Newsஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் - 10 லட்சம் ரூபாய் கொடுத்து படையெடுக்கும்...

ஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் – 10 லட்சம் ரூபாய் கொடுத்து படையெடுக்கும் இலங்கையர்கள்

-

கடந்த மூன்று வாரங்களில் இலங்கையிலிருந்து புறப்பட்ட சுமார் 350 இலங்கை அகதிகள், நடுக்கடலில் வழி மறித்து இலங்கைக் கடற்படையினரால் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றதையடுத்து இந்த நடவடிக்கை அதிகரித்துள்ளது.

ஒரு படகு ஆஸ்திரேலியாவைச் சென்றடைந்தபோதும் அதில் சென்றவர்கள் அனைவரும் விமானத்தில் ஏற்றி இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் போர் முடிவடைந்த கையோடு, வெளியேறிய தமிழ் அகதிகளைப்போல, தற்போது ஆஸ்திரேலியாவை நோக்கி பெரும் அகதி அலையொன்று வீசத்தொடங்கியிருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்படி அகதிப்படகுகளில் ஏறி ஆஸ்திரேலியாவுக்கு வர முயற்சித்தவர்கள் சிலரைத் தொடர்புகொண்டு ஆஸ்திரேலிய ஊடகங்கள் பேசியபோது – மட்டக்களப்பு மற்றும் இலங்கையின் குறிப்பிட்ட இரகசியமான கரையோரப் பகுதிகளிலிருந்து புறப்படும் அகதிப்படகுகள் 21 நாட்களில் ஆஸ்திரேலியாவைச் சென்றடைந்துவிடும் என்று கூறப்படுகிறது.

இதற்காக அகதியொருவரிடம் குறைந்தது – இலங்கைக் காசுக்கு – பத்து லட்சம் ரூபா (AUS $4000) ஏஜென்டுகளால் வாங்கப்படுகிறது என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.

கடந்த சில வாரங்களாக – கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் – அகதிப்படகுகள், இலங்கைக் கடற்பரப்பில் பிடிக்கப்படுகின்றன என்றும் நேற்று திருகோணமலையில் வைத்துப் பிடிக்கப்பட்ட படகில் யாழ்ப்பாணம் – முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்த ஐம்பது ஆண்களும் 11 பெண்களும் மூன்று குழந்தைகளும் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...