Newsகொழும்பு - யாழ்ப்பாணம் கடுகதி ரயில் சேவையால் ஏற்பட்டுள்ள இழப்பு!

கொழும்பு – யாழ்ப்பாணம் கடுகதி ரயில் சேவையால் ஏற்பட்டுள்ள இழப்பு!

-

கொழும்பு, யாழ்ப்பாணம் கடுகதி ரயில் சேவையால் ஒரு தடவை பயணத்துக்கு 3 லட்சம் ரூபா இழப்பு ஏற்படுகின்றது – என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ரயில் கட்டணம் அதிகரிக்கப்படுமா என நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

” ரயில் போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதற்கு டீசலுக்கு அதிகம் செலவிடவேண்டியுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கு இரவு நேர கடுகதி ரயில் சேவையை முன்னெடுப்பதற்கான முயற்சி எடுக்கப்படுகின்றது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கு எரிபொருளுக்காக மட்டும் 13 லட்சம் ரூபா செலவிடப்பட வேண்டும்.

500 பேர் பயணித்தால், பயணியொருவரிடம் 2 ஆயிரம் ரூபா அறிவித்தால் 10 லட்சம் ரூபாதான் கிடைக்கும். எனவே, ஒரு தடவை பயணத்துக்கு 3 லட்சம் ரூபா நஷ்டம் ஏற்படுகின்றது.

எனவே, ரயில் கட்டணத்தை, பஸ் கட்டணத்தில் பாதியாகக் கொண்ட பொதுக் கொள்கையொன்றை உருவாக்க வேண்டும். ” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Latest news

மறைந்து போகும் சனி கிரகத்தின் வளையம்

சனியின் சின்னமான வளையங்கள் மறைந்துவிட்டதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது ஒரு அரிய நிகழ்வு என்றும், சனியின் மேற்பரப்பில் வளையங்களாகத் தோன்றும் தூசித் துகள்கள்...

ஜெசிந்தாவைப் புகழ்ந்து பேசிய பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், விக்டோரியன் பிரதமர் ஜெசிந்தா ஆலனின் நாட்டைப் பாதுகாக்கும் திட்டத்தை ஆதரிப்பதாகக் கூறுகிறார். நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் இந்தக்...

ஆஸ்திரேலியாவின் பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு உள்ள $940 பில்லியன் கடன்

ஆஸ்திரேலிய அரசாங்கம் 2024/25 ஆம் ஆண்டில் மொத்தக் கடனை $940 பில்லியனாகக் கட்டுப்படுத்தத் தயாராகி வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட் இன்றிரவு தாக்கல் செய்யப்பட உள்ளது. நாட்டின் பொறுப்பான...

விக்டோரியா பெரும் செல்வத்தை ஈட்டுகிறது – பிரதமர் அல்பானீஸ்

விக்டோரியாவை ஆஸ்திரேலியாவின் போக்குவரத்து மையமாக மாற்றுவதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதியளித்துள்ளார். வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலை இலக்காகக் கொண்டு மெல்பேர்ணில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றும் போதே அவர்...

ஆஸ்திரேலியாவின் பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு உள்ள $940 பில்லியன் கடன்

ஆஸ்திரேலிய அரசாங்கம் 2024/25 ஆம் ஆண்டில் மொத்தக் கடனை $940 பில்லியனாகக் கட்டுப்படுத்தத் தயாராகி வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட் இன்றிரவு தாக்கல் செய்யப்பட உள்ளது. நாட்டின் பொறுப்பான...

தனிமையில் வாடும் இளைஞர்களைப் பற்றி மெல்பேர்ணில் இருந்து வெளியாகிய ஆய்வு

ஆஸ்திரேலியாவில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் தனிமையை அனுபவிப்பதாக மெல்பேர்ண் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தக் குழுவில் 15 முதல் 24 வயதுடைய ஆஸ்திரேலியர்கள் முதலிடத்தில் இருப்பதாகக்...