படப்பிடிப்பில் இதயத் துடிப்பு அதிகரித்து மயங்கி விழுந்த தீபிகா படுகோன்…உண்மையில் நடந்தது என்ன?

0
215

பிரபல பேட்மிண்டன் வீரரான பிரகாஷ் படுகோனேவின் மகளான தீபிகா படுகோன் (36), திரைத்துரையில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வருகிறார். மாடலாக தனது வாழ்க்கையை துவங்கிய அவர், பின்னர் விளம்பரத்துறையிலும் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2006-ம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான ‘ஐஸ்வர்யா’ என்ற திரைப்படத்தில் உபேந்திராவின் ஜோடியாக தனது திரையுலக பயணத்தை துவங்கிய அவர், 2007-ம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையானார்.

தற்போது பிரம்மாண்ட பொருட்செலவில் நாக் அஸ்வின் இயக்கி வரும் ‘புரொஜெக்ட் கே’ படத்தில் பிரபாஸின் ஜோடியாக தீபிகா படுகோன் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வரும்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென இதயத்துடிப்பு அதிகரித்து தீபிகா படுகோன் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து படக்குழு அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள காமினேனி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்துள்ளனர். இதனால் அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் அடைந்து, இதயத் துடிப்பு சீரானதையடுத்து சிறிது ஓய்வெடுத்தப் பின் மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்கு திரும்பியுள்ளார் என கூறப்பட்டது.

இதனால் தீபிகாவின் உடல்நிலைக்கு என்ன ஆனது என்பது பற்றி விசாரித்த போது, இதயத்துடிப்பு அதிகரித்ததாகவும் அதனால் தீபிகா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என தெரிய வந்துள்ளது. தான் நலமுடன் இருப்பதாகவும், தனது உடல்நிலையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தீபிகா படுகோன் விளக்கம் அளித்துள்ளார்.

Previous articleதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் தொடர்…இந்தியாவிற்கு முதல் வெற்றி
Next articleஆஸ்திரேலியர்களுக்கு அதிகரிக்கும் சம்பளம் – கொடுத்த வாக்கினை நிறைவேற்றும் பிரதமர்