Melbourneஇறைச்சியால் பார்வையை இழக்கும் அளவு ஆபத்து - ஆஸ்திரேலியா ஆய்வில் அதிர்ச்சி...

இறைச்சியால் பார்வையை இழக்கும் அளவு ஆபத்து – ஆஸ்திரேலியா ஆய்வில் அதிர்ச்சி தகவல்

-

இறைச்சியின் தரம் மற்றும் அதை வேக வைக்கும் கால அளவு ஆகிய இரண்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வின் பின்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஃபிலிண்டர்ஸ் பல்கலைக்கழகம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. அதாவது பூனையின் மலத்தில் இருந்து வெளியேறும் தொற்றுகள் மற்றும் வேக வைக்காத இறைச்சி ஆகியவற்றில் டோஸோபிளாஸ்மா கோண்டி என்ற பாராசைட் உள்ளது.

இது கண் பார்வையை இழக்க வழிவகை செய்யும். ஆஸ்திரேலியாவில் 15 நபரில் ஒருவருக்கு இத்தகைய பிரச்சினை இருக்கிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 5,000 மக்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், டோஸோபிளாஸ்மா என்பது மனிதர்களின் கண் பார்வையை இழக்க வைக்கிறது என்பது தெரிய வருகிறது. இந்த பாராசைட்கள், கருவுற்ற தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு பரவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு பாராசைட் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதை பின்வரும் அறிகுறிகளைப் பொருத்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். காய்ச்சல், வீக்கம் அடைந்த விழித்திரை, தசைகளில் வலி, தலைவலி, கல்லீரல் அல்லது மண்ணீரல் வீக்கம் போன்ற பிரச்சினைகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்ற சில வகை விலங்கு இறைச்சிகளில் டிரிச்சினெல்லா என்னும் தொற்று இருக்கும். முறையாக சமைக்காத அல்லது வேக வைக்கப்படாத இறைச்சியை நீங்கள் சாப்பிடும்போது இந்த தொற்று உங்களுக்கு பரவும்.

முறையாக வேக வைக்காத அல்லது பச்சையாக உள்ள இறைச்சியை நீங்கள் சாப்பிடும்போது லிஸ்டேரியா, இ-கோலி, கேம்பிலோபேக்டர் போன்ற பாக்டீரியா தொற்று ஏற்பட்டு, அதன் காரணமாக வயிற்றுப்போக்கு உண்டாகும்.

நீங்கள் சாப்பிடுவதற்காக வாங்கும் இறைச்சி புதியதாக, முறையாக சுத்தம் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். அதை நன்றாக வேக வைக்க வேண்டும். சிலர் அரைகுறையாக வேக வைக்கப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதில் விருப்பம் உள்ளவராக இருப்பார்கள். அப்படி சாப்பிடும்போது தொற்று பரவக் கூடும்.

இந்த தொற்றானது சக மனிதர்களுக்கும் பரவக் கூடும். ஆகவே கவனமுடன் இருக்க வேண்டும். முறையாக வேக வைக்கப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதே உடலுக்கு ஆரோக்கியம் தரும் விஷயம் ஆகும்.

Latest news

உக்ரைன் – ரஷ்ய போர் – ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் உயிரிழப்பு

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு...

நாய் தாக்கினால் அஞ்சல் விநியோகம் இல்லை – Australia Post

கிறிஸ்துமஸ் பருவத்திற்கு முன்னதாக, செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை முறையாகப் பாதுகாக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் வலியுறுத்துகிறது. பணியில் இருக்கும்போது அஞ்சல் ஊழியர்கள் மீது நாய் தாக்குதல்கள் வியத்தகு...

Heard தீவில் வைரஸ் உறுதி – ஆஸ்திரேலியாவிற்கும் ஆபத்து

H5 பறவைக் காய்ச்சல் வைரஸ் Heard தீவை அடைந்ததை அதிகாரிகள் முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளனர். இறந்த யானை முத்திரைகளின் மாதிரிகளை பரிசோதித்த பிறகு, விஞ்ஞானிகள் தீவில்...

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு

2025 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் "அதிகாரப்பூர்வமற்ற தேசிய உணவாக" Hot Chips பெயரிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் டெலிவரி மற்றும் ஆர்டர் புள்ளிவிவரங்களை பதிவு செய்த புதிதாக வெளியிடப்பட்ட...

Uber Eats மற்றும் Menulog ஒப்பந்தத்தால் யார் பயனடைவார்கள்?

ஆஸ்திரேலிய சேவையான Menulog மற்றும் Uber Eats இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. நவம்பர் 26 ஆம் திகதி நள்ளிரவில் Menulog முடிந்த பிறகு, வாடிக்கையாளர்கள் Uber...

ஆஸ்திரேலிய சபையில் புர்கா அணிந்து வந்த தலைவரால் பரபரப்பு

ஆஸ்திரேலிய செனட் சபையில் பெண் தலைவர் புர்கா அணிந்து வந்தது சீற்றத்தைத் தூண்டியது. One Nation தலைவர் பவுலின் ஹான்சன், செனட் சபைக்கு கருப்பு புர்கா மற்றும்...