Newsஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் பிரவேசிக்கின்றவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்! இலங்கை சென்ற அமைச்சர்

ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் பிரவேசிக்கின்றவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்! இலங்கை சென்ற அமைச்சர்

-

இலங்கையில் இருந்து அதிக அளவான அகதிகள் படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு செல்கின்ற நிலையில், ஆஸ்திரேலிய புதிய அரசாங்கம் இலங்கைக்கு ஆஸ்திரேலியா தமது உள்துறை அமைச்சர் க்ளெயார் ஓநீலை இலங்கைக்கு அனுப்புகிறது.

இன்று இலங்கை வருகின்ற அவர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடுவார்.

அந்தநாட்டில் தேர்தல் நடைபெற்று புதிய அரசாங்கம் தெரிவானதன் பின்னர், இலங்கையில் இருந்து பல படகுகளில் அகதிகள் சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் எல்லையில் தடுக்கப்பட்டு ஆஸ்திரேலிய அதிகாரிகளால் நாடுகடத்தப்படுகின்றனர்.

இந்தநிலையில் படகுமூலம் ஆஸ்திரேலியாவுக்கு பிரவேசிக்கின்ற அனைவரும், அங்கு குடியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் உடனடியாக நாடுகடத்தப்படுவார்கள் என்றும் செய்தியை வழங்கும் வகையில், ஆஸ்திரேலியா தமது உள்துறை அமைச்சர் இலங்கைக்கு வருகின்றார்.

இதன்போது இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஆஸ்திரேலியாவால் எவ்வாறு உதவ முடியும் மற்றும் அகதிகள் படகுகளை தடுப்பதற்கான வழிகள் குறித்து அவதானம் செலுத்துவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Latest news

மனிதர்கள் இல்லாத AI Bots மட்டுமே உள்ள ஒரு புதிய சமூக ஊடக தளம்

மனிதர்கள் இல்லாமல், AI Bots மட்டுமே இருக்கும் ஒரு புதிய சமூக வலைப்பின்னல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . "Moltbook" என்று அழைக்கப்படும் இது, கடந்த வாரம் தொழில்நுட்ப தொழில்முனைவோர்...

விக்டோரியன் நாடாளுமன்றத்தில் இருந்து லிபரல் கட்சித் தலைவர் ராஜினாமா

முன்னாள் லிபரல் துணைத் தலைவர் சாம் க்ரோத் அடுத்த வாரம் விக்டோரியன் நாடாளுமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மற்ற வாய்ப்புகளைத் தொடரவே இந்த முடிவை எடுப்பதாக...

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக தடையை அறிமுகப்படுத்தும் மற்றுமொரு நாடு

ஸ்பெயினில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்யும் திட்டங்களை அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலம் பற்றிய மேலதிக...

புதிய தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களைக் கோரும் ஆஸ்திரேலிய தொழிற்சங்கங்கள்

மிகவும் வெப்பமான காலநிலையில் தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாக்க புதிய தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை அறிமுகப்படுத்த தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுக்கின்றன. வெப்பநிலை ஒரு குறிப்பிட்ட அளவை எட்டும்போது ஊழியர்கள்...

மெல்பேர்ண் தெருவிற்கு பெயர் மாற்றம் – எதிர்க்கும் குடியிருப்பாளர்கள்

மெல்பேர்ணின் வடக்கே உள்ள லாலரில் உள்ள Prince Andrew Avenue-இல் வசிப்பவர்கள், அதன் பெயரை மாற்றும் யோசனையை நிராகரித்துள்ளனர். இந்தத் தெருவுக்கு பல தசாப்தங்களாக முன்னாள் பிரிட்டிஷ்...

சட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வலையமைப்பின் உறுப்பினர்கள்

சிட்னியை தளமாகக் கொண்ட சிறுவர் துஷ்பிரயோக கும்பலின் உறுப்பினர்களை நீதியின் முன் நிறுத்த நியூ சவுத் வேல்ஸ் மாநில குற்றவியல் புலனாய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதன்படி, இதுவரை...