News 20 லட்சத்தை திருடி விட்டு 'ஐ லவ் யூ' என எழுதி...

20 லட்சத்தை திருடி விட்டு ‘ஐ லவ் யூ’ என எழுதி வைத்து விட்டு போன வினோத திருடன்

-

இந்தியாவின் தெற்கு கோவாவில் உள்ள மார்கோ நகரில் பங்களா ஒன்றின் உரிமையாளர் வீட்டை பூட்டி விட்டு, இரண்டு நாட்கள் வெளியூர் சென்றுள்ளார். இதை கவனித்துக் கொண்டிருந்த திருடன் ஒருவன், பூட்டை உடைத்து, வீட்டில் இருந்த 20 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், 1.5 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளான்.

I Love You post-it note on the mirror

வீட்டில் இருந்த பொருட்களை திருடிய பிறகு, வீட்டில் இருந்த டிவி திரையில் ‘ஐ லவ் யூ’ என மார்க்கரால் எழுதி வைத்து விட்டு, தப்பிச் சென்றுள்ளான். இரண்டு நாட்கள் விடுமுறை முடிந்து வீடு திரும்பிய வீட்டின் உரிமையாளர், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்து, புகார் அளித்துள்ளார்.

I Love You Handwritten On Paper. Greetings written by hand.

இப்படி வினோதமாக கொள்ளையடித்து சென்றுள்ள திருடனின் செயலால் போலீசுக்கே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையடித்த பிறகு எதற்காக ஐ லவ் யூ என எழுதி வைத்து விட்டு சென்றுள்ளான் என்பது பற்றியும் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஒன்று அல்லது பலர் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தெற்கு கோவாவில் நடந்த இந்த வினோத கொள்ளை சம்பவம், முதலில் சிரிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டியதையும் அறிவுறுத்துவதாக உள்ளது. திருட்டு சம்பவம் அதிகரித்து வருவதால் கோவாவில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Latest news

சட்டவிரோத குடியேறிகளை கண்காணிக்க இலங்கைக்கு விமானம் வழங்கிய ஆஸ்திரேலியா

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிபவர்களை கண்காணிக்க Beechcraft KA350 எனும் கடல்சார் கண்காணிப்பு விமானத்தை, ஆஸ்திரேலிய அரசு இலங்கைக்கு வழங்கியுள்ளது.

ஜப்பானின் பரப்பளவை விடப் பெரிய கடல் பாதுகாப்புப் பகுதியை அமைக்கவுள்ள ஆஸ்திரேலியா

ஒரு நாட்டின் அளவைவிட பெரிய கடல் பாதுகாப்புப் பகுதியை அமைக்க ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. மக்குவாரி தீவில் (Macquarie Island)...

கட்டுமானப் பணியில் இருந்த பாலம் திடீரென இடிந்து விழுந்த பரபரப்பு சம்பவம்

பீகார் மாநிலம் பாகல்பூரில் கட்டுமானப் பணியில் இருந்த அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உடலுறவை விளையாட்டாக அங்கீகாரித்து சம்பியன்ஷிப் போட்டி நடத்தும் சுவீடன்

உடலுறவு என்றாலே, பெரும்பாலானோர் அது ரகசியமாக நடத்தப்படக் கூடிய விடயம் என நினைத்து வாழ்ந்து வரும் நிலையில், அதை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து,...

கட்டுமானப் பணியில் இருந்த பாலம் திடீரென இடிந்து விழுந்த பரபரப்பு சம்பவம்

பீகார் மாநிலம் பாகல்பூரில் கட்டுமானப் பணியில் இருந்த அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருமண பந்தத்தில் இணைந்த ருத்துராஜ் கெய்க்வாட் – ரசிகர்கள் வாழ்த்து

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்தவர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.