Newsரஷ்யா உக்ரேனிடமிருந்து தானியங்களைத் திருடி விற்றுவருவதனை உறுதி செய்த அமெரிக்கா

ரஷ்யா உக்ரேனிடமிருந்து தானியங்களைத் திருடி விற்றுவருவதனை உறுதி செய்த அமெரிக்கா

-

ரஷ்யா உக்ரேனிடமிருந்து தானியங்களைத் திருடி தனது சொந்த லாபத்துக்காக விற்றுவருவதாகக் கூறும் அறிக்கைகளில் உண்மை இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ரஷ்யா ஏற்கனவே உக்ரேனின் சோள ஏற்றுமதிக்குத் தடைவிதித்துள்ளது. உலகில் உணவுப் பாதுகாப்பு குறித்த அக்கறைகள் அதிகரித்துவரும் நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

அறிக்கைகள் நம்பகமானவை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. கருங்கடலில் இடம்பெறும் வணிகத்துக்கு இடையூறான செயல்களில் ஈடுபடுவது ஒருவகை மிரட்டல் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் வருணித்துள்ளார்.

உக்ரேன்-ரஷ்யப் போர் உலகின் உணவுப் பாதுகாப்பில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்களிலிருந்து வெளியேறும் சரக்குக் கப்பல்களில் திருட்டு தானியங்கள் இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டது.

அறிக்கைகளின் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் முயற்சியாக அமெரிக்கா 14 நாடுகளிடம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்பட்டது.

கிரெம்ளின் உக்ரேனில் விளைந்த 20 மில்லியன் டன் தானியங்களைத் தடுத்துவைத்திருப்பதாகத் பிளிங்கன் கூறினார்.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...