Newsஅமெரிக்கா - ரஷ்யா இடையே போர் மூளும் அபாயம் - ஜெர்மனி...

அமெரிக்கா – ரஷ்யா இடையே போர் மூளும் அபாயம் – ஜெர்மனி வழங்கவுள்ள ஆபத்தான ஆயுதம்

-

உக்ரைன் தன்னை தானே தற்காத்துக் கொள்ள உதவும் வகையில் நவீன உந்துகணை கட்டமைப்புக்களை அமெரிக்கா அனுப்பும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

எனினும் அமெரிக்காவின் இந்தத் தீர்மானத்தை விமர்சித்துள்ள ரஷ்யா, இது இரண்டு நாடுகளுக்கு இடையிலான நேரடி மோதலுக்கான அபாயத்தை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது.

நீண்ட தூரத்தில் இருந்து எதிரிப்படையை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர உந்துகணைகளை அமெரிக்காவிடம் உக்ரைன் கோரியிருந்தது.

எனினும் ரஷ்யாவில் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் எனும் அச்சம் காரணமாக அந்தக் கோரிக்கையை அமெரிக்கா நீண்டகாலமாக நிராகரித்துவந்திருந்தது.

இந்த நிலையில் மிகவும் நவீனமான உந்துகணை கட்டமைப்புக்களை உக்ரைனுக்கு வழங்கப் போவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று அறிவித்துள்ளார்.

இதன்மூலம் உக்ரைனின் பேரம் பேசும் திறன் அதிகரிக்கும் என்பதுடன், இராஜதந்திர ரீதியான தீர்வுக்கான வழியை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் இந்த ஆயுத விநியோகம் நேரடியாகவும் திட்டமிட்ட வகையிலும் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் செயற்பாடு என ரஷ்ய அதிபர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இதனிடையே நவீன விமான எதிர்ப்பு ஏவுகணை மற்றும் ராடர் கண்காணிப்பு கட்டமைப்பு ஆகியவற்றை உக்ரைனுக்கு விநியோகிக்க போவதாக ஜேர்மன் சான்ஷிலர் ஓலாப் ஸ்சொட்ஸ் தெரிவித்துள்ளார்.

கனரக ஆயுதங்களை வழங்க வேண்டும் என உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி மற்றும் ஜேர்மனியின் எதிர்கட்சியினர் விடுத்த கோரிக்கையை அடுத்து ஜேர்மன் சான்ஷிலர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

புதிய நவீன ஏவுகணையானது ஏனைய நேட்டோ நாடுகளுடன் இணைந்து ஜேர்மன் தயாரித்த ஒன்றென்பதுடன், புதிய ராடர் கட்டமைப்பு மூலம் எதிரிகளின் எறிகணை கட்டமைப்புக்களை அடையாளம் காண முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Latest news

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பேரிடர் நிவாரணம் வழங்கும் ANZ

விக்டோரியன் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பேரிடர் நிவாரண உதவிகளை வழங்க ANZ தயாராகி வருகிறது. அதன்படி, வீட்டுக் கடன்கள், கிரெடிட் கார்டுகள், தனிநபர் கடன்கள் மற்றும் சில...

அமெரிக்காவை விட ஆஸ்திரேலியாவில் குழந்தைகளை விரும்பாத தம்பதிகளின் விகிதம் அதிகம்

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 2026 ஆம் ஆண்டில் 28 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு குடியேற்றத்தில் குறைவு மற்றும் குறைந்த பிறப்பு விகிதம் இருக்கலாம் என்று...

உடனடியாக திரும்பப் பெறப்படும் Kmart Ice Packs

ஆஸ்திரேலியா முழுவதும் Kmart கடைகளிலும் ஆன்லைனிலும் விற்கப்பட்ட இரண்டு Anko சிறிய மற்றும் பெரிய ஜெல் ஐஸ் பேக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன, ஏனெனில் அவற்றில் நச்சுப்...

தெற்கு ஆஸ்திரேலியாவில் 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள கோகோயின் பறிமுதல்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு $20 மில்லியன் மதிப்புள்ள கோகைனை ரகசியமாக இறக்குமதி செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, அடிலெய்டைச் சேர்ந்த ஒரு பெண் நீதிமன்றத்தில் ஆஜரானார். துப்பறியும் நபர்கள்,...

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி – 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காணாமல் போயுள்ளனர். வியாழக்கிழமை பிற்பகல் செபு நகரின் பினாலிவ் கிராமத்தில் மலை போல்...