Newsஇலங்கையில் முதலாவது டெஸ்ட் போட்டியை ஷேன் வோர்னின் நினைவாக நடாத்த தீர்மானம்!

இலங்கையில் முதலாவது டெஸ்ட் போட்டியை ஷேன் வோர்னின் நினைவாக நடாத்த தீர்மானம்!

-

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியை கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வோர்னின் நினைவாக நடாத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சுற்றுலா அமைச்சுடன் இணைந்து தீர்மானித்துள்ளது.

கிரிகெட் உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷேன் வோர்ன் இந்த ஆண்டு மார்ச் மாதம் காலமானார், இது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியது.

ஷேன் வோர்ன் கிரிகெட் களத்தில் இலங்கையின் கடுமையான போட்டியாளர்களில் ஒருவராகவும், அதற்கு வெளியே ஒரு அன்பான நண்பராகவும் இருந்துள்ளார். 2004 இல் சுனாமி பேரழிவைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் அவர் ஒரு முக்கிய நபராக இருந்தார்.

இலங்கை மற்றும் சுற்றுலா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது.

வோர்ன் நினைவு டெஸ்ட் போட்டியில் வோர்னின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் சபை உறுதி செய்துள்ளதாக இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

Latest news

Pocket Money-ஐ சேமிக்கும் குழந்தைகள் – ஆய்வில் தகவல்

ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான டாலர்களை பாக்கெட் மணியாக சேமித்து வைப்பதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நாட்டில் உள்ள பிள்ளைகள்...

ஆஸ்திரேலியர்களின் முக்கிய கவலைகளில் ஒன்றாக மாறியுள்ள வீட்டுக் காப்பீடு

ஆஸ்திரேலியர்களுக்கு வீட்டுக் காப்பீடு முதன்மையான பிரச்சனையாக மாறியுள்ளது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. வீட்டுக் காப்பீட்டு நிறுவனங்களை மாற்றுவதன் மூலம் நூற்றுக்கணக்கான டாலர்களைச் சேமிக்க முடியும்...

ஜெர்மனிக்கு சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவின் மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு பயணித்த இந்திய விமானம் வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து,...

கடத்தப்பட்ட விசாரணைக்கு சென்ற போலீஸ் கார்

நியூ சவுத் வேல்ஸின் நரோமைன் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல்துறை அதிகாரிகளின் காரை யாரோ திருடிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை...

ஜெர்மனிக்கு சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவின் மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு பயணித்த இந்திய விமானம் வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து,...

கடத்தப்பட்ட விசாரணைக்கு சென்ற போலீஸ் கார்

நியூ சவுத் வேல்ஸின் நரோமைன் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல்துறை அதிகாரிகளின் காரை யாரோ திருடிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை...