Newsமுட்டைகோஸால் அவதிப்படும் ஆஸ்திரேலிய மக்கள்!

முட்டைகோஸால் அவதிப்படும் ஆஸ்திரேலிய மக்கள்!

-

சர்வதேச அளவில் பல உணவு வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் ஆஸ்திரேலியாவில் பெய்த கனமழை, வெள்ளம் காரணமாக கீரை, காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக KFC நிறுவனம் பர்கரில் கீரைக்கு (lettuce) பதிலாக, முட்டைகோஸை பயன்படுத்தி வருகின்றது.

ஏற்கனவே ரஷ்யா உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் பல்வேறு உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. பல மூலதன பொருட்களின் விலையானது மோசமான உச்சத்தினை எட்டியுள்ளது.

இதற்கிடையில் இயற்கை பேரிடர் காரணமாக உற்பத்தியும் சில இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தான் KFC உணவு சங்கிலி நிறுவனம் கீரைக்கு பதிலாக முட்டை கோஸினை பயன்படுத்த தொடங்கியுள்ளது. KFCயின் இந்த முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய மக்கள், உணவின் சுவை குறைந்துவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

கேஎஃப்சி உணவகம் தங்கள் உணவுப் பொருட்களில் lettuce என்ற கீரைக்குப் பதிலாக, முட்டைக்கோஸ் கலவையை பயன்படுத்தியதே இப்புகார்களுக்குக் காரணமாகும். அங்கு உற்பத்தி சரிவினால் இந்த வகை கீரைகளின் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக செலவினத்தை கட்டுக்குள் வைக்க, ஆஸ்திரேலியாவில் KFC உணவகங்கள் தங்களுடைய உணவுச் செய்முறையை மாற்றும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

இதற்கிடையில் KFCயில் உணவு சாப்பிடலாமா வேண்டாமா என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் lettuce கீரை விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தான் கே எஃப் சி இப்படி ஒரு முடிவினை எடுத்துள்ளது. நடப்பு ஆண்டில் உணவு பொருட்கள் விலை உச்சம் தொட்டுள்ளது இது முதல் முறையல்ல.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததால் டீசல், உரம் ஆகியவற்றின் விலைகள் ஏற்றம் அடைந்தன. அதுவும் ‘lettuce’ கீரை விலை உயர்விற்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் தற்போது ஆள்பற்றாக்குறையும் நிலவி வருகின்றது. கடந்த ஆண்டே ஓமிக்ரான் காரணமாக விலைவாசி அதிகரித்துள்ளது.

கே எஃப் சி மட்டும் அல்ல, மெக்டொனால்டும் பல்வேறு மூலதன பொருட்கள் பற்றாக்குறை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பணவீக்கமானது 20 ஆண்டுகளில் உச்சம் தொட்டுள்ள நிலையில், இது இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய மத்திய வங்கி வட்டி விகிதத்தினையும் அதிகரித்துள்ளது. இது இன்னும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

Latest news

காசாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் குறித்து இஸ்ரேலின் அறிக்கை

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் இறுதிச் சடங்குகளில் காசா நகரில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கலந்து கொண்டனர். இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில்...

இன்று காலை விக்டோரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்

மெல்பேர்ணின் தென்கிழக்கே விக்டோரியாவில் உள்ள மார்னிங்டன் தீபகற்பத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4.39 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அரசாங்கத்தின் புவியியல் வலைத்தளம் கூறுகிறது. இது ரிக்டர்...

மிகவும் திருப்தியான வாடிக்கையாளர் விருதை வென்ற சூப்பர் மார்க்கெட்

ஆஸ்திரேலியாவின் விருப்பமான பல்பொருள் அங்காடியாக Aldi மீண்டும் ஒருமுறை வாடிக்கையாளர்களால் மகுடம் சூட்டப்பட்டுள்ளது. Aldi தொடர்ந்து எட்டாவது முறையாக இந்த விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு முக்கிய...

ஒரு பெரிய ஆஸ்திரேலிய வங்கியிடமிருந்து சாதனை லாபம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய கடன் மற்றும் வைப்பு நிறுவனமான Commonwealth வங்கி, 2024/25 நிதியாண்டில் ஆண்டுக்கு $10.25 பில்லியன் லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு வீட்டு உரிமையாளர்கள் மற்றும்...

விக்டோரியாவில் கார் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு

விக்டோரியாவின் கிழக்குப் பகுதியில் மோட்டார் சைக்கிள் காருடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். புதன்கிழமை மாலை 6 மணியளவில் Moe-இல் உள்ள Lloyd தெருவிற்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டன. இன்னும்...

வாகன நிறுத்துமிடத்தில் சிறப்பாகச் செயல்பட்ட முன்னாள் பிரதமர்

முன்னாள் பிரதமர் Tony Abbott வாகன நிறுத்துமிடத்தில் பயணிகளுக்கு உதவும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் பிரதமராக இருந்தார்....