Newsஅமெரிக்கா - ரஷ்யா இடையே போர் மூளும் அபாயம் - ஜெர்மனி...

அமெரிக்கா – ரஷ்யா இடையே போர் மூளும் அபாயம் – ஜெர்மனி வழங்கவுள்ள ஆபத்தான ஆயுதம்

-

உக்ரைன் தன்னை தானே தற்காத்துக் கொள்ள உதவும் வகையில் நவீன உந்துகணை கட்டமைப்புக்களை அமெரிக்கா அனுப்பும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

எனினும் அமெரிக்காவின் இந்தத் தீர்மானத்தை விமர்சித்துள்ள ரஷ்யா, இது இரண்டு நாடுகளுக்கு இடையிலான நேரடி மோதலுக்கான அபாயத்தை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது.

நீண்ட தூரத்தில் இருந்து எதிரிப்படையை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர உந்துகணைகளை அமெரிக்காவிடம் உக்ரைன் கோரியிருந்தது.

எனினும் ரஷ்யாவில் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் எனும் அச்சம் காரணமாக அந்தக் கோரிக்கையை அமெரிக்கா நீண்டகாலமாக நிராகரித்துவந்திருந்தது.

இந்த நிலையில் மிகவும் நவீனமான உந்துகணை கட்டமைப்புக்களை உக்ரைனுக்கு வழங்கப் போவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று அறிவித்துள்ளார்.

இதன்மூலம் உக்ரைனின் பேரம் பேசும் திறன் அதிகரிக்கும் என்பதுடன், இராஜதந்திர ரீதியான தீர்வுக்கான வழியை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் இந்த ஆயுத விநியோகம் நேரடியாகவும் திட்டமிட்ட வகையிலும் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் செயற்பாடு என ரஷ்ய அதிபர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இதனிடையே நவீன விமான எதிர்ப்பு ஏவுகணை மற்றும் ராடர் கண்காணிப்பு கட்டமைப்பு ஆகியவற்றை உக்ரைனுக்கு விநியோகிக்க போவதாக ஜேர்மன் சான்ஷிலர் ஓலாப் ஸ்சொட்ஸ் தெரிவித்துள்ளார்.

கனரக ஆயுதங்களை வழங்க வேண்டும் என உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி மற்றும் ஜேர்மனியின் எதிர்கட்சியினர் விடுத்த கோரிக்கையை அடுத்து ஜேர்மன் சான்ஷிலர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

புதிய நவீன ஏவுகணையானது ஏனைய நேட்டோ நாடுகளுடன் இணைந்து ஜேர்மன் தயாரித்த ஒன்றென்பதுடன், புதிய ராடர் கட்டமைப்பு மூலம் எதிரிகளின் எறிகணை கட்டமைப்புக்களை அடையாளம் காண முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Latest news

Memory chip-களின் விலையை 60% வரை அதிகரித்த Samsung நிறுவனம்

Samsung நிறுவனம் நினைவக சிப்களின் (Memory chip) விலையை 60% வரை உயர்த்தியுள்ளது. AIயின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) data சென்டர்கள்...

ACT-ல் பகுதியளவு மூடப்படும் பத்து பள்ளிகள்

அஸ்பெஸ்டாஸ் இருக்கக்கூடிய வண்ண மணலை சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், வெள்ளிக்கிழமை ACT-யில் குறைந்தது பத்து பள்ளிகள் பகுதியளவு மூடப்படும். ஒரு கட்டத்தில், ஆஸ்திரேலிய...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...