News20 லட்சத்தை திருடி விட்டு 'ஐ லவ் யூ' என எழுதி...

20 லட்சத்தை திருடி விட்டு ‘ஐ லவ் யூ’ என எழுதி வைத்து விட்டு போன வினோத திருடன்

-

இந்தியாவின் தெற்கு கோவாவில் உள்ள மார்கோ நகரில் பங்களா ஒன்றின் உரிமையாளர் வீட்டை பூட்டி விட்டு, இரண்டு நாட்கள் வெளியூர் சென்றுள்ளார். இதை கவனித்துக் கொண்டிருந்த திருடன் ஒருவன், பூட்டை உடைத்து, வீட்டில் இருந்த 20 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், 1.5 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளான்.

I Love You post-it note on the mirror

வீட்டில் இருந்த பொருட்களை திருடிய பிறகு, வீட்டில் இருந்த டிவி திரையில் ‘ஐ லவ் யூ’ என மார்க்கரால் எழுதி வைத்து விட்டு, தப்பிச் சென்றுள்ளான். இரண்டு நாட்கள் விடுமுறை முடிந்து வீடு திரும்பிய வீட்டின் உரிமையாளர், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்து, புகார் அளித்துள்ளார்.

I Love You Handwritten On Paper. Greetings written by hand.

இப்படி வினோதமாக கொள்ளையடித்து சென்றுள்ள திருடனின் செயலால் போலீசுக்கே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையடித்த பிறகு எதற்காக ஐ லவ் யூ என எழுதி வைத்து விட்டு சென்றுள்ளான் என்பது பற்றியும் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஒன்று அல்லது பலர் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தெற்கு கோவாவில் நடந்த இந்த வினோத கொள்ளை சம்பவம், முதலில் சிரிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டியதையும் அறிவுறுத்துவதாக உள்ளது. திருட்டு சம்பவம் அதிகரித்து வருவதால் கோவாவில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...