Cinemaநான் இந்தியன்...சினிமாவில் எதற்காக இந்த பாகுபாடு...கமலின் அசத்தல் பேச்சு

நான் இந்தியன்…சினிமாவில் எதற்காக இந்த பாகுபாடு…கமலின் அசத்தல் பேச்சு

-

நடிகர் கமல்ஹாசன் தற்போது விக்ரம் படத்தில் நடித்து முடித்து முடித்துள்ளார். கைதி, மாஸ்டர் ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இந்த படம் எதிர்வரும் ஜுன் மாதம் 3 ம் தேதி வெளியாக உள்ளது. உலகம் முழுவதும் 5 மொழிகளில் இந்த படம் வெளியிடப்பட உள்ளது. இந்த படத்தில் பார்வையிழந்த முன்னாள் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல் நடித்துள்ள படம் இது. அதனால் ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நடிகர்கள் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா உள்ளிட்ட பல பெரிய நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பல்வேறு நாடுகளில் விக்ரம் படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்த படக்குழு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சமயத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய கமல், “விக்ரம் 3 படம் எடுக்கப்பட்டால் நிச்சயம் அந்த படத்திற்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குனராக இருப்பார். இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதாக சில தகவல்கள் பரவி வருகின்றன. அது உண்மையில்லை. விரைவில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புக்கள் துவங்கப்பட உள்ளது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது.

சினிமாவை வடக்கு, தெற்கு என எதற்காக பிரிக்கிறீர்கள் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சினிமா துறை என்பது ஒன்று தான். நான் இந்தியன். தாஜ்மஹால் என்னுடையது, மதுரை கோயில் உங்களுடையது என என்னால் சொல்ல முடியாது. கன்னியாக்குமரி என்னுடையது, காஷ்மீர் உங்களுடையது என பிரிக்க முடியாது. அப்படி இருக்கையில் சினிமாவை மட்டும் ஏன் பாகுபாடு பார்க்கிறீர்கள். அனைத்தும் அனைவருக்கும் சொந்தம் என்பதை போல் சினிமாவும் அனைவருக்கும் பொதுவானது” என கமல் தெரிவித்துள்ளார்.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...