Newsஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் - 10 லட்சம் ரூபாய் கொடுத்து படையெடுக்கும்...

ஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் – 10 லட்சம் ரூபாய் கொடுத்து படையெடுக்கும் இலங்கையர்கள்

-

கடந்த மூன்று வாரங்களில் இலங்கையிலிருந்து புறப்பட்ட சுமார் 350 இலங்கை அகதிகள், நடுக்கடலில் வழி மறித்து இலங்கைக் கடற்படையினரால் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றதையடுத்து இந்த நடவடிக்கை அதிகரித்துள்ளது.

ஒரு படகு ஆஸ்திரேலியாவைச் சென்றடைந்தபோதும் அதில் சென்றவர்கள் அனைவரும் விமானத்தில் ஏற்றி இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் போர் முடிவடைந்த கையோடு, வெளியேறிய தமிழ் அகதிகளைப்போல, தற்போது ஆஸ்திரேலியாவை நோக்கி பெரும் அகதி அலையொன்று வீசத்தொடங்கியிருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்படி அகதிப்படகுகளில் ஏறி ஆஸ்திரேலியாவுக்கு வர முயற்சித்தவர்கள் சிலரைத் தொடர்புகொண்டு ஆஸ்திரேலிய ஊடகங்கள் பேசியபோது – மட்டக்களப்பு மற்றும் இலங்கையின் குறிப்பிட்ட இரகசியமான கரையோரப் பகுதிகளிலிருந்து புறப்படும் அகதிப்படகுகள் 21 நாட்களில் ஆஸ்திரேலியாவைச் சென்றடைந்துவிடும் என்று கூறப்படுகிறது.

இதற்காக அகதியொருவரிடம் குறைந்தது – இலங்கைக் காசுக்கு – பத்து லட்சம் ரூபா (AUS $4000) ஏஜென்டுகளால் வாங்கப்படுகிறது என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.

கடந்த சில வாரங்களாக – கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் – அகதிப்படகுகள், இலங்கைக் கடற்பரப்பில் பிடிக்கப்படுகின்றன என்றும் நேற்று திருகோணமலையில் வைத்துப் பிடிக்கப்பட்ட படகில் யாழ்ப்பாணம் – முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்த ஐம்பது ஆண்களும் 11 பெண்களும் மூன்று குழந்தைகளும் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

விக்டோரியாவின் வரலாற்று நினைவுச்சின்னங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு

விக்டோரியாவில் உள்ள அதிகாரிகள், மாநிலம் முழுவதும் மீண்டும் பரவி வரும் பேரழிவு தரும் காட்டுத்தீயிலிருந்து பாதுகாக்க, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களை தீ தடுப்பு பொருட்களால்...

ஆஸ்திரேலிய தினத்தை ஒட்டி நாடு முழுவதும் பல நகரங்களில் அணிவகுப்புகள்

நேற்று, ஆஸ்திரேலிய தினத்துடன் இணைந்து, ஆஸ்திரேலியா முழுவதும் பல நகரங்களில் படையெடுப்பு தின போராட்டங்கள் நடைபெற்றன. Sydney Cove-இல் பிரிட்டிஷ் கொடி ஏற்றப்பட்ட ஜனவரி 26 ஆம்...

விக்டோரியா காட்டுத்தீ காரணமாக 1,000 வீட்டு மக்கள் வெளியேற்றம்

தென்மேற்கு விக்டோரியாவில் காட்டுத்தீக்கு அருகில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இன்று மேலும் கடுமையான காட்டுத் தீ ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வானிலை ஆய்வு...

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு வீட்டு மின்சார நுகர்வுக்கான கட்டணங்கள் சுமார் 20% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த...

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு வீட்டு மின்சார நுகர்வுக்கான கட்டணங்கள் சுமார் 20% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த...

மிரட்டல் காரணமாக போராட்டக்காரர்கள் குழுவை கலைத்த போலீசார்

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் படையெடுப்பு தின ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவை போலீசார் கலைத்துள்ளனர். பொது ஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததால், போராட்டக்காரர்களை கலைக்க நடவடிக்கை...