Newsஇலங்கையில் முதலாவது டெஸ்ட் போட்டியை ஷேன் வோர்னின் நினைவாக நடாத்த தீர்மானம்!

இலங்கையில் முதலாவது டெஸ்ட் போட்டியை ஷேன் வோர்னின் நினைவாக நடாத்த தீர்மானம்!

-

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியை கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வோர்னின் நினைவாக நடாத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சுற்றுலா அமைச்சுடன் இணைந்து தீர்மானித்துள்ளது.

கிரிகெட் உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷேன் வோர்ன் இந்த ஆண்டு மார்ச் மாதம் காலமானார், இது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியது.

ஷேன் வோர்ன் கிரிகெட் களத்தில் இலங்கையின் கடுமையான போட்டியாளர்களில் ஒருவராகவும், அதற்கு வெளியே ஒரு அன்பான நண்பராகவும் இருந்துள்ளார். 2004 இல் சுனாமி பேரழிவைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் அவர் ஒரு முக்கிய நபராக இருந்தார்.

இலங்கை மற்றும் சுற்றுலா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது.

வோர்ன் நினைவு டெஸ்ட் போட்டியில் வோர்னின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் சபை உறுதி செய்துள்ளதாக இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

Latest news

Invasion Day குண்டுவெடிப்பு குறித்த விமர்சனங்களுக்கு போலீஸ் கமிஷனர் பதில்

பெர்த்தில் நடந்த படையெடுப்பு தின ஆர்ப்பாட்டத்தின் மீதான குண்டுவெடிப்பை கையாண்டதற்காக மேற்கு ஆஸ்திரேலிய காவல்துறை கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபருக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுகளை முன்வைக்க 9...

எடை இழப்பு மருந்துகள் பற்றி எச்சரிக்கை

உணவுக் கோளாறு குழுக்கள் GLP-1 வகை எடை இழப்பு மருந்துகளின் விரைவான பிரபலம் குறித்து எச்சரிப்பதாகக் கூறப்படுகிறது. எடை இழப்பு சந்தைப்படுத்தல் வேண்டுமென்றே பாதிக்கப்படக்கூடிய மக்களை குறிவைப்பதாக...

இந்தோனேசியாவுடன் ஒரு முக்கியமான ஒப்பந்தத்திற்கு தயாராகும் பிரதமர் அல்பானீஸ்

இந்தோனேசியாவுடன் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தயாராகி வருகிறார். நேற்று இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிற்கு விஜயம் செய்த பிரதமரை, அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோ...

பாகிஸ்தானில் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தின் ஷேசாத் நகர் பகுதியிலுள்ள ஷியா பள்ளிவாசலில் நேற்று (06) வெடிகுண்டு வெடித்ததில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பள்ளிவாசலில் நேற்று தொழுகை நடந்துகொண்டிருந்தபோது, உடலில்...

பாகிஸ்தானில் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தின் ஷேசாத் நகர் பகுதியிலுள்ள ஷியா பள்ளிவாசலில் நேற்று (06) வெடிகுண்டு வெடித்ததில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பள்ளிவாசலில் நேற்று தொழுகை நடந்துகொண்டிருந்தபோது, உடலில்...

“அடுத்த சில மாதங்கள் அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமான நேரம்” – அரசியல் ஆய்வாளர்கள்

அடுத்த சில மாதங்கள் ஆஸ்திரேலிய பொருளாளர் ஜிம் சால்மர்ஸுக்கு ஒரு முக்கியமான நேரமாக இருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பொருளாதார சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் அவரது திறமையும்,...