Newsஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் - 10 லட்சம் ரூபாய் கொடுத்து படையெடுக்கும்...

ஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் – 10 லட்சம் ரூபாய் கொடுத்து படையெடுக்கும் இலங்கையர்கள்

-

கடந்த மூன்று வாரங்களில் இலங்கையிலிருந்து புறப்பட்ட சுமார் 350 இலங்கை அகதிகள், நடுக்கடலில் வழி மறித்து இலங்கைக் கடற்படையினரால் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றதையடுத்து இந்த நடவடிக்கை அதிகரித்துள்ளது.

ஒரு படகு ஆஸ்திரேலியாவைச் சென்றடைந்தபோதும் அதில் சென்றவர்கள் அனைவரும் விமானத்தில் ஏற்றி இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் போர் முடிவடைந்த கையோடு, வெளியேறிய தமிழ் அகதிகளைப்போல, தற்போது ஆஸ்திரேலியாவை நோக்கி பெரும் அகதி அலையொன்று வீசத்தொடங்கியிருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்படி அகதிப்படகுகளில் ஏறி ஆஸ்திரேலியாவுக்கு வர முயற்சித்தவர்கள் சிலரைத் தொடர்புகொண்டு ஆஸ்திரேலிய ஊடகங்கள் பேசியபோது – மட்டக்களப்பு மற்றும் இலங்கையின் குறிப்பிட்ட இரகசியமான கரையோரப் பகுதிகளிலிருந்து புறப்படும் அகதிப்படகுகள் 21 நாட்களில் ஆஸ்திரேலியாவைச் சென்றடைந்துவிடும் என்று கூறப்படுகிறது.

இதற்காக அகதியொருவரிடம் குறைந்தது – இலங்கைக் காசுக்கு – பத்து லட்சம் ரூபா (AUS $4000) ஏஜென்டுகளால் வாங்கப்படுகிறது என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.

கடந்த சில வாரங்களாக – கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் – அகதிப்படகுகள், இலங்கைக் கடற்பரப்பில் பிடிக்கப்படுகின்றன என்றும் நேற்று திருகோணமலையில் வைத்துப் பிடிக்கப்பட்ட படகில் யாழ்ப்பாணம் – முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்த ஐம்பது ஆண்களும் 11 பெண்களும் மூன்று குழந்தைகளும் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

கிறிஸ்துமஸ் அட்டவணையை வெளியிட்டுள்ள FedEx

கிறிஸ்துமஸுக்கு முந்தைய டெலிவரிகளுக்கான Cut-off திகதிகளை FedEx வெளியிட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பார்சல்கள் சரியான நேரத்தில் வந்து சேருவதை உறுதிசெய்ய முன்கூட்டியே திட்டமிடுமாறு ஆஸ்திரேலியர்களுக்கு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. அடுத்த மாதம்...

ஆஸ்திரேலியாவின் நிதி அமைப்பு கட்டுப்பாட்டை மீறிச் செல்லுமா?

ஆஸ்திரேலியாவின் பண விநியோக முறை கடுமையான நெருக்கடியில் இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் மிஷேல் புல்லக் எச்சரித்துள்ளார். சைபர் ஹேக்கர்கள் Quantum Computing தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மறைகுறியாக்கப்பட்ட...

விக்டோரியா காவல்துறை கொலையாளியைத் தேட சிறப்புப் பணிக்குழு!

விக்டோரியா காவல்துறையின் கொலையாளி Desi Freeman-ஐ தேடும் பணியை ஒரு சிறப்புப் பணிக்குழு கையகப்படுத்தியுள்ளது. Taskforce Summit என்று அழைக்கப்படும் இந்த சிறப்புப் படை, Freeman-ஐ தேடும்...

வரி அறிவிப்புகளில் மாற்றம் – விக்டோரியாவிலிருந்து முதல் படி

வரி செலுத்துவோருக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் நோக்கில் விக்டோரியன் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட வரி அறிவிப்புச் சட்டங்கள் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும். அதன்படி, நவம்பர் 25,...

குடல் பிரச்சினைகளுக்கு புதிய காரணத்தைக் கண்டுபிடித்துள்ள மெல்பேர்ண் ஆராய்ச்சியாளர்கள்

ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் குளுட்டன் சகிப்புத்தன்மை குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தாது என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, FODMAPகள் எனப்படும் கார்போஹைட்ரேட்டுகளின் குழு, குளுட்டன் சகிப்புத்தன்மையால் ஏற்படும் குடல்...

விக்டோரியா காவல்துறை கொலையாளியைத் தேட சிறப்புப் பணிக்குழு!

விக்டோரியா காவல்துறையின் கொலையாளி Desi Freeman-ஐ தேடும் பணியை ஒரு சிறப்புப் பணிக்குழு கையகப்படுத்தியுள்ளது. Taskforce Summit என்று அழைக்கப்படும் இந்த சிறப்புப் படை, Freeman-ஐ தேடும்...