Newsஇலங்கையர்கள் 15 பேரை நாடு கடத்திய ஆஸ்திரேலிய அரசாங்கம்!

இலங்கையர்கள் 15 பேரை நாடு கடத்திய ஆஸ்திரேலிய அரசாங்கம்!

-

சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயன்ற போது கைது செய்யப்பட்ட 15 இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் சுமார் 19 நாட்களுக்கு முன்பு பல நாள் மீன்பிடி இழுவை படகொன்றில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​​​ஆஸ்திரேலியா கடற்கரையில், குறித்த படகில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

அதன்போது, ஆ​ஸ்திரேலிய எல்லைக் பாதுகாப்பு படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, குறித்த 15 பேரும் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து அந்நாட்டு விமானப்படையின் விசேட விமானம் மூலம் இன்று அதிகாலை 4.40 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இலங்கையர்களுடன் பெருமளவான ஆஸ்திரேலிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கையர்கள் குழு இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதனையடுத்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...