Newsஅமெரிக்கா - ரஷ்யா இடையே போர் மூளும் அபாயம் - ஜெர்மனி...

அமெரிக்கா – ரஷ்யா இடையே போர் மூளும் அபாயம் – ஜெர்மனி வழங்கவுள்ள ஆபத்தான ஆயுதம்

-

உக்ரைன் தன்னை தானே தற்காத்துக் கொள்ள உதவும் வகையில் நவீன உந்துகணை கட்டமைப்புக்களை அமெரிக்கா அனுப்பும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

எனினும் அமெரிக்காவின் இந்தத் தீர்மானத்தை விமர்சித்துள்ள ரஷ்யா, இது இரண்டு நாடுகளுக்கு இடையிலான நேரடி மோதலுக்கான அபாயத்தை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது.

நீண்ட தூரத்தில் இருந்து எதிரிப்படையை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர உந்துகணைகளை அமெரிக்காவிடம் உக்ரைன் கோரியிருந்தது.

எனினும் ரஷ்யாவில் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் எனும் அச்சம் காரணமாக அந்தக் கோரிக்கையை அமெரிக்கா நீண்டகாலமாக நிராகரித்துவந்திருந்தது.

இந்த நிலையில் மிகவும் நவீனமான உந்துகணை கட்டமைப்புக்களை உக்ரைனுக்கு வழங்கப் போவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று அறிவித்துள்ளார்.

இதன்மூலம் உக்ரைனின் பேரம் பேசும் திறன் அதிகரிக்கும் என்பதுடன், இராஜதந்திர ரீதியான தீர்வுக்கான வழியை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் இந்த ஆயுத விநியோகம் நேரடியாகவும் திட்டமிட்ட வகையிலும் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் செயற்பாடு என ரஷ்ய அதிபர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இதனிடையே நவீன விமான எதிர்ப்பு ஏவுகணை மற்றும் ராடர் கண்காணிப்பு கட்டமைப்பு ஆகியவற்றை உக்ரைனுக்கு விநியோகிக்க போவதாக ஜேர்மன் சான்ஷிலர் ஓலாப் ஸ்சொட்ஸ் தெரிவித்துள்ளார்.

கனரக ஆயுதங்களை வழங்க வேண்டும் என உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி மற்றும் ஜேர்மனியின் எதிர்கட்சியினர் விடுத்த கோரிக்கையை அடுத்து ஜேர்மன் சான்ஷிலர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

புதிய நவீன ஏவுகணையானது ஏனைய நேட்டோ நாடுகளுடன் இணைந்து ஜேர்மன் தயாரித்த ஒன்றென்பதுடன், புதிய ராடர் கட்டமைப்பு மூலம் எதிரிகளின் எறிகணை கட்டமைப்புக்களை அடையாளம் காண முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Latest news

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...

WhatsApp குழுவிலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறும் புதிய வசதி

WhatsApp செயலி தற்போது உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக உள்ளது. ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக பயன்படுத்தும் ஒரு செயலியாக...

ஜனவரி 1 முதல் மாறும் கொள்முதல் முறைகள்

2026 ஆம் ஆண்டில் மளிகை மற்றும் எரிபொருள் வணிகங்களுக்கு ஆஸ்திரேலியா பண ஆணையை அறிமுகப்படுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் அறிவித்துள்ளார். அத்தியாவசிய கொள்முதல்களுக்கு பணத்தை ஏற்றுக்கொள்வது...

WhatsApp குழுவிலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறும் புதிய வசதி

WhatsApp செயலி தற்போது உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக உள்ளது. ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக பயன்படுத்தும் ஒரு செயலியாக...

ஜனவரி 1 முதல் மாறும் கொள்முதல் முறைகள்

2026 ஆம் ஆண்டில் மளிகை மற்றும் எரிபொருள் வணிகங்களுக்கு ஆஸ்திரேலியா பண ஆணையை அறிமுகப்படுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் அறிவித்துள்ளார். அத்தியாவசிய கொள்முதல்களுக்கு பணத்தை ஏற்றுக்கொள்வது...