைக் கொன்ற பிறகு இன்றே முதல்...

கரடிகளை அழிக்க அனுமதி அளித்துள்ள பிரபலமான ஆசிய நாடு

மனிதர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பால் கரடிகளை கட்டுப்படுத்தப்படும் விலங்குகளின் பட்டியலில் ஜப்பான் சேர்த்துள்ளது. ஆசிய நாடான ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பகுதியில் ''ஹிகுமா'' எனும் பழுப்பு நிற...

பஞ்சாப்பை 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை – IPL 2024

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 33-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற பஞ்சாப்...

கரடிகளை அழிக்க அனுமதி அளித்துள்ள பிரபலமான ஆசிய நாடு

மனிதர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பால் கரடிகளை கட்டுப்படுத்தப்படும் விலங்குகளின் பட்டியலில் ஜப்பான் சேர்த்துள்ளது. ஆசிய நாடான ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பகுதியில் ''ஹிகுமா'' எனும் பழுப்பு நிற...