Newsஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்க 2068ஆம் ஆண்டு வரை காத்திருக்கும் பெண்?

ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்க 2068ஆம் ஆண்டு வரை காத்திருக்கும் பெண்?

-

ஆஸ்திரேலியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் வெளிநாட்டு பெண் குடியுரிமை பெற போராடி வருகின்றார்.

Nicole எனும் தென் ஆப்பிரிக்க பெண் ஆஸ்திரேலியாவை தனது சொந்த நாடாகவே நினைத்து வருகிறார்.

ஆனால், சட்ட ரீதியாக அவர் 2068ம் ஆண்டு வரை ஆஸ்திரேலியாவை தனது நாடக சொல்ல முடியாது.

கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு, ஒரு இக்கட்டான சூழலில் ஆஸ்திரேலியாவில் வசிப்பதற்காக மீதமுள்ள உறவினர் விசா (Remaining Relative Visa) எனப்படும் நிரந்தர வசிப்பதற்கான உரிமையை வழங்கும் விசாவுக்கு Nicole விண்ணப்பத்திருக்கிறார்.

சொந்த நாட்டில் தனக்கு உறவினர் எவரும் இல்லாமல், நெருக்கமான உறவினர்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் பட்சத்தில் இந்த விசாவுக்கு ஒருவர் விண்ணப்பிக்கலாம்.

ஆனால், இந்த விசா பரிசீலனைக்கான காத்திருப்புக் காலம் 50 ஆண்டுகள் என்பதால் நிச்சயத்தன்மையற்ற நிலையில் Nicole சிக்கியிருக்கிறார்.

முன்னதாக, அவர் கடந்த 2012ம் ஆண்டு வேலை விடுமுறை விசாவின் கீழ் ஆஸ்திரேலியாவுக்கு சென்று தாதி கல்வி படிக்க தொடங்கியதும் மாணவர் விசாவுக்கு மாறியிருக்கிறார். ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக அவர் கல்வியை தொடர முடியாத நிலையில் மீதமுள்ள உறவினர் விசாவுக்கு விண்ணப்பத்திருக்கிறார்.

அவரது விசா விண்ணப்பம் தற்போது பரிசீலனையில் உள்ளதால் இணைப்பு விசாவின் மூலம் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார் என தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாறுமா?

நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாற வேண்டுமா என்பது குறித்த நீண்டகால விவாதம் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொண்டு நியூசிலாந்தின் பாதுகாப்பை...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...

உலகில் புற்றுநோய் குறித்த புதிய WHO அறிக்கை

உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் புற்றுநோய் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. 10 புற்றுநோய் நோயாளிகளில் 4 பேருக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்...

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

மறைந்த ஆஸ்திரேலிய வீரரின் நினைவாக அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடிகள்

ஜப்பானில் மலையில் பனிச்சறுக்கு விளையாடும்போது இறந்த ஆஸ்திரேலிய சறுக்கு வீரரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மெல்பேர்ணில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. அதன்படி, அவர் படித்த மெல்பேர்ணில்...