Newsஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் அகதி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் அகதி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு

-

மேற்கு ஆஸ்திரேலியாவின் அகதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Yongah Hill குடிவரவு தடுப்புமுகாமிலிருந்த குறித்த இளைஞர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.

துருக்கிய பின்னணி கொண்ட 32 வயது இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞர் துருக்கிக்கு நாடுகடத்தப்படும்நோக்கில், கடந்த 3 ஆண்டுகளாக பெர்த்திற்கு அருகிலுள்ள இத்தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்ததாக Refugee Action Coalition தெரிவித்துள்ளது.

நேற்றிரவு குறித்த தடுப்புமுகாமிலிருந்த மற்றொரு நபருடன் ஏற்பட்ட மோதலின்போதே இவ்விளைஞர் கத்திக்குத்துக்கு இலக்கானதாக குறிப்பிடப்படுகிறது.

தடுப்புமுகாமிலுள்ள பெரும்பாலானவர்களின் விசாக்கள் குடிவரவுச்சட்டம் பிரிவு 501-இன் கீழ் நடத்தை(Character) அடிப்படையில் ரத்துசெய்யப்பட்டு நாடுகடத்தப்படும் நோக்கில் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய நீதி அமைப்பின் கீழ், குற்றம் இழைத்தவர்கள் அதற்கான தண்டனையை அனுபவித்த பின் விடுவிக்கப்படுவதாகவும், ஆனால் குடிவரவு தடுப்புமுகாமைப் பொறுத்தவரை அதற்கு வழியில்லை எனவும், காலவரையறையின்றி தடுத்துவைக்கப்படும் பலர் தற்கொலை, கொலை போன்றவற்றினால் தமது உயிர்களைக்கூட இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் Refugee Action Coalition-இன் Ian Rintoul தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய குடிவரவு தடுப்புமுகாம்களில் இடம்பெறும் தற்கொலைச் சம்பவங்கள், தற்கொலை முயற்சிகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Latest news

கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய AI தொழில்நுட்பம்

செய்யறிவு தொழில்நுட்பங்கள் தற்போது அதிக வளர்ச்சியைக் கண்டு, பல வகையான செய்யறிவு தொழில்நுட்பங்கள் இப்போது இணையத்தில் பயன்பாட்டில் உள்ளன. அந்த வரிசையில் கூகுள் நிறுவனம் தனது...

2024 இல் ஆஸ்திரேலிய நுகர்வோர் சட்டத்தை மீறுபவர்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள்

ஆன்லைன் விளம்பரங்களில் ஃபேஷன் நட்சத்திரங்களைச் சித்தரிப்பதால் நுகர்வோர் தவறாக வழிநடத்தப்படுவதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் ஃபேஷன் நட்சத்திரங்களின் 118 சமூக ஊடக கணக்குகளை...

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய விக்டோரியன் புற்றுநோய் பதிவேட்டின் தரவுகளின்படி, குறைந்தது 6660 விக்டோரியர்கள் கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்று...

பணவீக்கத்திற்கு முதன்மைக் காரணம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகப்படியான செலவுதான்

மத்திய அரசு - மாநில மற்றும் உள்ளூர் அரசுகளின் அதிகப்படியான செலவுகள் நாட்டின் பணவீக்கத்தை நேரடியாகப் பாதித்துள்ளதாக முன்னணி கடன் மதிப்பீட்டு நிறுவனம் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. கோவிட்...

மத்திய அரசுக்கும் விக்டோரியா அரசுக்கும் இடையே கருத்து மோதல்கள் – பல தேசிய பூங்காக்கள் ஆபத்தில்

முர்ரே-டார்லிங் பேசின் திட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கும் விக்டோரியா மாநில அரசுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் பல தேசிய பூங்காக்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளன. விக்டோரியா மாநிலத்தின் உயிரியல்...

பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பியவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி ஆதரவு சேவை

குடும்ப வன்முறை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்தில் இருந்து தப்பியவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் நிவாரணம் வழங்க புதிய ஆலோசனை சேவை தொடங்கப்பட்டுள்ளது. கிராமப்புற மற்றும் கடினமான பகுதிகளில் வசிக்கும்...