News20 லட்சத்தை திருடி விட்டு 'ஐ லவ் யூ' என எழுதி...

20 லட்சத்தை திருடி விட்டு ‘ஐ லவ் யூ’ என எழுதி வைத்து விட்டு போன வினோத திருடன்

-

இந்தியாவின் தெற்கு கோவாவில் உள்ள மார்கோ நகரில் பங்களா ஒன்றின் உரிமையாளர் வீட்டை பூட்டி விட்டு, இரண்டு நாட்கள் வெளியூர் சென்றுள்ளார். இதை கவனித்துக் கொண்டிருந்த திருடன் ஒருவன், பூட்டை உடைத்து, வீட்டில் இருந்த 20 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், 1.5 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளான்.

I Love You post-it note on the mirror

வீட்டில் இருந்த பொருட்களை திருடிய பிறகு, வீட்டில் இருந்த டிவி திரையில் ‘ஐ லவ் யூ’ என மார்க்கரால் எழுதி வைத்து விட்டு, தப்பிச் சென்றுள்ளான். இரண்டு நாட்கள் விடுமுறை முடிந்து வீடு திரும்பிய வீட்டின் உரிமையாளர், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்து, புகார் அளித்துள்ளார்.

I Love You Handwritten On Paper. Greetings written by hand.

இப்படி வினோதமாக கொள்ளையடித்து சென்றுள்ள திருடனின் செயலால் போலீசுக்கே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையடித்த பிறகு எதற்காக ஐ லவ் யூ என எழுதி வைத்து விட்டு சென்றுள்ளான் என்பது பற்றியும் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஒன்று அல்லது பலர் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தெற்கு கோவாவில் நடந்த இந்த வினோத கொள்ளை சம்பவம், முதலில் சிரிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டியதையும் அறிவுறுத்துவதாக உள்ளது. திருட்டு சம்பவம் அதிகரித்து வருவதால் கோவாவில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...