Newsஉக்ரேனிய தாய் மற்றும் குழந்தைகளுக்கு விசா வழங்க மறுக்கும் ஆஸ்திரேலியா!

உக்ரேனிய தாய் மற்றும் குழந்தைகளுக்கு விசா வழங்க மறுக்கும் ஆஸ்திரேலியா!

-

ஆஸ்திரேலியாவில் குடியேற முயற்சிக்கும் உக்ரேனிய தாய் மற்றும் குழந்தைகளுக்கு விசா வழங்க ஆஸ்திரேலிய அதிகாரிகள் மறுப்பதாக தெரியவந்துள்ளது.

உக்ரேனியரான Tatiana “Tanya” Kovalova வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள பகுதிகளை உக்ரேனிய படைகள் நெருங்கியுள்ளனர்.

இந்த நிலையில், பாதுகாப்புத் தேடி குழந்தைகளுடன் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய Tanya முயன்று வருகிறார்.

அவர்களுக்கான தங்குமிட செலவுகள் வாழ்க்கைச் செலவுகளையும் வழங்குவதாக 2 ஆஸ்திரேலிய மருத்துவர்கள் உறுதிப்பூண்டுள்ள போதிலும் அவர்களுக்கு விசா வழங்க ஆஸ்திரேலியா மறுத்தியிருக்கிறது.

“உக்ரேனில் போர் தொடங்கிய பொழுது, முதலில் பார்வையாளர் விசாவுக்கு விண்ணப்பித்து ஆஸ்திரேலியா வந்த பின் சிறப்பு அகதிகள் விசாவுக்கு விண்ணப்பிக்கக்கூடிய செயல்முறையை ஆஸ்திரேலியா வைத்திருந்தது.

ஆனால் கடந்த மூன்று முதல் நான்கு வாரங்களில் என்ன நடந்தது என்றால் உக்ரேனியர்கள் நீண்ட காலமாக தங்க எண்ணுகிறார்கள் என ஆஸ்திரேலிய அரசு கருதுகிறது.

அதனால் பார்வையாளர் விசா விதிகள் உக்ரேனியர்களுக்கு பொருந்தாது என அரசு தரப்பில் கூறப்படுகிறது,” என Tanya குடும்பத்திற்கு உதவும் ஆஸ்திரேலிய மருத்துவரான Baptista குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சூழலினால் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய எண்ணும் உக்ரேனியர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகவும் நிச்சயத்தன்மையற்ற நிலையில் அவர்கள் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Latest news

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...

பாலிக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு கடுமையான விதிகள்

பல ஆஸ்திரேலியர்கள் விடுமுறை கிடைத்தவுடன் பாலிக்குச் செல்ல ஆர்வமாக உள்ளனர். கடற்கரைக்குச் செல்ல MOPED அல்லது மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு எடுப்பது அவர்களுக்குப் பழக்கமாகிவிட்டது. ஆனால் பாலி அதிகாரிகள்...