Newsஇலங்கையில் முதலாவது டெஸ்ட் போட்டியை ஷேன் வோர்னின் நினைவாக நடாத்த தீர்மானம்!

இலங்கையில் முதலாவது டெஸ்ட் போட்டியை ஷேன் வோர்னின் நினைவாக நடாத்த தீர்மானம்!

-

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியை கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வோர்னின் நினைவாக நடாத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சுற்றுலா அமைச்சுடன் இணைந்து தீர்மானித்துள்ளது.

கிரிகெட் உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷேன் வோர்ன் இந்த ஆண்டு மார்ச் மாதம் காலமானார், இது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியது.

ஷேன் வோர்ன் கிரிகெட் களத்தில் இலங்கையின் கடுமையான போட்டியாளர்களில் ஒருவராகவும், அதற்கு வெளியே ஒரு அன்பான நண்பராகவும் இருந்துள்ளார். 2004 இல் சுனாமி பேரழிவைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் அவர் ஒரு முக்கிய நபராக இருந்தார்.

இலங்கை மற்றும் சுற்றுலா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது.

வோர்ன் நினைவு டெஸ்ட் போட்டியில் வோர்னின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் சபை உறுதி செய்துள்ளதாக இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

Latest news

சீன இராணுவக் கட்டமைப்பைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை

சீனாவின் இராணுவக் கட்டமைப்பை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சர் Richard Marles எச்சரித்துள்ளார். சீனாவின் விரைவான இராணுவக் கட்டமைப்பை எதிர்கொள்ள,...

விக்டோரியாவில் அதிகரித்துவரும் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை

நேற்று மெல்பேர்ணின் தென்கிழக்கில் ஒரு பாதசாரி பிற்பகல் 2 மணியளவில் நெடுஞ்சாலையைக் கடக்கும்போது, முறையாக அடையாளம் காணப்படாத ஒரு பாதசாரி கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முன்னதாக, மாநிலத்தின்...

விண்வெளியில் இருந்துவரும் விசித்திரமான ரேடியோ அலைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு வானியலாளர்கள் குழு, பால்வீதியின் மையத்திலிருந்து வரும் சில விசித்திரமான ரேடியோ சிக்னல்களைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த "நீண்ட கால ரேடியோ டிரான்சிண்ட்கள்" அல்லது LPTகள்,...

வீடியோக்களை பதிவு செய்யக்கூடிய smart கண்ணாடிகள் பற்றி எச்சரிக்கை

பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் smart கண்ணாடிகள், இப்போது நாடு தழுவிய அளவில் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த smart...

வீடியோக்களை பதிவு செய்யக்கூடிய smart கண்ணாடிகள் பற்றி எச்சரிக்கை

பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் smart கண்ணாடிகள், இப்போது நாடு தழுவிய அளவில் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த smart...

இந்தோனேசிய துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் இயற்கை சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் மேலும் சுமார் 8 பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த ஐந்து...