Newsமூன்று குழந்தைகளின் தாயான ஆஸ்திரேலிய பெண் வெட்டிக் கொலை

மூன்று குழந்தைகளின் தாயான ஆஸ்திரேலிய பெண் வெட்டிக் கொலை

-

பாகிஸ்தானில் மூன்று குழந்தைகளின் தாயை அவரது மாமனார் கோடரியால் வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று குழந்தைகளுடனும் தாயகம் திரும்புமாறு கோரிய மாமனாரின் கோரிக்கையை மறுத்தன் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது குழந்தைகளின் எதிர்காலத்துக்காக ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பவேண்டும் என்று வாக்குவாதம் செய்த நிலையில் தாய் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரில் கடந்த ஒன்பது வருடங்களாக வசித்து வந்த பெண், பாகிஸ்தானுக்குச் சென்றபோது இந்தக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேர்த்தில் வசிக்கும் சஜித்தா தஸ்னீமின் கணவர் பாறினில் பணிபுரிகிறார். சஜித்தா அண்மையில் பாகிஸ்தான் சென்றிருந்தபோது, அவரது கணவர் உட்பட அனைவரும் குடும்பமாக பாகிஸ்தானில் குடியேறிவிடவேண்டும் என்று சஜித்தாவை வற்புறுத்தினார்கள்.

ஆனால், அதனை மறுத்த சஜித்தா, குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஆஸ்திரேலிய வாழ்க்கை முக்கியமானது என்று கூறியிருக்கிறார்.

இந்த இழுபறி சில நாட்களாகவே தொடர்ந்திருக்கிறது. கடந்த 11 ஆம் திகதி இரவு, இந்த விடயம் வாக்குவாதமாக முற்றியபோது, சஜித்தாவின் வாய்க்குள் அவரது துப்பாட்டவை அடைந்த அவரது மாமனார், கோடரியால் வெட்டியிருக்கிறார்.

சத்தம் கேட்டு அவரது தந்தையார் அறைக்குள் ஓடிச்சென்று பார்த்தபோது, சஜித்தா இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்திருக்கிறார்.

ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள், பாகிஸ்தானிலுள்ள தூதரகத்தின் ஊடாக உரிய உதவிகளை மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்துள்ளது. சஜித்தாவின் மூன்று குழந்தைகளுடன் அவரது தகப்பானாருடன் தற்போது லாகூரில் உள்ளார்கள்.

Latest news

உலகின் ‘வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீரர்’ விபத்தில் மரணம்

உலகின் வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை என்று நம்பப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் Fauja Singh, கார் மோதி உயிரிழந்தார். உயிரிழக்கும்போது அவருக்கு 114...

எஃகு உற்பத்தியில் ஒரு புதிய புரட்சி வருகிறது – பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலியாவும் சீனாவும் பசுமை எஃகு (green steel) துறையில் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். ஆஸ்திரேலிய இரும்புத் தாது உற்பத்தியாளர்களுக்கும் சீன...

விக்டோரியாவில் விமானத்தை கடத்த முயன்ற இளைஞனுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை

விக்டோரியாவில் விமானத்தைக் கடத்த முயன்ற மைனர் ஒருவரின் மூளை ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம், விக்டோரியாவில் உள்ள Avalon விமான நிலையத்தில், 17 வயது இளைஞன்...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் போக்குவரத்துச் சட்டங்களில் புதிய மாற்றம்

ஜூலை 13 முதல் ஆஸ்திரேலிய மாநிலம் ஒன்றில் புதிய போக்குவரத்துச் சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. தெற்கு ஆஸ்திரேலியாவில் மின்-ஸ்கூட்டர்கள் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்படுகின்றன. மேலும் மிதிவண்டி அல்லது மின்-ஸ்கூட்டர்களை ஓட்டுபவர்களுக்கு...

விக்டோரியாவில் விமானத்தை கடத்த முயன்ற இளைஞனுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை

விக்டோரியாவில் விமானத்தைக் கடத்த முயன்ற மைனர் ஒருவரின் மூளை ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம், விக்டோரியாவில் உள்ள Avalon விமான நிலையத்தில், 17 வயது இளைஞன்...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் போக்குவரத்துச் சட்டங்களில் புதிய மாற்றம்

ஜூலை 13 முதல் ஆஸ்திரேலிய மாநிலம் ஒன்றில் புதிய போக்குவரத்துச் சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. தெற்கு ஆஸ்திரேலியாவில் மின்-ஸ்கூட்டர்கள் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்படுகின்றன. மேலும் மிதிவண்டி அல்லது மின்-ஸ்கூட்டர்களை ஓட்டுபவர்களுக்கு...