Newsஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றச் சந்திப்பில் வெளிநடப்புச் செய்த ரஷ்யத் தூதுவர்!

ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றச் சந்திப்பில் வெளிநடப்புச் செய்த ரஷ்யத் தூதுவர்!

-

ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றச் சந்திப்பின்போது, ரஷ்யத் தூதுவர்வசிலி நெபென்ஸியா (Vassily Nebenzia) வெளிநடப்புச் செய்திருக்கிறார்.

ரஷ்யா, உக்ரேன்மீது படையெடுத்ததால் உலக அளவில் உணவு நெருக்கடி உருவாகியிருப்பதாக, ஐரோப்பிய ஒன்றியம் குற்றஞ்சாட்டியிருந்தது.

ஒன்றியத் தலைவர் சார்ல்ஸ் மிஷெல் (Charles Michel), திரு. நெபென்ஸியாவை நேரடியாகச் சாடியதைத் தொடர்ந்து அந்தச் சம்பவம் நேர்ந்தது.

மக்களை ஏழ்மைக்கு இட்டுச்செல்வதற்கு ரஷ்யாவே முழுப் பொறுப்பு என்று அவர் குறைகூறினார். வளர்ந்துவரும் நாடுகளுக்கு எதிராக ரஷ்ய அரசாங்கம் உணவு விநியோகத்தைப் பகடைக் காயைப் போல் பயன்படுத்துவதாகத் திரு. மிஷெல் குறிப்பிட்டார்.

தானியக் கிடங்குகளைக் குறிவைத்து, உக்ரேனிடமிருந்து தானியங்களைத் திருடுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

ரஷ்யா மற்றவர்கள் மீது பழி சுமத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அறையைவிட்டு வெளியேறலாம் என்றும் உண்மையைக் கேட்பது எளிதாக இருக்காது என்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர், ரஷ்யத் தூதரிடம் நேரடியாக தெரிவித்துள்ளார்.

Latest news

தேர்தல் செலவு வரம்பை எதிர்த்து ஆஸ்திரேலிய கோடீஸ்வரர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஆஸ்திரேலியாவில் அரசியல் கட்சிகளுக்கு நிதி நன்கொடைகளை வரம்பிடுவதற்கான அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர கோடீஸ்வர தொழிலதிபர் கிளைவ் பால்மர் தயாராகி வருகிறார். இந்தப்...

நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாறுமா?

நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாற வேண்டுமா என்பது குறித்த நீண்டகால விவாதம் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொண்டு நியூசிலாந்தின் பாதுகாப்பை...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...

உலகில் புற்றுநோய் குறித்த புதிய WHO அறிக்கை

உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் புற்றுநோய் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. 10 புற்றுநோய் நோயாளிகளில் 4 பேருக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்...

கார் விபத்தில் பெரிய அளவிலான துப்பாக்கி கடத்தல் அம்பலம்

சிட்னியின் மத்திய கடற்கரையில் நடந்த ஒரு கார் விபத்தைத் தொடர்ந்து, பெரிய அளவிலான போதைப்பொருள் மற்றும் துப்பாக்கி கடத்தல் நடவடிக்கையை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். விபத்துக்குப் பிறகு சந்தேகத்திற்கிடமான...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...