News ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றச் சந்திப்பில் வெளிநடப்புச் செய்த ரஷ்யத் தூதுவர்!

ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றச் சந்திப்பில் வெளிநடப்புச் செய்த ரஷ்யத் தூதுவர்!

-

ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றச் சந்திப்பின்போது, ரஷ்யத் தூதுவர்வசிலி நெபென்ஸியா (Vassily Nebenzia) வெளிநடப்புச் செய்திருக்கிறார்.

ரஷ்யா, உக்ரேன்மீது படையெடுத்ததால் உலக அளவில் உணவு நெருக்கடி உருவாகியிருப்பதாக, ஐரோப்பிய ஒன்றியம் குற்றஞ்சாட்டியிருந்தது.

ஒன்றியத் தலைவர் சார்ல்ஸ் மிஷெல் (Charles Michel), திரு. நெபென்ஸியாவை நேரடியாகச் சாடியதைத் தொடர்ந்து அந்தச் சம்பவம் நேர்ந்தது.

மக்களை ஏழ்மைக்கு இட்டுச்செல்வதற்கு ரஷ்யாவே முழுப் பொறுப்பு என்று அவர் குறைகூறினார். வளர்ந்துவரும் நாடுகளுக்கு எதிராக ரஷ்ய அரசாங்கம் உணவு விநியோகத்தைப் பகடைக் காயைப் போல் பயன்படுத்துவதாகத் திரு. மிஷெல் குறிப்பிட்டார்.

தானியக் கிடங்குகளைக் குறிவைத்து, உக்ரேனிடமிருந்து தானியங்களைத் திருடுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

ரஷ்யா மற்றவர்கள் மீது பழி சுமத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அறையைவிட்டு வெளியேறலாம் என்றும் உண்மையைக் கேட்பது எளிதாக இருக்காது என்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர், ரஷ்யத் தூதரிடம் நேரடியாக தெரிவித்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s உணவகங்களில் கவுண்டர்களுக்கு முன்னால் ஒரு பிளாஸ்டிக் கவர்

அவுஸ்திரேலியாவில், துரித உணவு உணவக சங்கிலி அதன் உணவகங்களின் கவுன்டர்களுக்கு முன்னால் பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து சேவைகளில் பெரிய மாற்றம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகளுக்கான கட்டண முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்,...

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.