Melbourneஇறைச்சியால் பார்வையை இழக்கும் அளவு ஆபத்து - ஆஸ்திரேலியா ஆய்வில் அதிர்ச்சி...

இறைச்சியால் பார்வையை இழக்கும் அளவு ஆபத்து – ஆஸ்திரேலியா ஆய்வில் அதிர்ச்சி தகவல்

-

இறைச்சியின் தரம் மற்றும் அதை வேக வைக்கும் கால அளவு ஆகிய இரண்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வின் பின்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஃபிலிண்டர்ஸ் பல்கலைக்கழகம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. அதாவது பூனையின் மலத்தில் இருந்து வெளியேறும் தொற்றுகள் மற்றும் வேக வைக்காத இறைச்சி ஆகியவற்றில் டோஸோபிளாஸ்மா கோண்டி என்ற பாராசைட் உள்ளது.

இது கண் பார்வையை இழக்க வழிவகை செய்யும். ஆஸ்திரேலியாவில் 15 நபரில் ஒருவருக்கு இத்தகைய பிரச்சினை இருக்கிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 5,000 மக்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், டோஸோபிளாஸ்மா என்பது மனிதர்களின் கண் பார்வையை இழக்க வைக்கிறது என்பது தெரிய வருகிறது. இந்த பாராசைட்கள், கருவுற்ற தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு பரவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு பாராசைட் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதை பின்வரும் அறிகுறிகளைப் பொருத்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். காய்ச்சல், வீக்கம் அடைந்த விழித்திரை, தசைகளில் வலி, தலைவலி, கல்லீரல் அல்லது மண்ணீரல் வீக்கம் போன்ற பிரச்சினைகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்ற சில வகை விலங்கு இறைச்சிகளில் டிரிச்சினெல்லா என்னும் தொற்று இருக்கும். முறையாக சமைக்காத அல்லது வேக வைக்கப்படாத இறைச்சியை நீங்கள் சாப்பிடும்போது இந்த தொற்று உங்களுக்கு பரவும்.

முறையாக வேக வைக்காத அல்லது பச்சையாக உள்ள இறைச்சியை நீங்கள் சாப்பிடும்போது லிஸ்டேரியா, இ-கோலி, கேம்பிலோபேக்டர் போன்ற பாக்டீரியா தொற்று ஏற்பட்டு, அதன் காரணமாக வயிற்றுப்போக்கு உண்டாகும்.

நீங்கள் சாப்பிடுவதற்காக வாங்கும் இறைச்சி புதியதாக, முறையாக சுத்தம் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். அதை நன்றாக வேக வைக்க வேண்டும். சிலர் அரைகுறையாக வேக வைக்கப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதில் விருப்பம் உள்ளவராக இருப்பார்கள். அப்படி சாப்பிடும்போது தொற்று பரவக் கூடும்.

இந்த தொற்றானது சக மனிதர்களுக்கும் பரவக் கூடும். ஆகவே கவனமுடன் இருக்க வேண்டும். முறையாக வேக வைக்கப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதே உடலுக்கு ஆரோக்கியம் தரும் விஷயம் ஆகும்.

Latest news

ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் அதிகரித்துள்ள விதம்!

வட்டி விகிதக் குறைப்புகளால், ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றன. PropTrack இன் சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை வேகமாக விலை வளர்ச்சியைக்...

வாகனங்களில் நாய்களை ஏற்றிச் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்க்க ஆலோசனை.

செல்ல நாய்கள் காரில் எங்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பதைப் பொறுத்து அபராதம் விதிக்கப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆஸ்திரேலியர்கள் தங்கள் செல்ல நாயை காரில் ஏற்றிக்கொண்டு...

மூன்று பேரின் DNA-வில் இருந்து பிறந்த நோயற்ற குழந்தைகள்

உலகில் முதல்முறையாக, மூன்று பேரின் DNAவைப் பயன்படுத்தி எட்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த பரிசோதனையை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மருத்துவர்கள் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தியதாக...

கம்போடியாவில் இணையக் குற்றங்களில் ஈடுபட்ட 1,000 பேர் கைது

கம்போடியாவில் இணைய மோசடி செயல்களை மேற்கொள்ளும் நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 1,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்போடிய பொலிஸார் கடந்த 16ம் திகதி இத்தகவலை வெளியிட்டுள்ளனர். இணைய...

வாகனங்களில் நாய்களை ஏற்றிச் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்க்க ஆலோசனை.

செல்ல நாய்கள் காரில் எங்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பதைப் பொறுத்து அபராதம் விதிக்கப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆஸ்திரேலியர்கள் தங்கள் செல்ல நாயை காரில் ஏற்றிக்கொண்டு...

மூன்று பேரின் DNA-வில் இருந்து பிறந்த நோயற்ற குழந்தைகள்

உலகில் முதல்முறையாக, மூன்று பேரின் DNAவைப் பயன்படுத்தி எட்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த பரிசோதனையை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மருத்துவர்கள் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தியதாக...