Cinemaநான் இந்தியன்...சினிமாவில் எதற்காக இந்த பாகுபாடு...கமலின் அசத்தல் பேச்சு

நான் இந்தியன்…சினிமாவில் எதற்காக இந்த பாகுபாடு…கமலின் அசத்தல் பேச்சு

-

நடிகர் கமல்ஹாசன் தற்போது விக்ரம் படத்தில் நடித்து முடித்து முடித்துள்ளார். கைதி, மாஸ்டர் ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இந்த படம் எதிர்வரும் ஜுன் மாதம் 3 ம் தேதி வெளியாக உள்ளது. உலகம் முழுவதும் 5 மொழிகளில் இந்த படம் வெளியிடப்பட உள்ளது. இந்த படத்தில் பார்வையிழந்த முன்னாள் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல் நடித்துள்ள படம் இது. அதனால் ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நடிகர்கள் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா உள்ளிட்ட பல பெரிய நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பல்வேறு நாடுகளில் விக்ரம் படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்த படக்குழு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சமயத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய கமல், “விக்ரம் 3 படம் எடுக்கப்பட்டால் நிச்சயம் அந்த படத்திற்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குனராக இருப்பார். இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதாக சில தகவல்கள் பரவி வருகின்றன. அது உண்மையில்லை. விரைவில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புக்கள் துவங்கப்பட உள்ளது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது.

சினிமாவை வடக்கு, தெற்கு என எதற்காக பிரிக்கிறீர்கள் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சினிமா துறை என்பது ஒன்று தான். நான் இந்தியன். தாஜ்மஹால் என்னுடையது, மதுரை கோயில் உங்களுடையது என என்னால் சொல்ல முடியாது. கன்னியாக்குமரி என்னுடையது, காஷ்மீர் உங்களுடையது என பிரிக்க முடியாது. அப்படி இருக்கையில் சினிமாவை மட்டும் ஏன் பாகுபாடு பார்க்கிறீர்கள். அனைத்தும் அனைவருக்கும் சொந்தம் என்பதை போல் சினிமாவும் அனைவருக்கும் பொதுவானது” என கமல் தெரிவித்துள்ளார்.

Latest news

மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்கவும் – விக்டோரியா தீயணைப்புத் துறை

விக்டோரியாவின் Carlisle நதிப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். தற்போதைய நிலைமை ஓரளவுக்கு அமைதியடைந்திருந்தாலும், அந்தப் பகுதிகள்...

வட்டி விகித உயர்வு நிச்சயம் – முக்கிய வங்கிகள்

பணவீக்கத்தில் எதிர்பாராத உயர்வு காரணமாக அடுத்த வாரம் வட்டி விகித உயர்வு பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்கான ஆண்டு பணவீக்கம் 3.8% ஆக உயர்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல்...

சமூக ஊடகங்களில் “Back to school” புகைப்படங்களை இடுகையிடுவதைத் தவிர்க்கவும்

பள்ளி தொடங்கும் முன் சமூக ஊடகங்களில் "Back to school" புகைப்படங்களை இடுகையிடுவது குறித்து ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP) எச்சரிக்கை விடுத்துள்ளது . குழந்தைகளின் பள்ளி...

16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த அமேசான் நிறுவனம்

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் உலகளவில் சுமார் 16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செய்யறிவு (AI) தொழிநுட்பத்தின் வளர்ச்சியால், இணையவழி மற்றும்...

16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த அமேசான் நிறுவனம்

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் உலகளவில் சுமார் 16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செய்யறிவு (AI) தொழிநுட்பத்தின் வளர்ச்சியால், இணையவழி மற்றும்...

விக்டோரியா காட்டுத்தீயால் முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நகரத்திற்கான நீர் விநியோகம்

விக்டோரியாவின் Otways-இல் உள்ள Carlisle நதி காட்டுத்தீ Gellibrand நகரத்திற்கான நீர் விநியோகத்தை முற்றிலுமாக துண்டித்துவிட்டது . காட்டுத்தீ ஏற்படும் அபாயம் இருப்பதால், நீர் சுத்திகரிப்பு நிலையம்...