Newsமுட்டைகோஸால் அவதிப்படும் ஆஸ்திரேலிய மக்கள்!

முட்டைகோஸால் அவதிப்படும் ஆஸ்திரேலிய மக்கள்!

-

சர்வதேச அளவில் பல உணவு வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் ஆஸ்திரேலியாவில் பெய்த கனமழை, வெள்ளம் காரணமாக கீரை, காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக KFC நிறுவனம் பர்கரில் கீரைக்கு (lettuce) பதிலாக, முட்டைகோஸை பயன்படுத்தி வருகின்றது.

ஏற்கனவே ரஷ்யா உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் பல்வேறு உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. பல மூலதன பொருட்களின் விலையானது மோசமான உச்சத்தினை எட்டியுள்ளது.

இதற்கிடையில் இயற்கை பேரிடர் காரணமாக உற்பத்தியும் சில இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தான் KFC உணவு சங்கிலி நிறுவனம் கீரைக்கு பதிலாக முட்டை கோஸினை பயன்படுத்த தொடங்கியுள்ளது. KFCயின் இந்த முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய மக்கள், உணவின் சுவை குறைந்துவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

கேஎஃப்சி உணவகம் தங்கள் உணவுப் பொருட்களில் lettuce என்ற கீரைக்குப் பதிலாக, முட்டைக்கோஸ் கலவையை பயன்படுத்தியதே இப்புகார்களுக்குக் காரணமாகும். அங்கு உற்பத்தி சரிவினால் இந்த வகை கீரைகளின் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக செலவினத்தை கட்டுக்குள் வைக்க, ஆஸ்திரேலியாவில் KFC உணவகங்கள் தங்களுடைய உணவுச் செய்முறையை மாற்றும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

இதற்கிடையில் KFCயில் உணவு சாப்பிடலாமா வேண்டாமா என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் lettuce கீரை விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தான் கே எஃப் சி இப்படி ஒரு முடிவினை எடுத்துள்ளது. நடப்பு ஆண்டில் உணவு பொருட்கள் விலை உச்சம் தொட்டுள்ளது இது முதல் முறையல்ல.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததால் டீசல், உரம் ஆகியவற்றின் விலைகள் ஏற்றம் அடைந்தன. அதுவும் ‘lettuce’ கீரை விலை உயர்விற்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் தற்போது ஆள்பற்றாக்குறையும் நிலவி வருகின்றது. கடந்த ஆண்டே ஓமிக்ரான் காரணமாக விலைவாசி அதிகரித்துள்ளது.

கே எஃப் சி மட்டும் அல்ல, மெக்டொனால்டும் பல்வேறு மூலதன பொருட்கள் பற்றாக்குறை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பணவீக்கமானது 20 ஆண்டுகளில் உச்சம் தொட்டுள்ள நிலையில், இது இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய மத்திய வங்கி வட்டி விகிதத்தினையும் அதிகரித்துள்ளது. இது இன்னும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

Latest news

விக்டோரியாவின் வரலாற்று நினைவுச்சின்னங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு

விக்டோரியாவில் உள்ள அதிகாரிகள், மாநிலம் முழுவதும் மீண்டும் பரவி வரும் பேரழிவு தரும் காட்டுத்தீயிலிருந்து பாதுகாக்க, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களை தீ தடுப்பு பொருட்களால்...

ஆஸ்திரேலிய தினத்தை ஒட்டி நாடு முழுவதும் பல நகரங்களில் அணிவகுப்புகள்

நேற்று, ஆஸ்திரேலிய தினத்துடன் இணைந்து, ஆஸ்திரேலியா முழுவதும் பல நகரங்களில் படையெடுப்பு தின போராட்டங்கள் நடைபெற்றன. Sydney Cove-இல் பிரிட்டிஷ் கொடி ஏற்றப்பட்ட ஜனவரி 26 ஆம்...

விக்டோரியா காட்டுத்தீ காரணமாக 1,000 வீட்டு மக்கள் வெளியேற்றம்

தென்மேற்கு விக்டோரியாவில் காட்டுத்தீக்கு அருகில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இன்று மேலும் கடுமையான காட்டுத் தீ ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வானிலை ஆய்வு...

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு வீட்டு மின்சார நுகர்வுக்கான கட்டணங்கள் சுமார் 20% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த...

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு வீட்டு மின்சார நுகர்வுக்கான கட்டணங்கள் சுமார் 20% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த...

மிரட்டல் காரணமாக போராட்டக்காரர்கள் குழுவை கலைத்த போலீசார்

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் படையெடுப்பு தின ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவை போலீசார் கலைத்துள்ளனர். பொது ஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததால், போராட்டக்காரர்களை கலைக்க நடவடிக்கை...