Newsஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் - 10 லட்சம் ரூபாய் கொடுத்து படையெடுக்கும்...

ஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் – 10 லட்சம் ரூபாய் கொடுத்து படையெடுக்கும் இலங்கையர்கள்

-

கடந்த மூன்று வாரங்களில் இலங்கையிலிருந்து புறப்பட்ட சுமார் 350 இலங்கை அகதிகள், நடுக்கடலில் வழி மறித்து இலங்கைக் கடற்படையினரால் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றதையடுத்து இந்த நடவடிக்கை அதிகரித்துள்ளது.

ஒரு படகு ஆஸ்திரேலியாவைச் சென்றடைந்தபோதும் அதில் சென்றவர்கள் அனைவரும் விமானத்தில் ஏற்றி இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் போர் முடிவடைந்த கையோடு, வெளியேறிய தமிழ் அகதிகளைப்போல, தற்போது ஆஸ்திரேலியாவை நோக்கி பெரும் அகதி அலையொன்று வீசத்தொடங்கியிருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்படி அகதிப்படகுகளில் ஏறி ஆஸ்திரேலியாவுக்கு வர முயற்சித்தவர்கள் சிலரைத் தொடர்புகொண்டு ஆஸ்திரேலிய ஊடகங்கள் பேசியபோது – மட்டக்களப்பு மற்றும் இலங்கையின் குறிப்பிட்ட இரகசியமான கரையோரப் பகுதிகளிலிருந்து புறப்படும் அகதிப்படகுகள் 21 நாட்களில் ஆஸ்திரேலியாவைச் சென்றடைந்துவிடும் என்று கூறப்படுகிறது.

இதற்காக அகதியொருவரிடம் குறைந்தது – இலங்கைக் காசுக்கு – பத்து லட்சம் ரூபா (AUS $4000) ஏஜென்டுகளால் வாங்கப்படுகிறது என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.

கடந்த சில வாரங்களாக – கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் – அகதிப்படகுகள், இலங்கைக் கடற்பரப்பில் பிடிக்கப்படுகின்றன என்றும் நேற்று திருகோணமலையில் வைத்துப் பிடிக்கப்பட்ட படகில் யாழ்ப்பாணம் – முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்த ஐம்பது ஆண்களும் 11 பெண்களும் மூன்று குழந்தைகளும் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...