News20 லட்சத்தை திருடி விட்டு 'ஐ லவ் யூ' என எழுதி...

20 லட்சத்தை திருடி விட்டு ‘ஐ லவ் யூ’ என எழுதி வைத்து விட்டு போன வினோத திருடன்

-

இந்தியாவின் தெற்கு கோவாவில் உள்ள மார்கோ நகரில் பங்களா ஒன்றின் உரிமையாளர் வீட்டை பூட்டி விட்டு, இரண்டு நாட்கள் வெளியூர் சென்றுள்ளார். இதை கவனித்துக் கொண்டிருந்த திருடன் ஒருவன், பூட்டை உடைத்து, வீட்டில் இருந்த 20 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், 1.5 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளான்.

I Love You post-it note on the mirror

வீட்டில் இருந்த பொருட்களை திருடிய பிறகு, வீட்டில் இருந்த டிவி திரையில் ‘ஐ லவ் யூ’ என மார்க்கரால் எழுதி வைத்து விட்டு, தப்பிச் சென்றுள்ளான். இரண்டு நாட்கள் விடுமுறை முடிந்து வீடு திரும்பிய வீட்டின் உரிமையாளர், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்து, புகார் அளித்துள்ளார்.

I Love You Handwritten On Paper. Greetings written by hand.

இப்படி வினோதமாக கொள்ளையடித்து சென்றுள்ள திருடனின் செயலால் போலீசுக்கே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையடித்த பிறகு எதற்காக ஐ லவ் யூ என எழுதி வைத்து விட்டு சென்றுள்ளான் என்பது பற்றியும் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஒன்று அல்லது பலர் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தெற்கு கோவாவில் நடந்த இந்த வினோத கொள்ளை சம்பவம், முதலில் சிரிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டியதையும் அறிவுறுத்துவதாக உள்ளது. திருட்டு சம்பவம் அதிகரித்து வருவதால் கோவாவில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...