Melbourneஇறைச்சியால் பார்வையை இழக்கும் அளவு ஆபத்து - ஆஸ்திரேலியா ஆய்வில் அதிர்ச்சி...

இறைச்சியால் பார்வையை இழக்கும் அளவு ஆபத்து – ஆஸ்திரேலியா ஆய்வில் அதிர்ச்சி தகவல்

-

இறைச்சியின் தரம் மற்றும் அதை வேக வைக்கும் கால அளவு ஆகிய இரண்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வின் பின்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஃபிலிண்டர்ஸ் பல்கலைக்கழகம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. அதாவது பூனையின் மலத்தில் இருந்து வெளியேறும் தொற்றுகள் மற்றும் வேக வைக்காத இறைச்சி ஆகியவற்றில் டோஸோபிளாஸ்மா கோண்டி என்ற பாராசைட் உள்ளது.

இது கண் பார்வையை இழக்க வழிவகை செய்யும். ஆஸ்திரேலியாவில் 15 நபரில் ஒருவருக்கு இத்தகைய பிரச்சினை இருக்கிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 5,000 மக்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், டோஸோபிளாஸ்மா என்பது மனிதர்களின் கண் பார்வையை இழக்க வைக்கிறது என்பது தெரிய வருகிறது. இந்த பாராசைட்கள், கருவுற்ற தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு பரவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு பாராசைட் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதை பின்வரும் அறிகுறிகளைப் பொருத்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். காய்ச்சல், வீக்கம் அடைந்த விழித்திரை, தசைகளில் வலி, தலைவலி, கல்லீரல் அல்லது மண்ணீரல் வீக்கம் போன்ற பிரச்சினைகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்ற சில வகை விலங்கு இறைச்சிகளில் டிரிச்சினெல்லா என்னும் தொற்று இருக்கும். முறையாக சமைக்காத அல்லது வேக வைக்கப்படாத இறைச்சியை நீங்கள் சாப்பிடும்போது இந்த தொற்று உங்களுக்கு பரவும்.

முறையாக வேக வைக்காத அல்லது பச்சையாக உள்ள இறைச்சியை நீங்கள் சாப்பிடும்போது லிஸ்டேரியா, இ-கோலி, கேம்பிலோபேக்டர் போன்ற பாக்டீரியா தொற்று ஏற்பட்டு, அதன் காரணமாக வயிற்றுப்போக்கு உண்டாகும்.

நீங்கள் சாப்பிடுவதற்காக வாங்கும் இறைச்சி புதியதாக, முறையாக சுத்தம் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். அதை நன்றாக வேக வைக்க வேண்டும். சிலர் அரைகுறையாக வேக வைக்கப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதில் விருப்பம் உள்ளவராக இருப்பார்கள். அப்படி சாப்பிடும்போது தொற்று பரவக் கூடும்.

இந்த தொற்றானது சக மனிதர்களுக்கும் பரவக் கூடும். ஆகவே கவனமுடன் இருக்க வேண்டும். முறையாக வேக வைக்கப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதே உடலுக்கு ஆரோக்கியம் தரும் விஷயம் ஆகும்.

Latest news

Video Game விளையாடியதற்காக விக்டோரிய நபருக்கு சிறைத்தண்டனை

விக்டோரியாவில் Video Game ஒன்றை உருவாக்கி விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 32 வயதான அந்த நபர், குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்தை உருவகப்படுத்தும் ஆன்லைன்...

ஆஸ்திரேலியாவில் மேலும் உயரும் வீட்டு விலைகள்

நேற்று வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆராய்ச்சி அறிக்கை, கடந்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் ஒரு வீட்டின் சராசரி விலை சுமார் $230,000 அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. கோர்லாஜிக்கின்...

கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக குழந்தை பெற்ற பெண்

கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமான குழந்தை பிறப்பு ஐக்கிய இராச்சியத்திலிருந்து பதிவாகியுள்ளது. இங்கிலாந்தில் இதுபோன்ற ஒரு அதிசயம் நிகழ்ந்தது இதுவே முதல் முறை என்று...

சீனா மீது விதிக்கப்பட்ட வரிகளால் ஆஸ்திரேலியாவும் கடுமையாகப் பாதிப்பு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை இன்று காலை வர்த்தகத்தின் தொடக்கத்தில் கடும் சரிவைச் சந்தித்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்புகளால் ஆஸ்திரேலிய பங்குச் சந்தை மேலும்...

சீனா மீது விதிக்கப்பட்ட வரிகளால் ஆஸ்திரேலியாவும் கடுமையாகப் பாதிப்பு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை இன்று காலை வர்த்தகத்தின் தொடக்கத்தில் கடும் சரிவைச் சந்தித்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்புகளால் ஆஸ்திரேலிய பங்குச் சந்தை மேலும்...

Nightclub-இன் கூரை இடிந்து விழுந்ததில் 79 பேர் உயிரிழப்பு

ஒரு பெரிய இசை நிகழ்ச்சியின் போது பிரபலமான இரவு விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் 79 பேர் உயிரிழந்தனர். அரசியல்வாதிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட பிரபலங்கள்...