Cinemaநான் இந்தியன்...சினிமாவில் எதற்காக இந்த பாகுபாடு...கமலின் அசத்தல் பேச்சு

நான் இந்தியன்…சினிமாவில் எதற்காக இந்த பாகுபாடு…கமலின் அசத்தல் பேச்சு

-

நடிகர் கமல்ஹாசன் தற்போது விக்ரம் படத்தில் நடித்து முடித்து முடித்துள்ளார். கைதி, மாஸ்டர் ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இந்த படம் எதிர்வரும் ஜுன் மாதம் 3 ம் தேதி வெளியாக உள்ளது. உலகம் முழுவதும் 5 மொழிகளில் இந்த படம் வெளியிடப்பட உள்ளது. இந்த படத்தில் பார்வையிழந்த முன்னாள் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல் நடித்துள்ள படம் இது. அதனால் ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நடிகர்கள் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா உள்ளிட்ட பல பெரிய நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பல்வேறு நாடுகளில் விக்ரம் படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்த படக்குழு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சமயத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய கமல், “விக்ரம் 3 படம் எடுக்கப்பட்டால் நிச்சயம் அந்த படத்திற்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குனராக இருப்பார். இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதாக சில தகவல்கள் பரவி வருகின்றன. அது உண்மையில்லை. விரைவில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புக்கள் துவங்கப்பட உள்ளது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது.

சினிமாவை வடக்கு, தெற்கு என எதற்காக பிரிக்கிறீர்கள் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சினிமா துறை என்பது ஒன்று தான். நான் இந்தியன். தாஜ்மஹால் என்னுடையது, மதுரை கோயில் உங்களுடையது என என்னால் சொல்ல முடியாது. கன்னியாக்குமரி என்னுடையது, காஷ்மீர் உங்களுடையது என பிரிக்க முடியாது. அப்படி இருக்கையில் சினிமாவை மட்டும் ஏன் பாகுபாடு பார்க்கிறீர்கள். அனைத்தும் அனைவருக்கும் சொந்தம் என்பதை போல் சினிமாவும் அனைவருக்கும் பொதுவானது” என கமல் தெரிவித்துள்ளார்.

Latest news

முக்கிய விமான நிலையங்களில் தளர்த்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

அமெரிக்க விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளின் போது காலணிகளை அகற்ற வேண்டும் என்ற தேவை நீக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத் திருத்தத்தை உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோம்...

அமெரிக்காவில் மனிதாபிமானமின்றி செயல்படும் குடியேற்ற தடுப்பு மையம் 

அமெரிக்காவில் உள்ள ஒரு தற்காலிக தடுப்பு மையத்தில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் மனிதாபிமானமற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜனநாயகக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் புளோரிடாவின்...

சீனாவின் எஃகுத் தொழிலுக்கு உதவ பிரதமர் அல்பானீஸ் பேச்சுவார்த்தை

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் சீனாவிற்கு விஜயம் செய்யும் இரண்டாவது நாள் நேற்று ஆகும். முன்னாள் Socceroos starஉம், சீன கிளப்பான ஷாங்காய் துறைமுகத்தின் தற்போதைய மேலாளருமான அவர்,...

ஊடகங்களில் வெளியான ஒரு ரகசிய அரசாங்க அறிக்கை

வரிகளை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து, நிதியமைச்சர் Jim Chalmers தற்செயலாக பத்திரிகையாளர்களுக்கு ஒரு அறிக்கையை அனுப்பியதாக ஊடக அறிக்கைகள் பரவி வருகின்றன. அதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அரசாங்கம்...

உலக வல்லரசின் மீதான வரி உயர்வுக்குப் பிறகு டிரம்பை சந்திக்க ஆர்வமாக உள்ள ஆஸ்திரேலியா

மெக்ஸிகோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது டிரம்ப் புதிய வரிகளை விதிக்கும்போது, அவருடன் அரசாங்கம் ஈடுபட முயற்சிப்பதாக கருவூல செயலாளர் Jim Chalmers அறிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப்...

ஆசியாவின் வயதான யானை மரணம்

ஆசியாவின் வயதான யானையாகக் கருதப்படும் "வத்சலா" உயிரிழந்துள்ளது. வத்சலா இறக்கும் போது அவருக்கு 100 வயது ஆகும். வத்சலாவின் இறுதிச் சடங்குகள் இந்தியாவின் பன்னா புலிகள் காப்பகத்தில் உள்ள...