Newsகொழும்பு - யாழ்ப்பாணம் கடுகதி ரயில் சேவையால் ஏற்பட்டுள்ள இழப்பு!

கொழும்பு – யாழ்ப்பாணம் கடுகதி ரயில் சேவையால் ஏற்பட்டுள்ள இழப்பு!

-

கொழும்பு, யாழ்ப்பாணம் கடுகதி ரயில் சேவையால் ஒரு தடவை பயணத்துக்கு 3 லட்சம் ரூபா இழப்பு ஏற்படுகின்றது – என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ரயில் கட்டணம் அதிகரிக்கப்படுமா என நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

” ரயில் போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதற்கு டீசலுக்கு அதிகம் செலவிடவேண்டியுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கு இரவு நேர கடுகதி ரயில் சேவையை முன்னெடுப்பதற்கான முயற்சி எடுக்கப்படுகின்றது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கு எரிபொருளுக்காக மட்டும் 13 லட்சம் ரூபா செலவிடப்பட வேண்டும்.

500 பேர் பயணித்தால், பயணியொருவரிடம் 2 ஆயிரம் ரூபா அறிவித்தால் 10 லட்சம் ரூபாதான் கிடைக்கும். எனவே, ஒரு தடவை பயணத்துக்கு 3 லட்சம் ரூபா நஷ்டம் ஏற்படுகின்றது.

எனவே, ரயில் கட்டணத்தை, பஸ் கட்டணத்தில் பாதியாகக் கொண்ட பொதுக் கொள்கையொன்றை உருவாக்க வேண்டும். ” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Latest news

Bondi துப்பாக்கிதாரிகளுடன் சண்டையிட்ட மேலும் இரண்டு ஹீரோக்கள்

Bondi-இல் துப்பாக்கி ஏந்தியவர்கள் என்று கூறப்படுபவர்களுடன் மேலும் இரண்டு போராட்டக்காரர்கள் சண்டையிடும் புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் ஒருவர் காரில் இருந்து இறங்கும்போது அவரைத்...

Bondi தாக்குதலுக்குப் பின் யூத வழிபாட்டுத் தலங்களில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

சிட்னி நகரில் உள்ள Bondi கடற்கரையில் கடந்த 14ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் எதிரொலியாக, பிரித்தானியா முழுவதும் உள்ள யூத வழிபாட்டுத் தலங்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. Bondi...

Triple Zero-ஐ போல அவசர சேவை விநியோகத்தை மேம்படுத்த AI தயார்

Triple Zero ஆஸ்திரேலியர்கள் அவசர அழைப்புகளில் AI ஐப் பயன்படுத்த ஆர்வமாக உள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. அவசரகால சேவை பதில்களை மேம்படுத்துவதற்காக பெரும்பாலானவர்கள்...

Google அறிமுகப்படுத்திய சமீபத்திய சாதனம்

Google Translate-இற்கு Google ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது எந்த Headphone மூலமாகவும் real-time, one-way translation device-ஆக செயல்பட முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தப்...

Triple Zero-ஐ போல அவசர சேவை விநியோகத்தை மேம்படுத்த AI தயார்

Triple Zero ஆஸ்திரேலியர்கள் அவசர அழைப்புகளில் AI ஐப் பயன்படுத்த ஆர்வமாக உள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. அவசரகால சேவை பதில்களை மேம்படுத்துவதற்காக பெரும்பாலானவர்கள்...

அடிலெய்டில் பெண் ஒருவரை கொலை செய்த நபர்

அடிலெய்டின் parklands-இல் ஒரு பெண்ணைக் கொலை செய்ததாக 37 வயது நபர் ஒருவரை போலீசார் கைது செய்து அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி...