Newsஇலங்கையின் நிலைமை மோசமடையும் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையின் நிலைமை மோசமடையும் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

-

கடும் உணவு தட்டுப்பாடு மற்றும் அதிகரித்துச்செல்லும் விலையேற்றம் காரணமாக எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் உணவு பாதுகாப்பு மேலும் மோசமடையும் என உலக உணவுத் திட்டமும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனமும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

வருமானம் குறைந்துள்ளமை மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் என்பன போதிய அளவு உணவு உட்கொள்வதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இன்றைய உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகின் பட்டினி அபாய நாடுகள் மற்றும் அடுத்த மூன்று மாதங்களில் மிக மோசமான உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் நாடுகள் என இந்த அறிக்கை பெயரிடப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் உணவுப் பொருட்களுக்கான செலவுகள், எண்ணெய் மற்றும் இறக்குமதிப் பொருட்களின் விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளமை, நாணய மாற்று விகிதத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பனவற்றினால் 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் பணவீக்கம் மேலும் அதிகரித்துச்செல்லுமென அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜூன் மற்றும் செப்டம்பர் காலப்பகுதிக்குள் இலங்கையின் உணவுக்கான பற்றாக்குறை ஏற்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டிற்கு அதிக வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் பெரும்போகத்தில் எதிர்பார்க்கப்பட்ட அறுவடையானது, சாதாரண எதிர்பார்ப்பை விடவும் குறைந்துள்ளது. 2021 ஏப்ரல் மற்றும் நவம்பர் மாத காலப்பகுதிகளுக்குள் இரசாயன பசளை மற்றும் களை நாசினிகளுக்கு தடை விதிக்கப்பட்டமையே இதற்கான பிரதான காரணம் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலக உணவுத் திட்டமும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு என்பனவும் இலங்கையின் உணவு பாதுகாப்பு நெருக்கடியைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளன.

Latest news

இந்தோனேசியாவுடன் ஒரு முக்கியமான ஒப்பந்தத்திற்கு தயாராகும் பிரதமர் அல்பானீஸ்

இந்தோனேசியாவுடன் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தயாராகி வருகிறார். நேற்று இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிற்கு விஜயம் செய்த பிரதமரை, அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோ...

பாகிஸ்தானில் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தின் ஷேசாத் நகர் பகுதியிலுள்ள ஷியா பள்ளிவாசலில் நேற்று (06) வெடிகுண்டு வெடித்ததில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பள்ளிவாசலில் நேற்று தொழுகை நடந்துகொண்டிருந்தபோது, உடலில்...

“அடுத்த சில மாதங்கள் அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமான நேரம்” – அரசியல் ஆய்வாளர்கள்

அடுத்த சில மாதங்கள் ஆஸ்திரேலிய பொருளாளர் ஜிம் சால்மர்ஸுக்கு ஒரு முக்கியமான நேரமாக இருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பொருளாதார சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் அவரது திறமையும்,...

ஆஸ்திரேலியாவில் ஒரு சக்திவாய்ந்த பாதாள உலகத் தலைவர் விடுவிக்கப்பட்டார்

ஆஸ்திரேலியாவில் பிரபல பாதாள உலக நபரான Tony Mokbel, தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று மெல்பேர்ண் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானபோது, ​​அவருக்கு...

மின்-பைக்குகள் குறித்து சுகாதார அமைச்சரிடமிருந்து ஒரு வலுவான அறிக்கை

ஆஸ்திரேலியாவின் வளர்ந்து வரும் மின்-பைக் நெருக்கடி சாலைகளில் பெரும் ஆபத்தாக மாறி வருவதாக ஆஸ்திரேலிய சுகாதார அமைச்சர் Mark Butler கூறியுள்ளார். மின்-பைக்குகளால் ஏற்படும் சாலை விபத்துகள்...

தடைகள் இருந்தாலும் நம்பிக்கையுடன் உலகக் கோப்பையை எதிர்கொள்வேன் – ஆஸ்திரேலிய கேப்டன்

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் T20 உலகக் கோப்பைக்கு முந்தைய இறுதிப் பயிற்சி சர்வதேசப் போட்டியையும் மழை காரணமாக அந்த அணி கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் கொழும்பில்...