Newsரஷ்யா உக்ரேனிடமிருந்து தானியங்களைத் திருடி விற்றுவருவதனை உறுதி செய்த அமெரிக்கா

ரஷ்யா உக்ரேனிடமிருந்து தானியங்களைத் திருடி விற்றுவருவதனை உறுதி செய்த அமெரிக்கா

-

ரஷ்யா உக்ரேனிடமிருந்து தானியங்களைத் திருடி தனது சொந்த லாபத்துக்காக விற்றுவருவதாகக் கூறும் அறிக்கைகளில் உண்மை இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ரஷ்யா ஏற்கனவே உக்ரேனின் சோள ஏற்றுமதிக்குத் தடைவிதித்துள்ளது. உலகில் உணவுப் பாதுகாப்பு குறித்த அக்கறைகள் அதிகரித்துவரும் நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

அறிக்கைகள் நம்பகமானவை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. கருங்கடலில் இடம்பெறும் வணிகத்துக்கு இடையூறான செயல்களில் ஈடுபடுவது ஒருவகை மிரட்டல் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் வருணித்துள்ளார்.

உக்ரேன்-ரஷ்யப் போர் உலகின் உணவுப் பாதுகாப்பில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்களிலிருந்து வெளியேறும் சரக்குக் கப்பல்களில் திருட்டு தானியங்கள் இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டது.

அறிக்கைகளின் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் முயற்சியாக அமெரிக்கா 14 நாடுகளிடம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்பட்டது.

கிரெம்ளின் உக்ரேனில் விளைந்த 20 மில்லியன் டன் தானியங்களைத் தடுத்துவைத்திருப்பதாகத் பிளிங்கன் கூறினார்.

Latest news

போர் நிறுத்தத்தை மீறி காஸாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்றுகொண்ட நிலையில் கடந்த வாரம்...

ஆஸ்திரேலிய குதிரைகளுக்கான எட்டு ஆண்டு சாதனையை முறியடித்தது Ka Ying Rising

உலகின் மிகவும் மதிப்புமிக்க குதிரைப் பந்தயமான The Everest-ஐ, ஹாங்காங்கை தளமாகக் கொண்ட பிரபல ஜெல்டிங் வீரர் கா யிங் "Ka Ying Rising" வென்றுள்ளார். Royal...

குயின்ஸ்லாந்தில் Takeaway Order-களில் கலந்துள்ள எலி விஷம்

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் பல்வேறு மருத்துவமனைகளில் ஐந்து பேர் உடல்நிலை சரியில்லாமல் வந்ததை அடுத்து, பல Takeaway Orderகளில் எலி விஷம் கலந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் Logan...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....

மெல்பேர்ணில் மூன்று ஆளில்லாத வீடுகளில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்துகள்

மெல்பேர்ண் முழுவதும் ஆளில்லாத மூன்று தனித்தனி வீடுகளில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்துகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. நேற்று அதிகாலை 5 மணிக்கு முன்னதாக வீடுகள்...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....