Cinemaசிம்புவை துரத்தி துரத்தி காதல் பண்ணும் தொலைக்காட்சி தொடர் நடிகை

சிம்புவை துரத்தி துரத்தி காதல் பண்ணும் தொலைக்காட்சி தொடர் நடிகை

-

பிரபல தமிழ் டிவி தொலைக்காட்சி தொடர் நடிகையான ஸ்ரீநிதி சுதர்சன், விஜய் டிவியில் 7 சி என்ற தொடர் மூலம் அறிமுகமானவர். யாரடி நீ மோகினி, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படம் பற்றி மோசமான விமர்சனத்தை கூறி பரபரப்பை கிளப்பினார். இதனால் கோபமடைந்த நடிகர் அஜித்தின் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் ஸ்ரீநிதியை கண்டபடி திட்டி தீர்த்தனர்.

இதைத் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒருநாள் அனைவருக்கும் திருமணம் ஆகி இருக்கும். அப்போது நானும் சிம்புவும் தான் திருமணம் ஆகாமல் மீதம் இருப்போம் என கருத்து பதிவிட்டிருந்தார். இதை பார்த்த சமூக வலைதள பயன்பாட்டாளர் ஒருவர், நீங்கள் இருவரும் இணைந்து ஏன் திருமணம் செய்து கொள்ள கூடாது என கேட்டார். அதற்கு ஸ்ரீநிதியும், சிம்புவை திருமணம் செய்து கொள்ள தான் தயாராக உள்ளதாக வெளிப்படையாக பதிலளித்தார்.

இதற்கு பிறகு சிலம்பரசன் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறி பரபரப்பை கிளப்பி வந்தார். அதோடு, தனக்கு சிம்பு தான் வேண்டும். அவரை தன்னுடன் சேர்த்து வையுங்கள் என கேட்டு நள்ளிரவு நேரத்தில் சிம்புவின் வீடு முன் அமர்ந்து போராட்டம் நடத்தி உள்ளார். பிறகு அங்கிருந்தவர்கள் ஸ்ரீநிதியிடம் ஒரு வழியாக பேசி, சமாதானம் செய்து, அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதோடு விடாமல் தற்போது, சிம்புவுடன் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்ரீநிதி, தன்னை காதலிக்கும் படி வற்புறுத்தி சிம்பு தொடர்ந்து தன்னை தொல்லை செய்து வருவதாகவும், சிம்பு தனக்கு எழுதிய காதல் கடிதம் என ஒரு கடிதத்தின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதற்கு மேலும் பொறுக்க முடியாது. சிம்பு உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கேட்டு வருகிறார் ஸ்ரீநிதி.

ஆனால் ஸ்ரீநிதி கூறி வரும் இந்த காதல் குற்றச்சாட்டுக்கள் குறித்து நடிகர் சிலம்பரசன் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் எந்த மறுப்போ அல்லது விளக்கமோ இதுவரை தரவில்லை. இதனால் இந்த காதல் விவகாரம் உண்மையாக இருக்குமோ என வதந்திகள் பரவி வருகின்றன.

Latest news

கிறிஸ்துமஸ் தின வானிலை முன்னறிவிப்பு

இந்த வாரம் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்னதாக கிழக்கு ஆஸ்திரேலியாவில் இடியுடன் கூடிய மழை மற்றும் புயல்கள் பெய்ய வாய்ப்புள்ளது, ஆனால் டிசம்பர் 25 ஆம் திகதி...

$4,500 மதிப்புள்ள புற்றுநோய் மருந்தை $35க்கு வழங்கத் தயாராகும் ஆஸ்திரேலிய அரசாங்கம் 

மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்தான டுகாடினிப்பை, எதிர்காலத்தில் மருந்து நன்மைகள் திட்டத்தில் (PBS) சேர்க்க மத்திய அரசு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இது செயல்படுத்தப்பட்டால்,...

“போராட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன” – NSW பிரதமர் கடுமையான விதிகள்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் ஒரு வார ஆண்டு நிறைவையொட்டி போராட்டங்களைத் திட்டமிடும் எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ்...

Bondi நினைவேந்தல் – கட்டிடங்களின் உச்சியில் துப்பாக்கி சுடும் வீரர்கள்

ஆஸ்திரேலியாவில் Bondi நினைவேந்தல் நிகழ்வை கண்காணிக்க, காவல்துறையினர் துப்பாக்கிகளுடன் கட்டிடங்களின் உச்சியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.  15 உயிர்களை பலி வாங்கிய போண்டி துயர சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம்...

$4,500 மதிப்புள்ள புற்றுநோய் மருந்தை $35க்கு வழங்கத் தயாராகும் ஆஸ்திரேலிய அரசாங்கம் 

மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்தான டுகாடினிப்பை, எதிர்காலத்தில் மருந்து நன்மைகள் திட்டத்தில் (PBS) சேர்க்க மத்திய அரசு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இது செயல்படுத்தப்பட்டால்,...

“போராட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன” – NSW பிரதமர் கடுமையான விதிகள்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் ஒரு வார ஆண்டு நிறைவையொட்டி போராட்டங்களைத் திட்டமிடும் எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ்...