Cinemaசிம்புவை துரத்தி துரத்தி காதல் பண்ணும் தொலைக்காட்சி தொடர் நடிகை

சிம்புவை துரத்தி துரத்தி காதல் பண்ணும் தொலைக்காட்சி தொடர் நடிகை

-

பிரபல தமிழ் டிவி தொலைக்காட்சி தொடர் நடிகையான ஸ்ரீநிதி சுதர்சன், விஜய் டிவியில் 7 சி என்ற தொடர் மூலம் அறிமுகமானவர். யாரடி நீ மோகினி, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படம் பற்றி மோசமான விமர்சனத்தை கூறி பரபரப்பை கிளப்பினார். இதனால் கோபமடைந்த நடிகர் அஜித்தின் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் ஸ்ரீநிதியை கண்டபடி திட்டி தீர்த்தனர்.

இதைத் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒருநாள் அனைவருக்கும் திருமணம் ஆகி இருக்கும். அப்போது நானும் சிம்புவும் தான் திருமணம் ஆகாமல் மீதம் இருப்போம் என கருத்து பதிவிட்டிருந்தார். இதை பார்த்த சமூக வலைதள பயன்பாட்டாளர் ஒருவர், நீங்கள் இருவரும் இணைந்து ஏன் திருமணம் செய்து கொள்ள கூடாது என கேட்டார். அதற்கு ஸ்ரீநிதியும், சிம்புவை திருமணம் செய்து கொள்ள தான் தயாராக உள்ளதாக வெளிப்படையாக பதிலளித்தார்.

இதற்கு பிறகு சிலம்பரசன் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறி பரபரப்பை கிளப்பி வந்தார். அதோடு, தனக்கு சிம்பு தான் வேண்டும். அவரை தன்னுடன் சேர்த்து வையுங்கள் என கேட்டு நள்ளிரவு நேரத்தில் சிம்புவின் வீடு முன் அமர்ந்து போராட்டம் நடத்தி உள்ளார். பிறகு அங்கிருந்தவர்கள் ஸ்ரீநிதியிடம் ஒரு வழியாக பேசி, சமாதானம் செய்து, அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதோடு விடாமல் தற்போது, சிம்புவுடன் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்ரீநிதி, தன்னை காதலிக்கும் படி வற்புறுத்தி சிம்பு தொடர்ந்து தன்னை தொல்லை செய்து வருவதாகவும், சிம்பு தனக்கு எழுதிய காதல் கடிதம் என ஒரு கடிதத்தின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதற்கு மேலும் பொறுக்க முடியாது. சிம்பு உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கேட்டு வருகிறார் ஸ்ரீநிதி.

ஆனால் ஸ்ரீநிதி கூறி வரும் இந்த காதல் குற்றச்சாட்டுக்கள் குறித்து நடிகர் சிலம்பரசன் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் எந்த மறுப்போ அல்லது விளக்கமோ இதுவரை தரவில்லை. இதனால் இந்த காதல் விவகாரம் உண்மையாக இருக்குமோ என வதந்திகள் பரவி வருகின்றன.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...