Cinemaநான் இந்தியன்...சினிமாவில் எதற்காக இந்த பாகுபாடு...கமலின் அசத்தல் பேச்சு

நான் இந்தியன்…சினிமாவில் எதற்காக இந்த பாகுபாடு…கமலின் அசத்தல் பேச்சு

-

நடிகர் கமல்ஹாசன் தற்போது விக்ரம் படத்தில் நடித்து முடித்து முடித்துள்ளார். கைதி, மாஸ்டர் ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இந்த படம் எதிர்வரும் ஜுன் மாதம் 3 ம் தேதி வெளியாக உள்ளது. உலகம் முழுவதும் 5 மொழிகளில் இந்த படம் வெளியிடப்பட உள்ளது. இந்த படத்தில் பார்வையிழந்த முன்னாள் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல் நடித்துள்ள படம் இது. அதனால் ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நடிகர்கள் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா உள்ளிட்ட பல பெரிய நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பல்வேறு நாடுகளில் விக்ரம் படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்த படக்குழு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சமயத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய கமல், “விக்ரம் 3 படம் எடுக்கப்பட்டால் நிச்சயம் அந்த படத்திற்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குனராக இருப்பார். இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதாக சில தகவல்கள் பரவி வருகின்றன. அது உண்மையில்லை. விரைவில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புக்கள் துவங்கப்பட உள்ளது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது.

சினிமாவை வடக்கு, தெற்கு என எதற்காக பிரிக்கிறீர்கள் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சினிமா துறை என்பது ஒன்று தான். நான் இந்தியன். தாஜ்மஹால் என்னுடையது, மதுரை கோயில் உங்களுடையது என என்னால் சொல்ல முடியாது. கன்னியாக்குமரி என்னுடையது, காஷ்மீர் உங்களுடையது என பிரிக்க முடியாது. அப்படி இருக்கையில் சினிமாவை மட்டும் ஏன் பாகுபாடு பார்க்கிறீர்கள். அனைத்தும் அனைவருக்கும் சொந்தம் என்பதை போல் சினிமாவும் அனைவருக்கும் பொதுவானது” என கமல் தெரிவித்துள்ளார்.

Latest news

சமூக ஊடகத் தடைக்கு எதிராக வழக்குத் தொடரத் தயார்!

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடையை எதிர்த்து வழக்குத் தொடர நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தயாராகி வருகிறார். சமூக ஊடகத் தடைக்கு எதிராக உயர் நீதிமன்ற சவாலைத் தொடங்க...

ஆஸ்திரேலியாவின் அரச திருமணம் நவம்பரில் நடக்குமா?

ஆஸ்திரேலியாவின் "அரச திருமணத்திற்கான" கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் அவரது காதலி ஜோடி ஹேடன் ஆகியோர் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்து கொள்வதாக...

குடிபோதையில் வாகனம் ஓட்டிய விக்டோரியா மேயர்

விக்டோரியாவின் Macedon Ranges மேயர் டொமினிக் போனன்னோ, குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 31 ஆம் திகதி மெல்பேர்ணில் உள்ள McGeorge சாலையில் அவர்...

சர்வதேச அளவில் பாராட்டைப் பெறும் ஆஸ்திரேலியாவின் முதல் பழங்குடி ஒப்பந்தம்

விக்டோரியா அரசாங்கத்திற்கும் பழங்குடித் தலைவர்களுக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் பழங்குடி மக்களுடன் சட்டப்பூர்வ ஒப்பந்தத்தில் விக்டோரியா கையெழுத்திட்டுள்ளது. ஐக்கிய...

சர்வதேச அளவில் பாராட்டைப் பெறும் ஆஸ்திரேலியாவின் முதல் பழங்குடி ஒப்பந்தம்

விக்டோரியா அரசாங்கத்திற்கும் பழங்குடித் தலைவர்களுக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் பழங்குடி மக்களுடன் சட்டப்பூர்வ ஒப்பந்தத்தில் விக்டோரியா கையெழுத்திட்டுள்ளது. ஐக்கிய...

விக்டோரியாவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 8 வயது சிறுவன்

விக்டோரியாவின் கீல்லாவில் உள்ள ஒரு Display house-இல் உள்ள குளத்தில் மூழ்கி எட்டு வயது சிறுவன் உயிரிழந்தான். Shepparton அருகே உள்ள GJ Gardiner வீட்டில் உள்ள...