Newsரஷ்யா உக்ரேனிடமிருந்து தானியங்களைத் திருடி விற்றுவருவதனை உறுதி செய்த அமெரிக்கா

ரஷ்யா உக்ரேனிடமிருந்து தானியங்களைத் திருடி விற்றுவருவதனை உறுதி செய்த அமெரிக்கா

-

ரஷ்யா உக்ரேனிடமிருந்து தானியங்களைத் திருடி தனது சொந்த லாபத்துக்காக விற்றுவருவதாகக் கூறும் அறிக்கைகளில் உண்மை இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ரஷ்யா ஏற்கனவே உக்ரேனின் சோள ஏற்றுமதிக்குத் தடைவிதித்துள்ளது. உலகில் உணவுப் பாதுகாப்பு குறித்த அக்கறைகள் அதிகரித்துவரும் நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

அறிக்கைகள் நம்பகமானவை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. கருங்கடலில் இடம்பெறும் வணிகத்துக்கு இடையூறான செயல்களில் ஈடுபடுவது ஒருவகை மிரட்டல் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் வருணித்துள்ளார்.

உக்ரேன்-ரஷ்யப் போர் உலகின் உணவுப் பாதுகாப்பில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்களிலிருந்து வெளியேறும் சரக்குக் கப்பல்களில் திருட்டு தானியங்கள் இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டது.

அறிக்கைகளின் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் முயற்சியாக அமெரிக்கா 14 நாடுகளிடம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்பட்டது.

கிரெம்ளின் உக்ரேனில் விளைந்த 20 மில்லியன் டன் தானியங்களைத் தடுத்துவைத்திருப்பதாகத் பிளிங்கன் கூறினார்.

Latest news

துருக்கியில் புத்தாண்டில் தாக்குதலுக்கு திட்டம்

இஸ்லாமிய அரச குழுவிற்கு எதிராக நேற்று (30) துருக்கி முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்தான்புல், அங்காரா மற்றும் யலோவா உட்பட 21 மாகாணங்களில் பொலிஸார்...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...

ஜனவரி 1 முதல் குறையும் மருந்துகளின் விலைகள்

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட மாற்றத்தால், ஜனவரி 1 முதல் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் மருத்துவத்திற்காகச் செலவிடும் பணத்தை மிச்சப்படுத்தியுள்ளனர். புதிய சட்டத்தின்...

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Bondi நாயகன்

கொடிய Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் போது துப்பாக்கிதாரி ஒருவரை அடக்கி நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய அகமது அல் அகமது, மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிசம்பர்...

ஜனவரி 1 முதல் குறையும் மருந்துகளின் விலைகள்

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட மாற்றத்தால், ஜனவரி 1 முதல் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் மருத்துவத்திற்காகச் செலவிடும் பணத்தை மிச்சப்படுத்தியுள்ளனர். புதிய சட்டத்தின்...

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Bondi நாயகன்

கொடிய Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் போது துப்பாக்கிதாரி ஒருவரை அடக்கி நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய அகமது அல் அகமது, மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிசம்பர்...