Newsஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றச் சந்திப்பில் வெளிநடப்புச் செய்த ரஷ்யத் தூதுவர்!

ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றச் சந்திப்பில் வெளிநடப்புச் செய்த ரஷ்யத் தூதுவர்!

-

ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றச் சந்திப்பின்போது, ரஷ்யத் தூதுவர்வசிலி நெபென்ஸியா (Vassily Nebenzia) வெளிநடப்புச் செய்திருக்கிறார்.

ரஷ்யா, உக்ரேன்மீது படையெடுத்ததால் உலக அளவில் உணவு நெருக்கடி உருவாகியிருப்பதாக, ஐரோப்பிய ஒன்றியம் குற்றஞ்சாட்டியிருந்தது.

ஒன்றியத் தலைவர் சார்ல்ஸ் மிஷெல் (Charles Michel), திரு. நெபென்ஸியாவை நேரடியாகச் சாடியதைத் தொடர்ந்து அந்தச் சம்பவம் நேர்ந்தது.

மக்களை ஏழ்மைக்கு இட்டுச்செல்வதற்கு ரஷ்யாவே முழுப் பொறுப்பு என்று அவர் குறைகூறினார். வளர்ந்துவரும் நாடுகளுக்கு எதிராக ரஷ்ய அரசாங்கம் உணவு விநியோகத்தைப் பகடைக் காயைப் போல் பயன்படுத்துவதாகத் திரு. மிஷெல் குறிப்பிட்டார்.

தானியக் கிடங்குகளைக் குறிவைத்து, உக்ரேனிடமிருந்து தானியங்களைத் திருடுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

ரஷ்யா மற்றவர்கள் மீது பழி சுமத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அறையைவிட்டு வெளியேறலாம் என்றும் உண்மையைக் கேட்பது எளிதாக இருக்காது என்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர், ரஷ்யத் தூதரிடம் நேரடியாக தெரிவித்துள்ளார்.

Latest news

கொலம்பியாவில் விமானம் விபத்து – 15 பேர் பலி

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சம்பளம் மற்றும் சொத்து தீர்வுகளை தாமதப்படுத்தும் RBA

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10...

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

பெர்த் பேரணியில் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனம்

பெர்த்தில் நடந்த "Invasion Day" பேரணியில் விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலுக்கு காவல்துறையினர் பதிலளித்த விதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டப் பேரணியில்...