Newsஇந்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா மாளிகையின் மதிப்பு 4000 கோடி

இந்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா மாளிகையின் மதிப்பு 4000 கோடி

-

இந்திய விமான துறை அமைச்சராக இருக்கும் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவின் ’ஜெய் விலாஸ் மஹால்’ மாளிகையின் இன்றைய மதிப்பு 4000 கோடி ரூபாய் என்று கூறப்படுவது . குவாலியர் மாகாணத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியாவின் வம்சாவளிகள் தொடர்ந்து இந்த மாளிகையில் தான் வாழ்ந்து வருகிறார்கள்.

1874 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட இந்த மாளிகையின் இன்றைய இந்திய மதிப்பு ரூ.4,000 கோடி. ஐரோப்பிய கட்டடக்கலையின் அடிப்படையில் மைக்கேல் ஃபிலோஸ் என்பவர் இந்த மாளிகையை கட்டினார். ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 771 சதுர அடி பரப்பளவைக் கொண்ட ஜெய் விலாஸ் மாளிகை மூன்றடுக்கு கட்டிடமாக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாளிகை 1874 ஆம் ஆண்டு கட்டப்பட்ட போது ஒரு கோடி ரூபாய் மதிப்பிலானது என்றும் இன்றைய மதிப்பு ரூ.4,000 கோடி என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மாளிகையில் மொத்தம் 400 அறைகள் உள்ளன. இதில் 35 அறைகள் தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மியூசியத்தில் ஜான்சிராணி பயன்படுத்திய வாள்கள் மற்றும் முன்னோர்கள் பயன்படுத்திய பல்வேறு கலை அம்சங்கள் கொண்ட பொருட்கள், முன்னோர்கள் பயன்படுத்திய ஆடம்பர கார்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

இந்த மாளிகையில் உள்ள உணவருந்தும் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள மேஜை ரயில் தண்டவாளம் போல் நகரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாளிகையை அலங்காரம் செய்வதற்கு 560 கிலோ தங்கம் உள்பட விலை உயர்ந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாளிகையின் மேல்தளம், எட்டு யானைகளை கொண்டு நிறுத்தினாலும் உறுதிபட நிற்கும் என்பது ஒரு ஆச்சரியமான தகவல்.

Latest news

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 16 அரிய வகை பாம்புகள் மீட்பு

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 16 உயிருள்ள, அரிய வகை பாம்புகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து மும்பைக்கு, அரிய...

ஆஸ்திரேலிய நீரில் சிறிய கடல் குதிரைகள் அழிந்து வருகின்றனவா?

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இருந்து சிறிய கடல் குதிரைகள் மறைந்து போகும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் கடல்...

கேரவன் ஓட்டுநர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க கோரிக்கைகள்

ஆஸ்திரேலிய சாலைகளில் அதிகரித்து வரும் கேரவன் விபத்துக்களைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சாலைகளில் அதிக வாகனங்கள் நுழைவதால், கேரவன்களை இழுத்துச்...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...

நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிவதற்கான ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட ION ரோபோ

ஆஸ்திரேலியாவில் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பிரிஸ்பேர்ணில் தயாரிக்கப்பட்ட ION எனப்படும் ரோபோ...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...