Cinemaபிகில் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இயக்குனர் அட்லி முடிவு

பிகில் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இயக்குனர் அட்லி முடிவு

-

பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து பிகில் படத்தை இயக்கினார் அட்லி. விஜய் ஹீரோவாக நடித்த இந்த படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ராயப்பன் என்ற தாதா கதாபாத்திரத்திலும், மைக்கேல் என்ற கால்பந்தாட்ட வீரர் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இதில் தாதா கதாபாத்திரத்தில் வயதானவர் போன்ற வேடத்தில் விஜய் நடித்திருந்தார்.

பிகில் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாக்கள் எதையும் இயக்காமல், இந்தி படங்களை இயக்க சென்று விட்டார் இயக்குனர் அட்லி. இந்தியில் ஷாருக்கான் நடிக்கும் லயன் என பெயரிடப்பட்ட படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இந்தியில் நயன்தாரா நடிக்கும் முதல் படமாகும், நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் இனி நடிக்க போகும் தளபதி 68 படத்தை இயக்குனர் அட்லி தான் இயக்க போவதாக சமீபத்தில் தகவல் பரவியது. இந்த சமயத்தில், பிகில் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க அட்லி முடிவு செய்திருப்பதாக மற்றொரு தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதில் ராயப்பன் என்ற வயதான கதாபாத்திரத்தை முதன்மை கதாபாத்திரமாக வைத்து இரண்டாம் பாகத்தை இயக்க அட்லி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் விஜய் ரசிகர்கள், சமூக வலைதள பக்கங்களில் பிகில் படம் பற்றிய புகைப்படங்களை அதிகம் பகிர்ந்து, இவர்களில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் யார் என்பது போன்ற பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ராயப்பன் கதாபாத்திரம் பற்றிய தகவல்களையும் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள். இதை பார்த்த இயக்குனர் அட்லி, தனக்கே உரிய பாணியில், செஞ்சுட்டா போச்சு என பதில் பதிவு போட்டுள்ளார். இயக்குனர் அட்லியே இவ்வாறு கூறி விட்டதால் பிகில் இரண்டாம் பாகம் வருவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

Latest news

RMIT நடத்திய சமீபத்திய ஆராய்ச்சியில் இணைந்துள்ள இலங்கை பொறியாளர்

அவுஸ்திரேலியாவின் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் நிறுவனங்களின் சர்வதேச பல்கலைக்கழகம் RMIT நடத்திய சமீபத்திய ஆராய்ச்சியில் இலங்கை பொறியாளர் ஒருவரும் இணைந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட பொறியாளர்கள் குழுவின்...

மீண்டும் ஆழமான விண்வெளியில் இருந்து தரவுகளை பூமிக்கு அனுப்பியுள்ள விண்கலம்

பல மாதங்களாக செயல்படாமல் இருந்த Voyager-1 விண்கலம் மீண்டும் ஆழமான விண்வெளியில் இருந்து படிக்கக்கூடிய தரவுகளை பூமிக்கு அனுப்பியுள்ளது. Voyager-1 ஆய்வு பல மாதங்களாக செயலிழந்த பிறகு...

உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்களில் இடம்பிடித்துள்ள இலங்கைப் பெண்

டைம்ஸ் சஞ்சிகையால் பெயரிடப்பட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த 100 நபர்களில் இலங்கைப் பெண்ணான ரொசன்னா ஃபிளமர் கால்டெராவும் இடம்பெற்றுள்ளார். 20 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் சமற்கிருத சமூகத்திற்காக உரத்த...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு

அவுஸ்திரேலியாவில் சட்டவிரோத ஐஸ் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியா ஐஸ் போதைப்பொருளுக்கு உலகில் அதிக லாபம் ஈட்டும் சந்தையாகக் கருதப்படுவதோடு, பனிக்கட்டிகளுக்கு மேலதிகமாக,...

தடைசெய்யப்பட்ட சிட்னி கேசினோ கிளப்பிற்கு பச்சை விளக்கு

தடை செய்யப்பட்ட கிரவுன் கேசினோ கிளப் மீண்டும் திறக்கப்படுவதற்கு சில சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் சூதாட்ட விடுதியாக...

ஆஸ்திரேலியாவில் குடியேறியவர்களுக்கு வேலை தேடுவதற்கான வழிகாட்டி

அவுஸ்திரேலியாவிற்கு வரும் வெளிநாட்டுக் குடியேற்றவாசிகளுக்கு அந்நாட்டின் வேலைச் சந்தையில் புதிய வேலைவாய்ப்பை விரைவாகக் கண்டறிய தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் பல வேலை வாய்ப்புகள் வெளிப்படையாக விளம்பரப்படுத்தப்படுவதில்லை,...