News2022 ம் ஆண்டில் கொரோனாவால் ஆஸ்திரேலியாவில் 15,000 பேர் உயிரிழக்கலாம்

2022 ம் ஆண்டில் கொரோனாவால் ஆஸ்திரேலியாவில் 15,000 பேர் உயிரிழக்கலாம்

-

கொரோனா பெரும் தொற்றால் 2022 ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் 15,000 பேர் வரை உயிரிழக்க நேரிடலாம் என மருத்துவத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதே சமயம் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதற்கு மேலும் அதிகரிக்கலாம் என கூறுகின்றனர்.

தற்போது நாட்டில் செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகரின் அளவு போதுமானதாக இல்லை. அதனால் அவற்றை அதிகரிக்க வேண்டும் என Burnet Institute பேராசிரியர் மார்க்கரெட் ஹெல்லர்ட் விக்டோரியா மற்றும் பெடரல் அரசுகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். தனது கணிப்பின்படி நாட்டில் நடப்பு ஆண்டில் 10,000 முதல் 15,000 வரை உயிரிழக்க நேரிடலாம் என்றும் எச்சரித்துள்ளார்.

ஆஸ்திரேயாவில் நோய் பரவலை 20 சதவீதம் குறைத்தாலே 2000 பேரின் உயிர்கள் காப்பாற்றப்படலாம். கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்புக்களை தடுக்க முகக்கவசம் அணிவதை மீண்டும் அறிமுகம் செய்தல், காற்றின் தரத்தை மேம்படுத்துதல், தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், வைரஸ் பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தலை கண்காணித்தல் ஆகியவையே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்றும் மார்கரெட் எச்சரித்துள்ளார்.

பேராசிரியர் Jodie McVernon தனது அறிக்கையில், ஆஸ்திரேலியாவில் போதிய அளவிற்கு தடுப்பூசிகளை கையிருப்பு வைக்காவிட்டால் அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பா போன்று ஆஸ்திரேலியாவிலும் திடீரென கொரோனா பரவல் வேகமெடுத்து, அதிக உயிரிழப்புக்கள் ஏற்படும் அபாய நிலை உருவாகலாம் என எச்சரித்துள்ளார்.

Latest news

முக்கிய விமான நிலையங்களில் தளர்த்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

அமெரிக்க விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளின் போது காலணிகளை அகற்ற வேண்டும் என்ற தேவை நீக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத் திருத்தத்தை உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோம்...

அமெரிக்காவில் மனிதாபிமானமின்றி செயல்படும் குடியேற்ற தடுப்பு மையம் 

அமெரிக்காவில் உள்ள ஒரு தற்காலிக தடுப்பு மையத்தில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் மனிதாபிமானமற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜனநாயகக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் புளோரிடாவின்...

சீனாவின் எஃகுத் தொழிலுக்கு உதவ பிரதமர் அல்பானீஸ் பேச்சுவார்த்தை

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் சீனாவிற்கு விஜயம் செய்யும் இரண்டாவது நாள் நேற்று ஆகும். முன்னாள் Socceroos starஉம், சீன கிளப்பான ஷாங்காய் துறைமுகத்தின் தற்போதைய மேலாளருமான அவர்,...

ஊடகங்களில் வெளியான ஒரு ரகசிய அரசாங்க அறிக்கை

வரிகளை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து, நிதியமைச்சர் Jim Chalmers தற்செயலாக பத்திரிகையாளர்களுக்கு ஒரு அறிக்கையை அனுப்பியதாக ஊடக அறிக்கைகள் பரவி வருகின்றன. அதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அரசாங்கம்...

உலக வல்லரசின் மீதான வரி உயர்வுக்குப் பிறகு டிரம்பை சந்திக்க ஆர்வமாக உள்ள ஆஸ்திரேலியா

மெக்ஸிகோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது டிரம்ப் புதிய வரிகளை விதிக்கும்போது, அவருடன் அரசாங்கம் ஈடுபட முயற்சிப்பதாக கருவூல செயலாளர் Jim Chalmers அறிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப்...

ஆசியாவின் வயதான யானை மரணம்

ஆசியாவின் வயதான யானையாகக் கருதப்படும் "வத்சலா" உயிரிழந்துள்ளது. வத்சலா இறக்கும் போது அவருக்கு 100 வயது ஆகும். வத்சலாவின் இறுதிச் சடங்குகள் இந்தியாவின் பன்னா புலிகள் காப்பகத்தில் உள்ள...