Newsஆஸ்திரேலியாவில் தொழிற்கட்சி ஆட்சி வந்ததால் படகு வருகைகள் அதிகரிப்பு - இலங்கையர்களுக்கு...

ஆஸ்திரேலியாவில் தொழிற்கட்சி ஆட்சி வந்ததால் படகு வருகைகள் அதிகரிப்பு – இலங்கையர்களுக்கு சிக்கல்

-

ஆஸ்திரேலியாவில் தொழிற்கட்சி ஆட்சி வந்தால் படகு வருகைகள் அதிகரிக்கும் என்றோம், அது தான் நடந்து கொண்டிருக்கிறது என முன்னாள் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கரேன் ஆண்டூருஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

“ஆட்கடத்தல்காரர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன்.

அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். (தொழிற்கட்சி ஆட்சி வந்தால்) இதுதான் நடக்கும் என்று கூறினோம், அது நடந்து கொண்டிருக்கிறது,” எனக் கூறியிருக்கிறார்.

“சட்டவிரோத படகு வருகைகளை எவ்வாறு நிர்வகிக்க போகிறது என அல்பனீஸ் (தொழிற்கட்சி) அரசாங்கம் உடனடியாக விளக்க வேண்டும்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை ஆட்கடத்தல்காரர்கள் பயன்படுத்தாமல் இருப்பதை இந்த அரசாங்கம் உறுதிச் செய்ய வேண்டும்,” என முன்னாள் உள்துறை அமைச்சர் கரேன் ஆண்டூருஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

அதே சமயம், படகு வழியாக வருபவர்களை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டிலேயே புதிதாக ஆட்சி வந்துள்ள ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் இருந்து வருகிறது.

இந்த கொள்கையின் அடிப்படையிலேயே ஆஸ்திரேலியாவில் தஞ்சமடையும் இலங்கை அகதிகள் தொடர்ந்து நாடுகடத்தப்பட்டு வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலிய உட்கட்டமைப்புக்களை சீர்குலைக்க முயற்சி

நாட்டின் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளை சீர்குலைப்பதற்கான முயற்சிகள் இணைய ஊடுருவல்காரர்கள் ஊடாக இடம்பெற்று வருவதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் தலைவர் மைக் பர்கெஸ் தெரிவித்துள்ளார். அரசாங்க...

திரும்பப் பெறப்பட்ட மற்றுமொரு Sunscreen தயாரிப்பு

ஆஸ்திரேலியாவில் Sunscreen தயாரிப்புகளின் செயல்திறன் குறித்த கவலைகள் காரணமாக அவற்றை திரும்பப் பெறும் நிறுவனங்களின் வரிசையில் Cult beauty பிராண்டான Bondi Sands சமீபத்தியதாக மாறியுள்ளது. சிகிச்சை...

Shelby Cobra உட்பட 12 திருடப்பட்ட வாகனங்களை மீட்டுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை நடத்திய சோதனையில் 12 திருடப்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. $120,000 மதிப்புள்ள Shelby Cobra மாற்றத்தக்க காரும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது Pentland Hills-இல்...

Berries பழங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள புதிய சுகாதார எச்சரிக்கை

Berries பழங்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லியால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய உடல்நல ஆபத்து குறித்து புதிய சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக ஊட்டச்சத்து மதிப்புள்ள Raspberry, Blueberry மற்றும் Blackberries...

கட்டுமானத் துறையில் நிலவும் பாரிய தொழிலாளர்கள் பற்றாக்குறை

ஆஸ்திரேலியாவின் கட்டுமானத் துறையில் மிகப்பெரிய அளவில் தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா முழுவதும் பல பில்லியன் டாலர் உள்கட்டமைப்பு திட்டங்களில் கட்டுமானத்...

விக்டோரிய அரசாங்கம் அறிமுகப்படுத்தும் புதிய குற்றவியல் சட்டங்கள்

விக்டோரியா அரசாங்கம், கடை மற்றும் விருந்தோம்பல் பணியாளர்களுக்கு எதிரான வன்முறை நடத்தையை இலக்காகக் கொண்டு புதிய குற்றவியல் சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பிரதமர் ஜெசிந்தா...