Newsஉக்ரேனிய தாய் மற்றும் குழந்தைகளுக்கு விசா வழங்க மறுக்கும் ஆஸ்திரேலியா!

உக்ரேனிய தாய் மற்றும் குழந்தைகளுக்கு விசா வழங்க மறுக்கும் ஆஸ்திரேலியா!

-

ஆஸ்திரேலியாவில் குடியேற முயற்சிக்கும் உக்ரேனிய தாய் மற்றும் குழந்தைகளுக்கு விசா வழங்க ஆஸ்திரேலிய அதிகாரிகள் மறுப்பதாக தெரியவந்துள்ளது.

உக்ரேனியரான Tatiana “Tanya” Kovalova வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள பகுதிகளை உக்ரேனிய படைகள் நெருங்கியுள்ளனர்.

இந்த நிலையில், பாதுகாப்புத் தேடி குழந்தைகளுடன் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய Tanya முயன்று வருகிறார்.

அவர்களுக்கான தங்குமிட செலவுகள் வாழ்க்கைச் செலவுகளையும் வழங்குவதாக 2 ஆஸ்திரேலிய மருத்துவர்கள் உறுதிப்பூண்டுள்ள போதிலும் அவர்களுக்கு விசா வழங்க ஆஸ்திரேலியா மறுத்தியிருக்கிறது.

“உக்ரேனில் போர் தொடங்கிய பொழுது, முதலில் பார்வையாளர் விசாவுக்கு விண்ணப்பித்து ஆஸ்திரேலியா வந்த பின் சிறப்பு அகதிகள் விசாவுக்கு விண்ணப்பிக்கக்கூடிய செயல்முறையை ஆஸ்திரேலியா வைத்திருந்தது.

ஆனால் கடந்த மூன்று முதல் நான்கு வாரங்களில் என்ன நடந்தது என்றால் உக்ரேனியர்கள் நீண்ட காலமாக தங்க எண்ணுகிறார்கள் என ஆஸ்திரேலிய அரசு கருதுகிறது.

அதனால் பார்வையாளர் விசா விதிகள் உக்ரேனியர்களுக்கு பொருந்தாது என அரசு தரப்பில் கூறப்படுகிறது,” என Tanya குடும்பத்திற்கு உதவும் ஆஸ்திரேலிய மருத்துவரான Baptista குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சூழலினால் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய எண்ணும் உக்ரேனியர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகவும் நிச்சயத்தன்மையற்ற நிலையில் அவர்கள் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Latest news

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழியை வெளிப்படுத்தும் நுகர்வோர் ஆணையம்

கூடுதல் பணத்தை மிச்சப்படுத்த ஆஸ்திரேலியர்கள் எரிசக்தி சப்ளையர்களை மாற்றுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். தேசியத் தலைவர் டேவிட் லிட்டில்பிரவுட், எரிசக்தி விலைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், எரிசக்தி...

விக்டோரியாவில் அதிகரித்து வரும் கத்திக்குத்து சம்பவங்கள்

விக்டோரியாவில் 2025 டிசம்பர் பிற்பகுதியிலிருந்து தொடர்ச்சியான கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆறு நாட்களுக்கு முன்பு ஃபிட்ஸ்ராய் மற்றும் கிளைடில் நடந்த கத்திக்குத்து சம்பவங்களில் இரண்டு பேர் இறந்ததைத்...

குயின்ஸ்லாந்தில் 200மிமீக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

நூற்றுக்கணக்கான மில்லிமீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், குயின்ஸ்லாந்து மக்கள் திடீர் வெள்ளத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். Carpentaria வளைகுடாவிலிருந்து கிழக்கு கடற்கரை வரை மாநிலத்தின் முழு...

ஆயிரக்கணக்கான சட்டவிரோத மின்சார வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

குயின்ஸ்லாந்து முழுவதும் சட்டவிரோத மின்-ஸ்கூட்டர் மற்றும் மின்-பைக் பயன்பாட்டை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட நடவடிக்கையில் 2000க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் முதல் டிசம்பர் 23 வரை,...

குயின்ஸ்லாந்தில் 200மிமீக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

நூற்றுக்கணக்கான மில்லிமீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், குயின்ஸ்லாந்து மக்கள் திடீர் வெள்ளத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். Carpentaria வளைகுடாவிலிருந்து கிழக்கு கடற்கரை வரை மாநிலத்தின் முழு...

மருத்துவ மையத்தின் மீது பேருந்து மோதி விபத்து

சிட்னி வடக்கின் Rydeல் உள்ள ஒரு மருத்துவ மையத்தின் மீது பேருந்து மோதியதில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை 9...