Cinemaசிம்புவை துரத்தி துரத்தி காதல் பண்ணும் தொலைக்காட்சி தொடர் நடிகை

சிம்புவை துரத்தி துரத்தி காதல் பண்ணும் தொலைக்காட்சி தொடர் நடிகை

-

பிரபல தமிழ் டிவி தொலைக்காட்சி தொடர் நடிகையான ஸ்ரீநிதி சுதர்சன், விஜய் டிவியில் 7 சி என்ற தொடர் மூலம் அறிமுகமானவர். யாரடி நீ மோகினி, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படம் பற்றி மோசமான விமர்சனத்தை கூறி பரபரப்பை கிளப்பினார். இதனால் கோபமடைந்த நடிகர் அஜித்தின் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் ஸ்ரீநிதியை கண்டபடி திட்டி தீர்த்தனர்.

இதைத் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒருநாள் அனைவருக்கும் திருமணம் ஆகி இருக்கும். அப்போது நானும் சிம்புவும் தான் திருமணம் ஆகாமல் மீதம் இருப்போம் என கருத்து பதிவிட்டிருந்தார். இதை பார்த்த சமூக வலைதள பயன்பாட்டாளர் ஒருவர், நீங்கள் இருவரும் இணைந்து ஏன் திருமணம் செய்து கொள்ள கூடாது என கேட்டார். அதற்கு ஸ்ரீநிதியும், சிம்புவை திருமணம் செய்து கொள்ள தான் தயாராக உள்ளதாக வெளிப்படையாக பதிலளித்தார்.

இதற்கு பிறகு சிலம்பரசன் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறி பரபரப்பை கிளப்பி வந்தார். அதோடு, தனக்கு சிம்பு தான் வேண்டும். அவரை தன்னுடன் சேர்த்து வையுங்கள் என கேட்டு நள்ளிரவு நேரத்தில் சிம்புவின் வீடு முன் அமர்ந்து போராட்டம் நடத்தி உள்ளார். பிறகு அங்கிருந்தவர்கள் ஸ்ரீநிதியிடம் ஒரு வழியாக பேசி, சமாதானம் செய்து, அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதோடு விடாமல் தற்போது, சிம்புவுடன் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்ரீநிதி, தன்னை காதலிக்கும் படி வற்புறுத்தி சிம்பு தொடர்ந்து தன்னை தொல்லை செய்து வருவதாகவும், சிம்பு தனக்கு எழுதிய காதல் கடிதம் என ஒரு கடிதத்தின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதற்கு மேலும் பொறுக்க முடியாது. சிம்பு உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கேட்டு வருகிறார் ஸ்ரீநிதி.

ஆனால் ஸ்ரீநிதி கூறி வரும் இந்த காதல் குற்றச்சாட்டுக்கள் குறித்து நடிகர் சிலம்பரசன் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் எந்த மறுப்போ அல்லது விளக்கமோ இதுவரை தரவில்லை. இதனால் இந்த காதல் விவகாரம் உண்மையாக இருக்குமோ என வதந்திகள் பரவி வருகின்றன.

Latest news

ஆஸ்திரேலியாவிலிருந்து டிமென்ஷியாவுக்கு புதிய மருந்து

டிமென்ஷியா அறிகுறிகளைப் போக்க ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்ட ஒரு மருந்து, நாடு முழுவதும் பல மாநிலங்களில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. டிமென்ஷியா உள்ளவர்களுக்கு நடத்தை மற்றும் உளவியல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும்....

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார் Elon Musk

உலகின் மிகப் பெரிய பணக்காரரான Elon Musk, தனது வெள்ளை மாளிகைப் பணிகளில் இருந்து விலகுவதாக உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது நிர்வாகத்தின் தொடக்கத்திலிருந்து...

NSW வெள்ளத்திற்குப் பிறகு வாழத் தகுதியற்றதாக மாறிய 1100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய வடக்கு கடற்கரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தொடர்வதால், 1100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் வாழத் தகுதியற்றதாகக் கருதப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான வீடுகளில்...

தன் குழந்தைகளுக்காக குப்பைகளில் உணவு தேடும் பெண் – காஸாவின் பரிதாபம்

காஸாவில் பெண் ஒருவர் தன்னுடைய 5 குழந்தைகளுக்காக குப்பையில் உணவைத் தேடி எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் ஒருவர் மட்டுமல்ல, காஸாவில் பெரும்பாலான மக்கள் பட்டினியில்...

NSW வெள்ளத்திற்குப் பிறகு வாழத் தகுதியற்றதாக மாறிய 1100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய வடக்கு கடற்கரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தொடர்வதால், 1100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் வாழத் தகுதியற்றதாகக் கருதப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான வீடுகளில்...

சிட்னியின் புதிய சுரங்கப்பாதையில் 4 மாதங்களில் பதிவான $6 மில்லியன் அபராதங்கள்

சிட்னியின் Rozelle Interchange-இல் உள்ள புதிய மோட்டார் பாதையின் ஒரு பகுதி, மாநில அரசாங்கத்திற்கு ஒரு இலாபகரமான வருமான ஆதாரமாக மாறியுள்ளது. இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும்,...