Newsகனடாவை மர்ம வைரஸ்: 2 மில்லியன் பறவைகள் கருணைக்கொலை!

கனடாவை மர்ம வைரஸ்: 2 மில்லியன் பறவைகள் கருணைக்கொலை!

-

கனடாவின் கியூபெக் மாகாணத்தில், பறவைகளைத் தாக்கும் இன்ப்ளூயென்சா வைரஸால் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனடா முழுவதிலும் இரண்டு மில்லியன் பறவைகள் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளன. கியூபெக் மாகாணத்தின் ஒரு பகுதியான Magdalen Islands என்னும் தீவில், ஏராளம் உயிரிழந்த பறவைகள் கரையோரமாக ஒதுங்கிக் கிடக்கின்றன.

அதற்குக் காரணம் H5N1 என்னும் பறவைகளைத் தாக்கும் இன்ப்ளூயென்சா வைரஸ் தொற்று.

இந்த H5N1 என்னும் பறவைகளைத் தாக்கும் இன்ப்ளூயென்சா வைரஸ் தொற்று, ஐரோப்பாவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த பறவைகள் மூலம் வட அமெரிக்காவுக்குள் நுழைந்திருக்கலாம் என்கிறார் கால்நடை மருத்துவ நிபுணரான பேராசிரியர் Stéphane Lair.

புதிதாக ஒரு வைரஸ் ஓரிடத்தில் நுழையும்போது, அங்கிருக்கும் கால்நடைகளுக்கு அந்த வைரஸுக்கெதிரான நோயெதிர்ப்பு சக்தி இருக்காது. ஆகவே, அந்த வைரஸ் மிக பயங்கரமாக பரவும் என்கிறார் அவர்.

ஆக, காட்டிலிருக்கும் பறவைகளைத் தொற்றும் அந்த வைரஸ், அந்தப் பறவைகள் மூலம் நாட்டுக்குள்ளிருக்கும் பறவைகளுக்குப் பரவும்.

அவை பரவுவதைத் தடுக்க ஒரே வழி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பறவைகளைக் கொல்வதுதான்.

ஆகவேதான், கனடா முழுவதிலும், பண்ணைகளில் வளர்க்கப்படும் சுமார் இரண்டு மில்லியன் பறவைகள் கொல்லப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

உலக சுகாதார நிறுவனம் கொடிய நிபா வைரஸ் குறித்து எச்சரிக்கை

இந்தியாவில் கொடிய நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளின் அறிக்கை குறித்து உலக சுகாதார நிறுவனம் கவனத்தை ஈர்த்துள்ளது. மேற்கு வங்காளத்தின் Barasat-இல் உள்ள ஒரு தனியார்...

உலகெங்கிலும் உள்ள பல இடங்களுக்கு Qantas சிறப்பு கட்டணங்கள்

Qantas Airlines இந்த ஆண்டின் மிகப்பெரிய சர்வதேச விமான விளம்பரத்தைத் தொடங்கியுள்ளது. இதன் கீழ், உலகெங்கிலும் உள்ள பல பிரபலமான இடங்களுக்கு சிறப்பு விலைச் சலுகைகள் கிடைக்கின்றன. நேற்று...

அர்ஜென்டினாவில் குழந்தைகளை தத்தெடுக்கத் திட்டமிடும் ஆஸ்திரேலியர்களுக்கு அரசு ஆலோசனை

அர்ஜென்டினாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை எதிர்பார்க்கும் ஆஸ்திரேலிய பெற்றோருக்கு அரசாங்கம் ஒரு சிறப்பு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. இது நாட்டில் உள்ள சட்ட நிலைமை மற்றும்...

பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை விற்க அரசு முடிவு

அல்பேனிய அரசாங்கம் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 இடங்களை விற்க முடிவு செய்துள்ளது . இதன் மூலம் 1.8 முதல் 3 பில்லியன் டாலர்கள் வரை பெறலாம்...

பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை விற்க அரசு முடிவு

அல்பேனிய அரசாங்கம் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 இடங்களை விற்க முடிவு செய்துள்ளது . இதன் மூலம் 1.8 முதல் 3 பில்லியன் டாலர்கள் வரை பெறலாம்...

மெல்பேர்ணில் 17 வயது சிறுவன் ஒருவன் வாளால் தாக்கப்பட்டு படுகாயம்

மெல்பேர்ண் , செயிண்ட் கில்டாவில் நடந்த ஒரு சம்பவத்தில், 17 வயது சிறுவன் ஒருவன் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு, வாகனம் ஒன்றினால் மோதி படுகாயமடைந்தான் . இந்த...