Cinemaசிம்புவை துரத்தி துரத்தி காதல் பண்ணும் தொலைக்காட்சி தொடர் நடிகை

சிம்புவை துரத்தி துரத்தி காதல் பண்ணும் தொலைக்காட்சி தொடர் நடிகை

-

பிரபல தமிழ் டிவி தொலைக்காட்சி தொடர் நடிகையான ஸ்ரீநிதி சுதர்சன், விஜய் டிவியில் 7 சி என்ற தொடர் மூலம் அறிமுகமானவர். யாரடி நீ மோகினி, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படம் பற்றி மோசமான விமர்சனத்தை கூறி பரபரப்பை கிளப்பினார். இதனால் கோபமடைந்த நடிகர் அஜித்தின் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் ஸ்ரீநிதியை கண்டபடி திட்டி தீர்த்தனர்.

இதைத் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒருநாள் அனைவருக்கும் திருமணம் ஆகி இருக்கும். அப்போது நானும் சிம்புவும் தான் திருமணம் ஆகாமல் மீதம் இருப்போம் என கருத்து பதிவிட்டிருந்தார். இதை பார்த்த சமூக வலைதள பயன்பாட்டாளர் ஒருவர், நீங்கள் இருவரும் இணைந்து ஏன் திருமணம் செய்து கொள்ள கூடாது என கேட்டார். அதற்கு ஸ்ரீநிதியும், சிம்புவை திருமணம் செய்து கொள்ள தான் தயாராக உள்ளதாக வெளிப்படையாக பதிலளித்தார்.

இதற்கு பிறகு சிலம்பரசன் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறி பரபரப்பை கிளப்பி வந்தார். அதோடு, தனக்கு சிம்பு தான் வேண்டும். அவரை தன்னுடன் சேர்த்து வையுங்கள் என கேட்டு நள்ளிரவு நேரத்தில் சிம்புவின் வீடு முன் அமர்ந்து போராட்டம் நடத்தி உள்ளார். பிறகு அங்கிருந்தவர்கள் ஸ்ரீநிதியிடம் ஒரு வழியாக பேசி, சமாதானம் செய்து, அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதோடு விடாமல் தற்போது, சிம்புவுடன் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்ரீநிதி, தன்னை காதலிக்கும் படி வற்புறுத்தி சிம்பு தொடர்ந்து தன்னை தொல்லை செய்து வருவதாகவும், சிம்பு தனக்கு எழுதிய காதல் கடிதம் என ஒரு கடிதத்தின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதற்கு மேலும் பொறுக்க முடியாது. சிம்பு உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கேட்டு வருகிறார் ஸ்ரீநிதி.

ஆனால் ஸ்ரீநிதி கூறி வரும் இந்த காதல் குற்றச்சாட்டுக்கள் குறித்து நடிகர் சிலம்பரசன் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் எந்த மறுப்போ அல்லது விளக்கமோ இதுவரை தரவில்லை. இதனால் இந்த காதல் விவகாரம் உண்மையாக இருக்குமோ என வதந்திகள் பரவி வருகின்றன.

Latest news

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

தெற்கு பிரேசிலில் குவைபா நகரில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை கடந்த 15ம் திகதி...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...

பில்லியன் கணக்கான இழப்பீடு கோரி BBC மீது டிரம்ப் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் BBC தொலைக்காட்சி மீது பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். ஜனவரி 6, 2021 அன்று தான் ஆற்றிய...

Bondi துப்பாக்கிதாரிகளுடன் சண்டையிட்ட மேலும் இரண்டு ஹீரோக்கள்

Bondi-இல் துப்பாக்கி ஏந்தியவர்கள் என்று கூறப்படுபவர்களுடன் மேலும் இரண்டு போராட்டக்காரர்கள் சண்டையிடும் புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் ஒருவர் காரில் இருந்து இறங்கும்போது அவரைத்...

பெர்த்தில்  நாஜி சின்னத்தை காட்சிப்படுத்திய 18 வயது நபர் மீது குற்றம்

பெர்த்தின் தென்கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் நாஜி சின்னம் அணிந்திருந்ததாகக் கூறப்படும் 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்து குற்றம்...

NSWவில் வாகனம் மோதி இறந்த பெண் – ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சனிக்கிழமை இரவு Maroochydore-இல் வேண்டுமென்றே வாகனத்தை மோதிவிட்டு ஓடியதாகக் கூறப்படும் விபத்தில் நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். Guilherme Dal...