Newsமூன்று குழந்தைகளின் தாயான ஆஸ்திரேலிய பெண் வெட்டிக் கொலை

மூன்று குழந்தைகளின் தாயான ஆஸ்திரேலிய பெண் வெட்டிக் கொலை

-

பாகிஸ்தானில் மூன்று குழந்தைகளின் தாயை அவரது மாமனார் கோடரியால் வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று குழந்தைகளுடனும் தாயகம் திரும்புமாறு கோரிய மாமனாரின் கோரிக்கையை மறுத்தன் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது குழந்தைகளின் எதிர்காலத்துக்காக ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பவேண்டும் என்று வாக்குவாதம் செய்த நிலையில் தாய் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரில் கடந்த ஒன்பது வருடங்களாக வசித்து வந்த பெண், பாகிஸ்தானுக்குச் சென்றபோது இந்தக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேர்த்தில் வசிக்கும் சஜித்தா தஸ்னீமின் கணவர் பாறினில் பணிபுரிகிறார். சஜித்தா அண்மையில் பாகிஸ்தான் சென்றிருந்தபோது, அவரது கணவர் உட்பட அனைவரும் குடும்பமாக பாகிஸ்தானில் குடியேறிவிடவேண்டும் என்று சஜித்தாவை வற்புறுத்தினார்கள்.

ஆனால், அதனை மறுத்த சஜித்தா, குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஆஸ்திரேலிய வாழ்க்கை முக்கியமானது என்று கூறியிருக்கிறார்.

இந்த இழுபறி சில நாட்களாகவே தொடர்ந்திருக்கிறது. கடந்த 11 ஆம் திகதி இரவு, இந்த விடயம் வாக்குவாதமாக முற்றியபோது, சஜித்தாவின் வாய்க்குள் அவரது துப்பாட்டவை அடைந்த அவரது மாமனார், கோடரியால் வெட்டியிருக்கிறார்.

சத்தம் கேட்டு அவரது தந்தையார் அறைக்குள் ஓடிச்சென்று பார்த்தபோது, சஜித்தா இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்திருக்கிறார்.

ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள், பாகிஸ்தானிலுள்ள தூதரகத்தின் ஊடாக உரிய உதவிகளை மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்துள்ளது. சஜித்தாவின் மூன்று குழந்தைகளுடன் அவரது தகப்பானாருடன் தற்போது லாகூரில் உள்ளார்கள்.

Latest news

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசிய கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில்...

மாணவர்களுக்கான பிரபலமான சிகை அலங்காரங்களுக்கு தடை விதித்துள்ள பள்ளி

குயின்ஸ்லாந்தில் உள்ள ஆண்கள் கல்லூரியான St Edmund’s கல்லூரி விதித்த புதிய சிகை அலங்கார விதிகள், பெற்றோர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. விடுமுறை முடிந்து பள்ளி பருவம்...

நியூசிலாந்து சுற்றுலாப் பகுதியில் நிலச்சரிவு – ஒரு சிறுமி உட்பட ஒரு குழுவைக் காணவில்லை

நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமான Mount Maunganui பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலச்சரிவும், கடந்த...

சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில் Triple Zero சேவை நெருக்கடியில்

விக்டோரியாவின் அவசரகால மீட்பு மற்றும் செயல்பாட்டு சேவையான ‘Triple Zero Victoria’ (TZV), முக்கிய ஆம்புலன்ஸ் அனுப்பும் இலக்குகளை அடையத் தவறிவிட்டது. சமீபத்திய அறிக்கைகளின்படி, மிகவும் அவசரமான...

சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில் Triple Zero சேவை நெருக்கடியில்

விக்டோரியாவின் அவசரகால மீட்பு மற்றும் செயல்பாட்டு சேவையான ‘Triple Zero Victoria’ (TZV), முக்கிய ஆம்புலன்ஸ் அனுப்பும் இலக்குகளை அடையத் தவறிவிட்டது. சமீபத்திய அறிக்கைகளின்படி, மிகவும் அவசரமான...

மெல்பேர்ணில் அழிக்கப்பட்ட இரண்டு வரலாற்று நினைவுச்சின்னங்கள்

மெல்பேர்ணில் இரண்டு காலனித்துவ கால நினைவுச்சின்னங்களை ஒரு குழு நாசகாரர்கள் அழித்துள்ளனர். நேற்று இரவுக்கும் இன்று காலைக்கும் இடையில், நாசகாரர்களின் இலக்காக மாறியுள்ள இந்த வரலாற்று நினைவுச்சின்னங்களைப்...