Newsமுட்டைகோஸால் அவதிப்படும் ஆஸ்திரேலிய மக்கள்!

முட்டைகோஸால் அவதிப்படும் ஆஸ்திரேலிய மக்கள்!

-

சர்வதேச அளவில் பல உணவு வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் ஆஸ்திரேலியாவில் பெய்த கனமழை, வெள்ளம் காரணமாக கீரை, காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக KFC நிறுவனம் பர்கரில் கீரைக்கு (lettuce) பதிலாக, முட்டைகோஸை பயன்படுத்தி வருகின்றது.

ஏற்கனவே ரஷ்யா உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் பல்வேறு உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. பல மூலதன பொருட்களின் விலையானது மோசமான உச்சத்தினை எட்டியுள்ளது.

இதற்கிடையில் இயற்கை பேரிடர் காரணமாக உற்பத்தியும் சில இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தான் KFC உணவு சங்கிலி நிறுவனம் கீரைக்கு பதிலாக முட்டை கோஸினை பயன்படுத்த தொடங்கியுள்ளது. KFCயின் இந்த முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய மக்கள், உணவின் சுவை குறைந்துவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

கேஎஃப்சி உணவகம் தங்கள் உணவுப் பொருட்களில் lettuce என்ற கீரைக்குப் பதிலாக, முட்டைக்கோஸ் கலவையை பயன்படுத்தியதே இப்புகார்களுக்குக் காரணமாகும். அங்கு உற்பத்தி சரிவினால் இந்த வகை கீரைகளின் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக செலவினத்தை கட்டுக்குள் வைக்க, ஆஸ்திரேலியாவில் KFC உணவகங்கள் தங்களுடைய உணவுச் செய்முறையை மாற்றும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

இதற்கிடையில் KFCயில் உணவு சாப்பிடலாமா வேண்டாமா என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் lettuce கீரை விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தான் கே எஃப் சி இப்படி ஒரு முடிவினை எடுத்துள்ளது. நடப்பு ஆண்டில் உணவு பொருட்கள் விலை உச்சம் தொட்டுள்ளது இது முதல் முறையல்ல.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததால் டீசல், உரம் ஆகியவற்றின் விலைகள் ஏற்றம் அடைந்தன. அதுவும் ‘lettuce’ கீரை விலை உயர்விற்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் தற்போது ஆள்பற்றாக்குறையும் நிலவி வருகின்றது. கடந்த ஆண்டே ஓமிக்ரான் காரணமாக விலைவாசி அதிகரித்துள்ளது.

கே எஃப் சி மட்டும் அல்ல, மெக்டொனால்டும் பல்வேறு மூலதன பொருட்கள் பற்றாக்குறை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பணவீக்கமானது 20 ஆண்டுகளில் உச்சம் தொட்டுள்ள நிலையில், இது இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய மத்திய வங்கி வட்டி விகிதத்தினையும் அதிகரித்துள்ளது. இது இன்னும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...