Newsரஷ்யா உக்ரேனிடமிருந்து தானியங்களைத் திருடி விற்றுவருவதனை உறுதி செய்த அமெரிக்கா

ரஷ்யா உக்ரேனிடமிருந்து தானியங்களைத் திருடி விற்றுவருவதனை உறுதி செய்த அமெரிக்கா

-

ரஷ்யா உக்ரேனிடமிருந்து தானியங்களைத் திருடி தனது சொந்த லாபத்துக்காக விற்றுவருவதாகக் கூறும் அறிக்கைகளில் உண்மை இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ரஷ்யா ஏற்கனவே உக்ரேனின் சோள ஏற்றுமதிக்குத் தடைவிதித்துள்ளது. உலகில் உணவுப் பாதுகாப்பு குறித்த அக்கறைகள் அதிகரித்துவரும் நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

அறிக்கைகள் நம்பகமானவை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. கருங்கடலில் இடம்பெறும் வணிகத்துக்கு இடையூறான செயல்களில் ஈடுபடுவது ஒருவகை மிரட்டல் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் வருணித்துள்ளார்.

உக்ரேன்-ரஷ்யப் போர் உலகின் உணவுப் பாதுகாப்பில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்களிலிருந்து வெளியேறும் சரக்குக் கப்பல்களில் திருட்டு தானியங்கள் இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டது.

அறிக்கைகளின் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் முயற்சியாக அமெரிக்கா 14 நாடுகளிடம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்பட்டது.

கிரெம்ளின் உக்ரேனில் விளைந்த 20 மில்லியன் டன் தானியங்களைத் தடுத்துவைத்திருப்பதாகத் பிளிங்கன் கூறினார்.

Latest news

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

விக்டோரியாவில் ஆரம்பமானது Ski சீசன்

விக்டோரியாவின் Ski சீசன் இந்த வார இறுதியில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. விக்டோரியாவின் Alpine பகுதியில் உள்ள விருப்பமான ski lodgesல் ஒன்றில் தங்கி இந்த அனுபவத்தை அனுபவிக்க,...

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் தன்னார்வல வாகனங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு நூற்றுக்கணக்கான வைக்கோல் மூட்டைகள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு, மாநிலத்தின் வடக்கு-மத்திய பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை இல்லாத...

நாய் தாக்குதல்களைத் தடுக்க ஆஸ்திரேலிய அஞ்சல் ஊழியர்களுக்கு கிடைத்துள்ள புதிய சாதனம்

ஆஸ்திரேலியாவில் தபால் ஊழியர்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், பணியில் இருக்கும்போது நாய் தாக்குதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தபால் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக citronella மற்றும்...

கருப்பை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஒரு முறையை உருவாக்கிய மெல்பேர்ண் ஆய்வகம்

கருப்பை புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் உலகின் முதல் இரத்தப் பரிசோதனை மெல்பேர்ணில் உள்ள ஒரு ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் American Society of Clinical...