News ஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் - 10 லட்சம் ரூபாய் கொடுத்து படையெடுக்கும்...

ஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் – 10 லட்சம் ரூபாய் கொடுத்து படையெடுக்கும் இலங்கையர்கள்

-

கடந்த மூன்று வாரங்களில் இலங்கையிலிருந்து புறப்பட்ட சுமார் 350 இலங்கை அகதிகள், நடுக்கடலில் வழி மறித்து இலங்கைக் கடற்படையினரால் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றதையடுத்து இந்த நடவடிக்கை அதிகரித்துள்ளது.

ஒரு படகு ஆஸ்திரேலியாவைச் சென்றடைந்தபோதும் அதில் சென்றவர்கள் அனைவரும் விமானத்தில் ஏற்றி இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் போர் முடிவடைந்த கையோடு, வெளியேறிய தமிழ் அகதிகளைப்போல, தற்போது ஆஸ்திரேலியாவை நோக்கி பெரும் அகதி அலையொன்று வீசத்தொடங்கியிருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்படி அகதிப்படகுகளில் ஏறி ஆஸ்திரேலியாவுக்கு வர முயற்சித்தவர்கள் சிலரைத் தொடர்புகொண்டு ஆஸ்திரேலிய ஊடகங்கள் பேசியபோது – மட்டக்களப்பு மற்றும் இலங்கையின் குறிப்பிட்ட இரகசியமான கரையோரப் பகுதிகளிலிருந்து புறப்படும் அகதிப்படகுகள் 21 நாட்களில் ஆஸ்திரேலியாவைச் சென்றடைந்துவிடும் என்று கூறப்படுகிறது.

இதற்காக அகதியொருவரிடம் குறைந்தது – இலங்கைக் காசுக்கு – பத்து லட்சம் ரூபா (AUS $4000) ஏஜென்டுகளால் வாங்கப்படுகிறது என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.

கடந்த சில வாரங்களாக – கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் – அகதிப்படகுகள், இலங்கைக் கடற்பரப்பில் பிடிக்கப்படுகின்றன என்றும் நேற்று திருகோணமலையில் வைத்துப் பிடிக்கப்பட்ட படகில் யாழ்ப்பாணம் – முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்த ஐம்பது ஆண்களும் 11 பெண்களும் மூன்று குழந்தைகளும் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

மேலும் 9 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது அமேசான் நிறுவனம்

கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை கடந்த ஆண்டு...

உலகில் மிக மகிழ்ச்சியாக வாழும் மக்கள்!

உலகின் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடாக பின்லாந்து தெரிவாகியுள்ளது. இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை டென்மார்க்கும், மூன்றாவது இடத்தை...

கரடியை கட்டிப்பிடிக்கும் வேலைக்கு ஆட்கள் தேவை

அமெரிக்காவில், “கருப்பு கரடியை கட்டிப்பிடித்து பராமரிக்க ஆட்கள் தேவை” என, வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியு...

491 விசாவிற்கான விண்ணப்பிக்க மெல்போர்ன் பெருநகரப் பகுதிக்கு வாய்ப்பு

Skilled Work Regional (subclass 491) விசா நியமனத்திற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு மெல்போர்ன் பெருநகரப் பகுதியில் வசிப்பவர்களுக்கும் கிடைக்கிறது.

குயின்ஸ்லாந்து வீட்டு வாடகைக்கான அதிகபட்ச மதிப்பை நிர்ணயிக்க தீர்மானம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நிலவும் வீட்டு வாடகை பிரச்சனையை தீர்க்கும் வகையில் வீட்டு வாடகைக்கு அதிகபட்ச மதிப்பை நிர்ணயிப்பதில் மாநில அரசு கவனம் செலுத்தியுள்ளது.

உலகெங்கிலும் உள்ள Ferrari உரிமையாளர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் வெளிப்படும் அபாயம்

உலகப் புகழ்பெற்ற கார் நிறுவனமான Ferrariயின் அதிகாரப்பூர்வ இணையதளம் சைபர் தாக்குதலால் தாக்கப்பட்டுள்ளது. தாக்கிய தரப்பினரும் கப்பம் கேட்டுள்ளதாக...