News முதல் முறையாக நேரில் சந்தித்துக் கொண்ட சீன-ஆஸ்திரேலிய அமைச்சர்கள்!

முதல் முறையாக நேரில் சந்தித்துக் கொண்ட சீன-ஆஸ்திரேலிய அமைச்சர்கள்!

-

ஆஸ்திரேலிய, சீனத் தற்காப்பு அமைச்சர்கள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சிங்கப்பூரில் சந்தித்து பேச்சு நடத்தினர். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மோசமடைந்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு முக்கிய முன் னேற்றப்படி என வருணிக்கப் படுகிறது.

“வெளிப்படையான முழுமையான கருத்து பரிமாற்றத்திற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. ஆஸ்திரேலியாவின் அக்கறைக்குரிய பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி யிருந்தேன்,” என்று ஆஸ்திரேலிய தற்காப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் தெரிவித்தார்.

இருதரப்புக்கும் இடையே நடை பெற்ற சந்திப்பை அவர் நேற்று செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.

சிங்கப்பூரில் நடைபெறும் ஷங்ரிலா மாநாட்டையொட்டி மார்ல்சும் சீன தற்காப்பு அமைச்சர் வெய் ஃபெங்கியும் சந்தித்தனர். சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் கலந்துரையாடினர். தற்போதையக் காலக்கட்டத்தில் வெளிப்படையாக உரையாடுவது முக்கியம் என்று துணைப் பிரதமரு மான திரு மார்ல்ஸ் குறிப்பிட்டார்.

“ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு சிக்கலானது. அதற்கு நேரில் சந்தித்து பேசுவதே நல்லது” என்றும் அவர் சொன்னார். ஆனால் இந்தச் சந்திப்பு பற்றி சீன அரசாங்கமோ ஜெனரல் வெய்யோ உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

கொவிட்-19 கிருமி உருவான இடத்தைக் கண்டுபிடிக்க தன்னிச் சையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் வலியுறுத்தினார்.

இது, சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியாவில் ‘5ஜி’ கட்டமைப்பை உருவாக்க சீனாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவெய்யுக்கு தடை விதிக்கப் பட்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் மோசம் அடைந்தது.

Latest news

மேலும் 9 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது அமேசான் நிறுவனம்

கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை கடந்த ஆண்டு...

உலகில் மிக மகிழ்ச்சியாக வாழும் மக்கள்!

உலகின் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடாக பின்லாந்து தெரிவாகியுள்ளது. இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை டென்மார்க்கும், மூன்றாவது இடத்தை...

கரடியை கட்டிப்பிடிக்கும் வேலைக்கு ஆட்கள் தேவை

அமெரிக்காவில், “கருப்பு கரடியை கட்டிப்பிடித்து பராமரிக்க ஆட்கள் தேவை” என, வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியு...

491 விசாவிற்கான விண்ணப்பிக்க மெல்போர்ன் பெருநகரப் பகுதிக்கு வாய்ப்பு

Skilled Work Regional (subclass 491) விசா நியமனத்திற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு மெல்போர்ன் பெருநகரப் பகுதியில் வசிப்பவர்களுக்கும் கிடைக்கிறது.

குயின்ஸ்லாந்து வீட்டு வாடகைக்கான அதிகபட்ச மதிப்பை நிர்ணயிக்க தீர்மானம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நிலவும் வீட்டு வாடகை பிரச்சனையை தீர்க்கும் வகையில் வீட்டு வாடகைக்கு அதிகபட்ச மதிப்பை நிர்ணயிப்பதில் மாநில அரசு கவனம் செலுத்தியுள்ளது.

உலகெங்கிலும் உள்ள Ferrari உரிமையாளர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் வெளிப்படும் அபாயம்

உலகப் புகழ்பெற்ற கார் நிறுவனமான Ferrariயின் அதிகாரப்பூர்வ இணையதளம் சைபர் தாக்குதலால் தாக்கப்பட்டுள்ளது. தாக்கிய தரப்பினரும் கப்பம் கேட்டுள்ளதாக...