Newsதுடிதுடிக்க உயிரைக் கொல்லும் கொடூர விஷத்தை பயன்படுத்திய ரஷ்யா? அதிர்ச்சி தகவல்

துடிதுடிக்க உயிரைக் கொல்லும் கொடூர விஷத்தை பயன்படுத்திய ரஷ்யா? அதிர்ச்சி தகவல்

-

துடிதுடிக்க உயிரைக் கொல்லும் உலகின் மிக கொடூரமான விஷம் குறித்து இரசாயன நிபுணர் டாக்டர் நீல் பிராட்பரி திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். தனது வாழ்க்கையில் தான் ஆராய்ச்சி செய்ததில், மிகவும் பயங்கரமான துடிதுடிக்க உயிரைக் கொல்லும் விஷங்களில் ஒன்று ‘ஸ்டிரைக்கின்’ (Strychnine) என்று அவர் விவரித்தார். இப்படிப்பட்ட கொடூரமான் விஷத்தை ரஷ்யா பயன்படுத்த்தியதாகக் கூறப்படுகிறது.

உலகின் மிக ஆபத்தான கொடிய விஷமான இது உடலில் புகுந்தால், லும்பிலிருந்து சதையை பிய்த்து எடுக்கும். அப்போது விஷம் எடுத்துக் கொண்ட நபர் நீண்ட நெடு நேரம் வலியினால் துடிதுடித்து இறந்து போவார். இந்த விஷத்திற்கு ஸ்ட்ரைக்னைன் என்று பெயரிடப்பட்டுள்ளது. தூள் வடிவில் காணப்படும் இந்த விஷத்தை ரஷ்யா தனது எதிரிகளுக்கு பயன்படுத்துவதாக கூறப்படுகிறது

ரஷ்யா குறித்த தகவல்களை அம்பலப்படுத்திய அலெக்சாண்டர் பெரெபிலிச்னி, லண்டனில் ஸ்டிரைக்னைன் போன்ற இரசாயனப் பொருளால் இறந்து கிடந்தார் என்று ‘டெய்லி ஸ்டார்’ செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், இதற்காக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஸ்டிரைக்னைன் உட்கொண்டதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. மனித உடலில் அதன் பயங்கரமான விளைவு காரணமாக, இந்த தீவிர இரசாயனம் இங்கிலாந்தில் கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

விஷம் நிபுணர் டாக்டர் நீல் பிராட்பரி இது குறித்து கூறுகையில், ஒரு மோசமான விஷயம் என்னவென்றால், இது மிகவும் மெதுவாக செயல்படும் விஷம் இறக்க பல மணிநேரம் ஆகும். இது மிகவும் கொடுமையானது.

உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு தசையும் ஒரே நேரத்தில் சுருங் கினால் எப்படி இருக்கும் . நினைத்து பார்க்கவே கொடூரமாக இருக்கிறது இல்லையா… உண்மையில் எலும்புகளிலிருந்து சதைகளை பிரிந்து செல்லும். உயிர் வேதியியல் மற்றும் மருத்துவ உயிர் வேதியியலில் பட்டம் பெற்ற டாக்டர் பிராட்பரி, இந்த விஷத்தை பற்றி ‘A Test for Poison: Eleven Deadly Substance and the Killer Who Used Them’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

மனித உடலில் ஸ்ட்ரைக்னைனின் பயங்கரமான விளைவுகள் இருந்தபோதிலும், இது கடந்த காலத்தில் செயல்திறனை மேம்படுத்தும் மருந்தாகப் இது பயன்படுத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

Latest news

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசிய கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில்...

மாணவர்களுக்கான பிரபலமான சிகை அலங்காரங்களுக்கு தடை விதித்துள்ள பள்ளி

குயின்ஸ்லாந்தில் உள்ள ஆண்கள் கல்லூரியான St Edmund’s கல்லூரி விதித்த புதிய சிகை அலங்கார விதிகள், பெற்றோர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. விடுமுறை முடிந்து பள்ளி பருவம்...

நியூசிலாந்து சுற்றுலாப் பகுதியில் நிலச்சரிவு – ஒரு சிறுமி உட்பட ஒரு குழுவைக் காணவில்லை

நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமான Mount Maunganui பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலச்சரிவும், கடந்த...

சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில் Triple Zero சேவை நெருக்கடியில்

விக்டோரியாவின் அவசரகால மீட்பு மற்றும் செயல்பாட்டு சேவையான ‘Triple Zero Victoria’ (TZV), முக்கிய ஆம்புலன்ஸ் அனுப்பும் இலக்குகளை அடையத் தவறிவிட்டது. சமீபத்திய அறிக்கைகளின்படி, மிகவும் அவசரமான...

நியூசிலாந்து சுற்றுலாப் பகுதியில் நிலச்சரிவு – ஒரு சிறுமி உட்பட ஒரு குழுவைக் காணவில்லை

நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமான Mount Maunganui பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலச்சரிவும், கடந்த...

சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில் Triple Zero சேவை நெருக்கடியில்

விக்டோரியாவின் அவசரகால மீட்பு மற்றும் செயல்பாட்டு சேவையான ‘Triple Zero Victoria’ (TZV), முக்கிய ஆம்புலன்ஸ் அனுப்பும் இலக்குகளை அடையத் தவறிவிட்டது. சமீபத்திய அறிக்கைகளின்படி, மிகவும் அவசரமான...