Newsமூன்று குழந்தைகளின் தாயான ஆஸ்திரேலிய பெண் வெட்டிக் கொலை

மூன்று குழந்தைகளின் தாயான ஆஸ்திரேலிய பெண் வெட்டிக் கொலை

-

பாகிஸ்தானில் மூன்று குழந்தைகளின் தாயை அவரது மாமனார் கோடரியால் வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று குழந்தைகளுடனும் தாயகம் திரும்புமாறு கோரிய மாமனாரின் கோரிக்கையை மறுத்தன் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது குழந்தைகளின் எதிர்காலத்துக்காக ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பவேண்டும் என்று வாக்குவாதம் செய்த நிலையில் தாய் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரில் கடந்த ஒன்பது வருடங்களாக வசித்து வந்த பெண், பாகிஸ்தானுக்குச் சென்றபோது இந்தக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேர்த்தில் வசிக்கும் சஜித்தா தஸ்னீமின் கணவர் பாறினில் பணிபுரிகிறார். சஜித்தா அண்மையில் பாகிஸ்தான் சென்றிருந்தபோது, அவரது கணவர் உட்பட அனைவரும் குடும்பமாக பாகிஸ்தானில் குடியேறிவிடவேண்டும் என்று சஜித்தாவை வற்புறுத்தினார்கள்.

ஆனால், அதனை மறுத்த சஜித்தா, குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஆஸ்திரேலிய வாழ்க்கை முக்கியமானது என்று கூறியிருக்கிறார்.

இந்த இழுபறி சில நாட்களாகவே தொடர்ந்திருக்கிறது. கடந்த 11 ஆம் திகதி இரவு, இந்த விடயம் வாக்குவாதமாக முற்றியபோது, சஜித்தாவின் வாய்க்குள் அவரது துப்பாட்டவை அடைந்த அவரது மாமனார், கோடரியால் வெட்டியிருக்கிறார்.

சத்தம் கேட்டு அவரது தந்தையார் அறைக்குள் ஓடிச்சென்று பார்த்தபோது, சஜித்தா இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்திருக்கிறார்.

ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள், பாகிஸ்தானிலுள்ள தூதரகத்தின் ஊடாக உரிய உதவிகளை மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்துள்ளது. சஜித்தாவின் மூன்று குழந்தைகளுடன் அவரது தகப்பானாருடன் தற்போது லாகூரில் உள்ளார்கள்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...