Newsஇந்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா மாளிகையின் மதிப்பு 4000 கோடி

இந்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா மாளிகையின் மதிப்பு 4000 கோடி

-

இந்திய விமான துறை அமைச்சராக இருக்கும் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவின் ’ஜெய் விலாஸ் மஹால்’ மாளிகையின் இன்றைய மதிப்பு 4000 கோடி ரூபாய் என்று கூறப்படுவது . குவாலியர் மாகாணத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியாவின் வம்சாவளிகள் தொடர்ந்து இந்த மாளிகையில் தான் வாழ்ந்து வருகிறார்கள்.

1874 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட இந்த மாளிகையின் இன்றைய இந்திய மதிப்பு ரூ.4,000 கோடி. ஐரோப்பிய கட்டடக்கலையின் அடிப்படையில் மைக்கேல் ஃபிலோஸ் என்பவர் இந்த மாளிகையை கட்டினார். ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 771 சதுர அடி பரப்பளவைக் கொண்ட ஜெய் விலாஸ் மாளிகை மூன்றடுக்கு கட்டிடமாக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாளிகை 1874 ஆம் ஆண்டு கட்டப்பட்ட போது ஒரு கோடி ரூபாய் மதிப்பிலானது என்றும் இன்றைய மதிப்பு ரூ.4,000 கோடி என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மாளிகையில் மொத்தம் 400 அறைகள் உள்ளன. இதில் 35 அறைகள் தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மியூசியத்தில் ஜான்சிராணி பயன்படுத்திய வாள்கள் மற்றும் முன்னோர்கள் பயன்படுத்திய பல்வேறு கலை அம்சங்கள் கொண்ட பொருட்கள், முன்னோர்கள் பயன்படுத்திய ஆடம்பர கார்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

இந்த மாளிகையில் உள்ள உணவருந்தும் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள மேஜை ரயில் தண்டவாளம் போல் நகரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாளிகையை அலங்காரம் செய்வதற்கு 560 கிலோ தங்கம் உள்பட விலை உயர்ந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாளிகையின் மேல்தளம், எட்டு யானைகளை கொண்டு நிறுத்தினாலும் உறுதிபட நிற்கும் என்பது ஒரு ஆச்சரியமான தகவல்.

Latest news

ஆஸ்திரேலியாவில் எதிர்காலத்தில் புதிய வீடுகளின் தேவை 1.2 மில்லியனாக இருக்கும் என ஆய்வு

2029 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலியாவின் புதிய வீடுகளின் தேவை சுமார் 1.2 மில்லியனாக இருக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தேசிய வீட்டு வசதி கவுன்சில் சமீபத்தில்...

ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் கருப்பை புற்றுநோயால் இறக்கும் ஒரு ஆஸ்திரேலிய பெண்

கருப்பை புற்றுநோயின் அறிகுறிகள் தென்படும் பெண்கள் உடனடியாக மருத்துவ சேவையை நாட வேண்டும் என சுகாதாரத்துறை பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கருப்பை புற்றுநோய் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைமை...

வியட்நாமில் உணவு விஷமானதால் 500 பேர் மருத்துவமனையில் அனுமதி

தெற்கு வியட்நாமில் உள்ள ஒரு கடையில் பான் மியை சாப்பிட்ட 500க்கும் மேற்பட்டோர் உணவு விஷமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆறு முதல் ஏழு வயதுடைய இரண்டு...

யாழ்ப்பாணத்தில் தாயைக் கொன்றுவிட்டு “நானே கொன்றேன்” என சுவற்றில் எழுதி வைத்த சிறுவன்

யாழ். தெல்லிப்பளையில் குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், காணாமல் போன அவரது 16 வயது மகன் பொலிசாரிடம் சரணடைந்துள்ள நிலையில், தாயை தானே கொலை...

ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் கருப்பை புற்றுநோயால் இறக்கும் ஒரு ஆஸ்திரேலிய பெண்

கருப்பை புற்றுநோயின் அறிகுறிகள் தென்படும் பெண்கள் உடனடியாக மருத்துவ சேவையை நாட வேண்டும் என சுகாதாரத்துறை பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கருப்பை புற்றுநோய் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைமை...

துப்பாக்கிச் சூடு காரணமாக மெல்போர்னில் மூடப்பட்டுள்ள முக்கிய சாலை

துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து, மெல்போர்னில் உள்ள பிரதான வீதியொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கிரீன்ஸ்பரோவில் இருந்து பாஸ்கோ வேல் சாலையை நோக்கி M80 ரிங் ரோடு வெளியேறும் மற்றும்...