Newsஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்க 2068ஆம் ஆண்டு வரை காத்திருக்கும் பெண்?

ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்க 2068ஆம் ஆண்டு வரை காத்திருக்கும் பெண்?

-

ஆஸ்திரேலியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் வெளிநாட்டு பெண் குடியுரிமை பெற போராடி வருகின்றார்.

Nicole எனும் தென் ஆப்பிரிக்க பெண் ஆஸ்திரேலியாவை தனது சொந்த நாடாகவே நினைத்து வருகிறார்.

ஆனால், சட்ட ரீதியாக அவர் 2068ம் ஆண்டு வரை ஆஸ்திரேலியாவை தனது நாடக சொல்ல முடியாது.

கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு, ஒரு இக்கட்டான சூழலில் ஆஸ்திரேலியாவில் வசிப்பதற்காக மீதமுள்ள உறவினர் விசா (Remaining Relative Visa) எனப்படும் நிரந்தர வசிப்பதற்கான உரிமையை வழங்கும் விசாவுக்கு Nicole விண்ணப்பத்திருக்கிறார்.

சொந்த நாட்டில் தனக்கு உறவினர் எவரும் இல்லாமல், நெருக்கமான உறவினர்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் பட்சத்தில் இந்த விசாவுக்கு ஒருவர் விண்ணப்பிக்கலாம்.

ஆனால், இந்த விசா பரிசீலனைக்கான காத்திருப்புக் காலம் 50 ஆண்டுகள் என்பதால் நிச்சயத்தன்மையற்ற நிலையில் Nicole சிக்கியிருக்கிறார்.

முன்னதாக, அவர் கடந்த 2012ம் ஆண்டு வேலை விடுமுறை விசாவின் கீழ் ஆஸ்திரேலியாவுக்கு சென்று தாதி கல்வி படிக்க தொடங்கியதும் மாணவர் விசாவுக்கு மாறியிருக்கிறார். ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக அவர் கல்வியை தொடர முடியாத நிலையில் மீதமுள்ள உறவினர் விசாவுக்கு விண்ணப்பத்திருக்கிறார்.

அவரது விசா விண்ணப்பம் தற்போது பரிசீலனையில் உள்ளதால் இணைப்பு விசாவின் மூலம் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார் என தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...