News ஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் - 10 லட்சம் ரூபாய் கொடுத்து படையெடுக்கும்...

ஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் – 10 லட்சம் ரூபாய் கொடுத்து படையெடுக்கும் இலங்கையர்கள்

-

கடந்த மூன்று வாரங்களில் இலங்கையிலிருந்து புறப்பட்ட சுமார் 350 இலங்கை அகதிகள், நடுக்கடலில் வழி மறித்து இலங்கைக் கடற்படையினரால் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றதையடுத்து இந்த நடவடிக்கை அதிகரித்துள்ளது.

ஒரு படகு ஆஸ்திரேலியாவைச் சென்றடைந்தபோதும் அதில் சென்றவர்கள் அனைவரும் விமானத்தில் ஏற்றி இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் போர் முடிவடைந்த கையோடு, வெளியேறிய தமிழ் அகதிகளைப்போல, தற்போது ஆஸ்திரேலியாவை நோக்கி பெரும் அகதி அலையொன்று வீசத்தொடங்கியிருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்படி அகதிப்படகுகளில் ஏறி ஆஸ்திரேலியாவுக்கு வர முயற்சித்தவர்கள் சிலரைத் தொடர்புகொண்டு ஆஸ்திரேலிய ஊடகங்கள் பேசியபோது – மட்டக்களப்பு மற்றும் இலங்கையின் குறிப்பிட்ட இரகசியமான கரையோரப் பகுதிகளிலிருந்து புறப்படும் அகதிப்படகுகள் 21 நாட்களில் ஆஸ்திரேலியாவைச் சென்றடைந்துவிடும் என்று கூறப்படுகிறது.

இதற்காக அகதியொருவரிடம் குறைந்தது – இலங்கைக் காசுக்கு – பத்து லட்சம் ரூபா (AUS $4000) ஏஜென்டுகளால் வாங்கப்படுகிறது என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.

கடந்த சில வாரங்களாக – கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் – அகதிப்படகுகள், இலங்கைக் கடற்பரப்பில் பிடிக்கப்படுகின்றன என்றும் நேற்று திருகோணமலையில் வைத்துப் பிடிக்கப்பட்ட படகில் யாழ்ப்பாணம் – முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்த ஐம்பது ஆண்களும் 11 பெண்களும் மூன்று குழந்தைகளும் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

அதிகரிக்கப்படும் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதற்கான கொடுப்பனவு மற்றும் பணிக்கான போனஸ் இருப்பு தொகை

ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு தொடர்பான பல திருத்தங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, பணியாளர்களை விரிவுபடுத்தும் நோக்கில், தற்போது ஓய்வு...

சட்டவிரோத மின்-சிகரெட்டுகளை கட்டுப்படுத்த NSW முடிவு

சட்டவிரோத எலக்ட்ரானிக் சிகரெட் விற்பனை மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் சட்டங்களை கடுமையாக்க நியூ சவுத் வேல்ஸ் முடிவு செய்துள்ளது.

மெல்போர்னின் வடக்கே பல பகுதிகளில் லேசான நடுக்கம்

மெல்போர்னின் பல வடக்குப் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெல்போர்ன் சிபிடியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில்...

வாக்கெடுப்பில் “YES” முகாமுக்கான ஆதரவு சதவீதம் மேலும் குறைந்துள்ளது

சுதேசி ஹடா வாக்கெடுப்பில், YES முகாமுக்கான ஆதரவு சதவீதம் மேலும் குறைந்துள்ளது. நியூஸ்போல் நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்பில்,...

வடக்கு மாகாண முதலமைச்சரை தாக்கியதாக பெண் மீது குற்றம்

வடமாகாண முதலமைச்சர் நடாஷா ஃபைல்ஸ் தாக்கப்பட்டமை தொடர்பில் பெண் ஒருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 56 வயதுடைய...

உலகக் கோப்பை ரக்பியில் இருந்து வெளியேறிய ஆஸ்திரேலியா

ரக்பி உலகக் கோப்பையில் இருந்து ஆஸ்திரேலியா விலக வேண்டியதாயிற்று. அது வேல்ஸ் அணிக்கு எதிரான தோல்வியுடன்.