Cinemaசிம்புவை துரத்தி துரத்தி காதல் பண்ணும் தொலைக்காட்சி தொடர் நடிகை

சிம்புவை துரத்தி துரத்தி காதல் பண்ணும் தொலைக்காட்சி தொடர் நடிகை

-

பிரபல தமிழ் டிவி தொலைக்காட்சி தொடர் நடிகையான ஸ்ரீநிதி சுதர்சன், விஜய் டிவியில் 7 சி என்ற தொடர் மூலம் அறிமுகமானவர். யாரடி நீ மோகினி, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படம் பற்றி மோசமான விமர்சனத்தை கூறி பரபரப்பை கிளப்பினார். இதனால் கோபமடைந்த நடிகர் அஜித்தின் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் ஸ்ரீநிதியை கண்டபடி திட்டி தீர்த்தனர்.

இதைத் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒருநாள் அனைவருக்கும் திருமணம் ஆகி இருக்கும். அப்போது நானும் சிம்புவும் தான் திருமணம் ஆகாமல் மீதம் இருப்போம் என கருத்து பதிவிட்டிருந்தார். இதை பார்த்த சமூக வலைதள பயன்பாட்டாளர் ஒருவர், நீங்கள் இருவரும் இணைந்து ஏன் திருமணம் செய்து கொள்ள கூடாது என கேட்டார். அதற்கு ஸ்ரீநிதியும், சிம்புவை திருமணம் செய்து கொள்ள தான் தயாராக உள்ளதாக வெளிப்படையாக பதிலளித்தார்.

இதற்கு பிறகு சிலம்பரசன் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறி பரபரப்பை கிளப்பி வந்தார். அதோடு, தனக்கு சிம்பு தான் வேண்டும். அவரை தன்னுடன் சேர்த்து வையுங்கள் என கேட்டு நள்ளிரவு நேரத்தில் சிம்புவின் வீடு முன் அமர்ந்து போராட்டம் நடத்தி உள்ளார். பிறகு அங்கிருந்தவர்கள் ஸ்ரீநிதியிடம் ஒரு வழியாக பேசி, சமாதானம் செய்து, அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதோடு விடாமல் தற்போது, சிம்புவுடன் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்ரீநிதி, தன்னை காதலிக்கும் படி வற்புறுத்தி சிம்பு தொடர்ந்து தன்னை தொல்லை செய்து வருவதாகவும், சிம்பு தனக்கு எழுதிய காதல் கடிதம் என ஒரு கடிதத்தின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதற்கு மேலும் பொறுக்க முடியாது. சிம்பு உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கேட்டு வருகிறார் ஸ்ரீநிதி.

ஆனால் ஸ்ரீநிதி கூறி வரும் இந்த காதல் குற்றச்சாட்டுக்கள் குறித்து நடிகர் சிலம்பரசன் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் எந்த மறுப்போ அல்லது விளக்கமோ இதுவரை தரவில்லை. இதனால் இந்த காதல் விவகாரம் உண்மையாக இருக்குமோ என வதந்திகள் பரவி வருகின்றன.

Latest news

ஆஸ்திரேலியாவில் சத்தம் இல்லாமல் யுத்தம் செய்த ஒரு அரசியல் போராளி மறைவு!

தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஆஸ்திரேலியாவில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பணியாற்றி, தமிழர் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தினை அரசு மற்றும் ஆங்கிலேயே உறவுகளுக்கு...

ஆப்கானிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் – ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கம் பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. தாலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சமீபத்திய விரைவான அதிகரிப்பைக்...

போராட்டங்களை கட்டுப்படுத்தும் விக்டோரியா அரசு – முகமூடிகள், சின்னங்கள், கொடிகள் தடை!

போராட்டங்களின் போது வன்முறை நடத்தையை இலக்காகக் கொண்டு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த விக்டோரியன் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, குற்றம் செய்தவர்களிடமிருந்தோ அல்லது போராட்டத்தின் போது குற்றம்...

விக்டோரியாவில் மாறி வரும் சட்டங்கள் – குழந்தைகளுக்கும் கடுமையான தண்டனைகள்

விக்டோரியா மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன், "Adult time for violent crime" என்ற புதிய சட்டங்களை அறிவித்துள்ளார். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கூட கடுமையான தண்டனைகள்...

24 மணி நேர McDonald’s-ஐ எதிர்க்கும் மெல்பேர்ண் கவுன்சில்

மெல்பேர்ண், நார்த்கோட்டில் உள்ள High Street-இல் 24 மணி நேரமும் இயங்கும் புதிய McDonald’s உணவகத்திற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்த நோக்கத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட திட்டமிடல் விண்ணப்பத்திற்கு எதிராக...

மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள டாஸ்மேனிய அரசாங்கம்

குடும்ப உறுப்பினர்களின் அறிவு அல்லது ஒப்புதல் இல்லாமல் பிரேத பரிசோதனைகளுக்குப் பிறகு உடல் பாகங்களை தக்கவைத்துக் கொள்ளும் கடந்த கால நடைமுறைக்கு மன்னிப்பு கோருவதாக டாஸ்மேனிய...