Newsதுடிதுடிக்க உயிரைக் கொல்லும் கொடூர விஷத்தை பயன்படுத்திய ரஷ்யா? அதிர்ச்சி தகவல்

துடிதுடிக்க உயிரைக் கொல்லும் கொடூர விஷத்தை பயன்படுத்திய ரஷ்யா? அதிர்ச்சி தகவல்

-

துடிதுடிக்க உயிரைக் கொல்லும் உலகின் மிக கொடூரமான விஷம் குறித்து இரசாயன நிபுணர் டாக்டர் நீல் பிராட்பரி திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். தனது வாழ்க்கையில் தான் ஆராய்ச்சி செய்ததில், மிகவும் பயங்கரமான துடிதுடிக்க உயிரைக் கொல்லும் விஷங்களில் ஒன்று ‘ஸ்டிரைக்கின்’ (Strychnine) என்று அவர் விவரித்தார். இப்படிப்பட்ட கொடூரமான் விஷத்தை ரஷ்யா பயன்படுத்த்தியதாகக் கூறப்படுகிறது.

உலகின் மிக ஆபத்தான கொடிய விஷமான இது உடலில் புகுந்தால், லும்பிலிருந்து சதையை பிய்த்து எடுக்கும். அப்போது விஷம் எடுத்துக் கொண்ட நபர் நீண்ட நெடு நேரம் வலியினால் துடிதுடித்து இறந்து போவார். இந்த விஷத்திற்கு ஸ்ட்ரைக்னைன் என்று பெயரிடப்பட்டுள்ளது. தூள் வடிவில் காணப்படும் இந்த விஷத்தை ரஷ்யா தனது எதிரிகளுக்கு பயன்படுத்துவதாக கூறப்படுகிறது

ரஷ்யா குறித்த தகவல்களை அம்பலப்படுத்திய அலெக்சாண்டர் பெரெபிலிச்னி, லண்டனில் ஸ்டிரைக்னைன் போன்ற இரசாயனப் பொருளால் இறந்து கிடந்தார் என்று ‘டெய்லி ஸ்டார்’ செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், இதற்காக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஸ்டிரைக்னைன் உட்கொண்டதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. மனித உடலில் அதன் பயங்கரமான விளைவு காரணமாக, இந்த தீவிர இரசாயனம் இங்கிலாந்தில் கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

விஷம் நிபுணர் டாக்டர் நீல் பிராட்பரி இது குறித்து கூறுகையில், ஒரு மோசமான விஷயம் என்னவென்றால், இது மிகவும் மெதுவாக செயல்படும் விஷம் இறக்க பல மணிநேரம் ஆகும். இது மிகவும் கொடுமையானது.

உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு தசையும் ஒரே நேரத்தில் சுருங் கினால் எப்படி இருக்கும் . நினைத்து பார்க்கவே கொடூரமாக இருக்கிறது இல்லையா… உண்மையில் எலும்புகளிலிருந்து சதைகளை பிரிந்து செல்லும். உயிர் வேதியியல் மற்றும் மருத்துவ உயிர் வேதியியலில் பட்டம் பெற்ற டாக்டர் பிராட்பரி, இந்த விஷத்தை பற்றி ‘A Test for Poison: Eleven Deadly Substance and the Killer Who Used Them’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

மனித உடலில் ஸ்ட்ரைக்னைனின் பயங்கரமான விளைவுகள் இருந்தபோதிலும், இது கடந்த காலத்தில் செயல்திறனை மேம்படுத்தும் மருந்தாகப் இது பயன்படுத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் வாகன உரிமையாளர்கள் இரண்டு முறை வரி செலுத்த வேண்டுமா?

வரும் நாட்களில் விதிக்க திட்டமிடப்பட்டுள்ள சாலை பயனர் வரி, மின்சார வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் கூறியுள்ளார். அதன்படி, பெட்ரோல் வாகன பயனர்களுக்கு...

விக்டோரிய மக்களுக்கு $4 மில்லியன் மதிப்புள்ள இலவச பயிற்சி வகுப்புகள்

விக்டோரியன் அரசு, ஊழியர்களுக்கும் வணிகங்களுக்கும் தேவையான டிஜிட்டல் திறன்களை வழங்குவதற்காக ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதன்படி, $4.2 மில்லியன் டிஜிட்டல் வேலைகள் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இப்போது...

விக்டோரியாவில் 1000 புதிய வேலை வாய்ப்புகள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று கிறிஸ்துமஸுக்கு முன்பு 3,500 க்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்த தயாராகி வருகிறது. Australia Post தனது பணியாளர்களை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் இந்த...

LGBTQ சமூகத்தை ஆதரிக்க விக்டோரியன் அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கை

வன்முறை மற்றும் துன்புறுத்தலை அனுபவிக்கும் விக்டோரியன் LGBTQ சமூகங்களை ஆதரிப்பதற்காக விக்டோரியன் அரசாங்கம் ஒரு புதிய ஆதரவு சேவையைத் தொடங்கியுள்ளது. இந்தப் புதிய சேவை 'Switchboard Victoria'...

சர்க்கரை இல்லாமல் காபி குடித்தால் உடலுக்கு நல்லதா?

Caffeine கலந்த காபி குடிப்பதால் ஆயுட்காலம் அதிகரிப்பதாகவும், இதய நோயால் ஏற்படும் இறப்பு அபாயத்தைக் குறைப்பதாகவும் புதிய ஆய்வு ஒன்று தெரியவந்துள்ளது. Tufts பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதைக்...

ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்ட இரு தொல்பொருள் பொருட்கள்

உக்ரைனில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்ட இரண்டு தொல்பொருள் பொருட்கள் உக்ரைனுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. உக்ரைனின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் சிட்னியில் நடந்த விழாவில்...