Newsரஷ்யாவின் கருங்கடல் துறைமுக முற்றுகை - லட்சக்கணக்கானோரை பட்டினியில் தள்ளும் ஆபத்து

ரஷ்யாவின் கருங்கடல் துறைமுக முற்றுகை – லட்சக்கணக்கானோரை பட்டினியில் தள்ளும் ஆபத்து

-

ரஷியாவின் கருங்கடல் துறைமுக முற்றுகை நீடிப்பது லட்சக்கணக்கானோரை பட்டினியில் தள்ளும் என ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலக நாடுகளின் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. இதில், இந்த இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று போரில் ஈடுபட்டு வரும் சூழலில், அது பிற வளர்ச்சி அடையாத நாடுகளை கடுமையாக பாதிக்கும் என உலக சுகாதார அமைப்பு முன்பு எச்சரித்து இருந்தது.

இது வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளிலும் குறிப்பிட்ட அளவில் தாக்கம் ஏற்படுத்தி வருகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக எரிபொருள் விலை உயர்வு சுட்டி காட்டப்படுகிறது. இந்த சூழலில், உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களை ரஷியா தடுத்து நிறுத்தி உள்ளது.

இதனால், துறைமுகங்களில் இருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி ஜெலன்ஸ்கி தொலைக்காட்சியில் இன்று ஆற்றிய உரை ஒன்றில், ரஷியாவின் இந்த நடவடிக்கை தொடர்ந்து நீடிக்குமென்றால், லட்சக்கணக்கானோர் பசி, பஞ்சத்திற்கு ஆளாவார்கள் என கூறியுள்ளார். உக்ரைனால், கோதுமை, சோளம், எண்ணெய் மற்றும் பிற பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Latest news

மன்னிப்பு கேட்டுள்ள விக்டோரியாவின் மூத்த காவல்துறை அதிகாரி

விக்டோரியாவில் உள்ள ஒரு மூத்த காவல்துறை அதிகாரியான தலைமை ஆணையர் Mike Bush, தனிப்பட்ட பயணத்திற்காக போலீஸ் ஹெலிகாப்டரைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். இருப்பினும், டாஸ்மேனியாவில் ஆண்டுதோறும்...

அவசரமாக தரையிறங்கிய அந்தோணி அல்பானீஸ் சென்ற விமானம்

ஆஸ்திரேலிய ராயல் விமானப்படை அதிகாரி காயமடைந்ததை அடுத்து, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பிரதமர் மற்றும் அவரது குழுவினரை ஏற்றிச் சென்ற விமானம்,...

ஆஸ்திரேலியா சீனா இடையே தொடர்ந்து அதிகரித்து வரும் பதட்டங்கள்

தென் சீனக் கடலில் பதட்டமான விமானப்படை மோதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதட்டங்கள் மேலும் அதிகரித்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலிய இராணுவ விமானம் அருகே சீன...

குயின்ஸ்லாந்து செவிலியர்களுக்கு 11% சம்பள உயர்வு

குயின்ஸ்லாந்து செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் புதிய $1.8 பில்லியன் ஊதிய ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். பேரம் பேசும் ஒப்பந்தத்தில் பங்கேற்ற 83.8% செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் ஆதரவாக...

கான்பெராவில் மாற்றமடையும் Liquor Transport சட்டங்கள்

கான்பெராவில் வீடுகளுக்கு மதுபான விநியோகத்தை கட்டுப்படுத்தும் மசோதாவை ACT அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை...

அவசரமாக தரையிறங்கிய அந்தோணி அல்பானீஸ் சென்ற விமானம்

ஆஸ்திரேலிய ராயல் விமானப்படை அதிகாரி காயமடைந்ததை அடுத்து, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பிரதமர் மற்றும் அவரது குழுவினரை ஏற்றிச் சென்ற விமானம்,...