Newsஆஸ்திரேலியாவில் தொழிற்கட்சி ஆட்சி வந்ததால் படகு வருகைகள் அதிகரிப்பு - இலங்கையர்களுக்கு...

ஆஸ்திரேலியாவில் தொழிற்கட்சி ஆட்சி வந்ததால் படகு வருகைகள் அதிகரிப்பு – இலங்கையர்களுக்கு சிக்கல்

-

ஆஸ்திரேலியாவில் தொழிற்கட்சி ஆட்சி வந்தால் படகு வருகைகள் அதிகரிக்கும் என்றோம், அது தான் நடந்து கொண்டிருக்கிறது என முன்னாள் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கரேன் ஆண்டூருஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

“ஆட்கடத்தல்காரர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன்.

அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். (தொழிற்கட்சி ஆட்சி வந்தால்) இதுதான் நடக்கும் என்று கூறினோம், அது நடந்து கொண்டிருக்கிறது,” எனக் கூறியிருக்கிறார்.

“சட்டவிரோத படகு வருகைகளை எவ்வாறு நிர்வகிக்க போகிறது என அல்பனீஸ் (தொழிற்கட்சி) அரசாங்கம் உடனடியாக விளக்க வேண்டும்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை ஆட்கடத்தல்காரர்கள் பயன்படுத்தாமல் இருப்பதை இந்த அரசாங்கம் உறுதிச் செய்ய வேண்டும்,” என முன்னாள் உள்துறை அமைச்சர் கரேன் ஆண்டூருஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

அதே சமயம், படகு வழியாக வருபவர்களை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டிலேயே புதிதாக ஆட்சி வந்துள்ள ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் இருந்து வருகிறது.

இந்த கொள்கையின் அடிப்படையிலேயே ஆஸ்திரேலியாவில் தஞ்சமடையும் இலங்கை அகதிகள் தொடர்ந்து நாடுகடத்தப்பட்டு வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Latest news

Meta AI-யில் மிகப்பெரிய அளவில் பணியாளர்கள் குறைப்பு

Meta நிறுவனம் AI-யில் பணிபுரிந்த சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த பணியாளர் குறைப்புகளால் FAIR (Fundamental AI Research) பிரிவு மற்றும்...

Escape! Hide! Tell! ஆஸ்திரேலியர்களுக்கான புதிய பாதுகாப்பு ஆலோசனை

அவசரநிலை ஏற்பட்டால், ஆயுதமேந்திய தாக்குதலுக்கு மக்கள் தயாராக உதவும் வகையில் ஆஸ்திரேலிய அரசாங்கம் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. "Escape! Hide! Tell!" என்பது அந்தப் பிரச்சாரம் ஆகும். பெரிய...

சாதனை உச்சத்தை எட்டிய ஆஸ்திரேலிய Super Fund

ஆஸ்திரேலிய Super Fund சாதனை உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டு ஓய்வூதியத்திற்காக அதிக பணம் சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Australian Superannuation Fund Association-இன் (ASFA) புதிய...

பாப்பரசரும் இங்கிலாந்து மன்னரும் முதன்முறையாக ஒன்றாக பிரார்த்தனை

கடந்த 500 ஆண்டுகளில் முதல் முறையாக பாப்பரசர் மற்றும் இங்கிலாந்து மன்னர் ஒன்றாக பிரார்த்தனை செய்தனர். கத்தோலிக்க திருச்சபையிலிருந்து ஆங்கிலிகன் திருச்சபை பிரிந்ததிலிருந்து கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு...

கொடிய பறவைக் காய்ச்சல் Heard தீவை அடைந்துவிட்டதா?

ஆஸ்திரேலியாவின் துணை அண்டார்டிக் Heard தீவில் கொடிய H5 பறவைக் காய்ச்சல் பரவியதாக சந்தேகிக்கப்படுகிறது. RSV Nuyina என்ற Ice breaker கப்பலில் பயணிக்கும் வனவிலங்கு விஞ்ஞானிகள்,...

4 முக்கிய ஆஸ்திரேலிய நகரங்களிலிருந்து 12 புதிய விமானங்கள்

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்காக பல புதிய விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் மாதங்களில் கிறிஸ்துமஸ் பருவத்தில் பிரிஸ்பேர்ண், மெல்பேர்ண், அடிலெய்டு மற்றும் பெர்த் ஆகிய...