Newsஆஸ்திரேலியாவில் தொழிற்கட்சி ஆட்சி வந்ததால் படகு வருகைகள் அதிகரிப்பு - இலங்கையர்களுக்கு...

ஆஸ்திரேலியாவில் தொழிற்கட்சி ஆட்சி வந்ததால் படகு வருகைகள் அதிகரிப்பு – இலங்கையர்களுக்கு சிக்கல்

-

ஆஸ்திரேலியாவில் தொழிற்கட்சி ஆட்சி வந்தால் படகு வருகைகள் அதிகரிக்கும் என்றோம், அது தான் நடந்து கொண்டிருக்கிறது என முன்னாள் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கரேன் ஆண்டூருஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

“ஆட்கடத்தல்காரர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன்.

அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். (தொழிற்கட்சி ஆட்சி வந்தால்) இதுதான் நடக்கும் என்று கூறினோம், அது நடந்து கொண்டிருக்கிறது,” எனக் கூறியிருக்கிறார்.

“சட்டவிரோத படகு வருகைகளை எவ்வாறு நிர்வகிக்க போகிறது என அல்பனீஸ் (தொழிற்கட்சி) அரசாங்கம் உடனடியாக விளக்க வேண்டும்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை ஆட்கடத்தல்காரர்கள் பயன்படுத்தாமல் இருப்பதை இந்த அரசாங்கம் உறுதிச் செய்ய வேண்டும்,” என முன்னாள் உள்துறை அமைச்சர் கரேன் ஆண்டூருஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

அதே சமயம், படகு வழியாக வருபவர்களை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டிலேயே புதிதாக ஆட்சி வந்துள்ள ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் இருந்து வருகிறது.

இந்த கொள்கையின் அடிப்படையிலேயே ஆஸ்திரேலியாவில் தஞ்சமடையும் இலங்கை அகதிகள் தொடர்ந்து நாடுகடத்தப்பட்டு வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Latest news

myGov-ஐ Update செய்தால், 3 நாட்களில் பணம் பெறுவீர்கள்

கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு அரசாங்கம் இன்னும் உரிமை கோரப்படாத மருத்துவப் பலன்களை வைத்திருப்பதாக Services Australia வெளிப்படுத்தியுள்ளது. myGov அமைப்பில் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைப்...

குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் மறைந்திருக்கும் நெருக்கடிக்கு நீண்டகால தீர்வு தேவை

குழந்தை பராமரிப்பு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான மத்திய அரசின் உத்தரவின் காரணமாக, நாடு முழுவதும் உள்ள குழந்தை பராமரிப்பு சேவைகள் கடுமையான அழுத்தத்தில் உள்ளதாக குழந்தை...

2025 ஆம் ஆண்டில் உலகில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகள்

2025 ஆம் ஆண்டு உலகில் பல்வேறு எழுச்சிகளால் உருவாக்கப்பட்ட ஆண்டாகக் கருதப்படுகிறது. காசா போர் நிறுத்தங்கள், அமெரிக்க அரசியல் வரிகள், பேரழிவு தரும் காட்டுத்தீ மற்றும் போப்பின்...

கலிபோர்னியாவில் கிறிஸ்துமஸ் புயல் – மூவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் லொஸ் ஏஞ்சலஸ் பகுதிகளில் கிறிஸ்துமஸ் புயல் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதோடு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் டிசம்பர் 25ஆம் திகதி முதல் 3...

கலிபோர்னியாவில் கிறிஸ்துமஸ் புயல் – மூவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் லொஸ் ஏஞ்சலஸ் பகுதிகளில் கிறிஸ்துமஸ் புயல் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதோடு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் டிசம்பர் 25ஆம் திகதி முதல் 3...

ஆஸ்திரேலியாவில் இளைஞர்களை விட பெரியவர்களிடையே இருக்கும் அதிக போதை பழக்கம்

ஆஸ்திரேலியர்களில் வயதானவர்கள் தேசிய சுகாதார வழிகாட்டுதல்களை மீறி மது அருந்துவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய சுகாதாரம் மற்றும் நலன்புரி நிறுவனத்தின் (AIHW) அறிக்கை, 50 மற்றும்...