Newsஇலங்கையர்கள் 15 பேரை நாடு கடத்திய ஆஸ்திரேலிய அரசாங்கம்!

இலங்கையர்கள் 15 பேரை நாடு கடத்திய ஆஸ்திரேலிய அரசாங்கம்!

-

சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயன்ற போது கைது செய்யப்பட்ட 15 இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் சுமார் 19 நாட்களுக்கு முன்பு பல நாள் மீன்பிடி இழுவை படகொன்றில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​​​ஆஸ்திரேலியா கடற்கரையில், குறித்த படகில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

அதன்போது, ஆ​ஸ்திரேலிய எல்லைக் பாதுகாப்பு படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, குறித்த 15 பேரும் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து அந்நாட்டு விமானப்படையின் விசேட விமானம் மூலம் இன்று அதிகாலை 4.40 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இலங்கையர்களுடன் பெருமளவான ஆஸ்திரேலிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கையர்கள் குழு இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதனையடுத்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Latest news

தாய்லாந்தில் நிறைவேற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க முடிவு!

தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் மசோதாவை கீழ்சபை நிறைவேற்றியுள்ளது. அந்தத் தத்தெடுப்பின் மூலம் சமத்துவத்திற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை தாய்லாந்து எடுத்துள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரே...

ஆஸ்திரேலியாவில் வாழும் மக்கள் பற்றி வெளியான ஒரு புதிய தகவல்

உலகின் மிக வெற்றிகரமான பன்முக கலாச்சார சமூகங்களில் ஒன்றாக ஆஸ்திரேலியா பெயரிடப்பட்டுள்ளது. இன்றைய ஆஸ்திரேலிய குடிமக்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டில் பிறந்தவர்கள் என்று ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சக அறிக்கைகள்...

புட்களை பரிசீலிக்க நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழு

தெரியாத பிரதேசத்தில் காணப்படும் புல்லை எருமைகளுக்கு உணவாக கொடுப்பதை பரிசீலிக்க ஆலோசனைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு உணவாக எருமைப் புல் வழங்கப்பட்டாலும், அந்த வகைப் புல்லால்...

செல்போன் பயன்படுத்தும் பிள்ளைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்

குழந்தைகள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் போதெல்லாம் சில ஆபத்துகளுக்கு ஆளாகிறார்கள் என தெரியவந்துள்ளது. கையடக்கத் தொலைபேசிகளின் பாவனை இன்றைய உலகில் இன்றியமையாத அங்கம் எனவும் அதன் பாவனையிலிருந்து...

செல்போன் பயன்படுத்தும் பிள்ளைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்

குழந்தைகள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் போதெல்லாம் சில ஆபத்துகளுக்கு ஆளாகிறார்கள் என தெரியவந்துள்ளது. கையடக்கத் தொலைபேசிகளின் பாவனை இன்றைய உலகில் இன்றியமையாத அங்கம் எனவும் அதன் பாவனையிலிருந்து...

இளம் பெண்கள் உட்பட ஆஸ்திரேலிய பெண்களுக்கான புதிய APP

ஆஸ்திரேலிய சுகாதார வல்லுநர்கள் பெண்களின் உடல்நலப் பிரச்சினைகளைக் கண்டறிய புதிய பயன்பாட்டை (APP) அறிமுகப்படுத்தியுள்ளனர். AI தொழில்நுட்பம் மூலம் டெலிஹெல்த் சேவைகளை உள்ளடக்கி இது உருவாக்கப்பட்டுள்ளது என்று...