Newsமூன்று குழந்தைகளின் தாயான ஆஸ்திரேலிய பெண் வெட்டிக் கொலை

மூன்று குழந்தைகளின் தாயான ஆஸ்திரேலிய பெண் வெட்டிக் கொலை

-

பாகிஸ்தானில் மூன்று குழந்தைகளின் தாயை அவரது மாமனார் கோடரியால் வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று குழந்தைகளுடனும் தாயகம் திரும்புமாறு கோரிய மாமனாரின் கோரிக்கையை மறுத்தன் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது குழந்தைகளின் எதிர்காலத்துக்காக ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பவேண்டும் என்று வாக்குவாதம் செய்த நிலையில் தாய் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரில் கடந்த ஒன்பது வருடங்களாக வசித்து வந்த பெண், பாகிஸ்தானுக்குச் சென்றபோது இந்தக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேர்த்தில் வசிக்கும் சஜித்தா தஸ்னீமின் கணவர் பாறினில் பணிபுரிகிறார். சஜித்தா அண்மையில் பாகிஸ்தான் சென்றிருந்தபோது, அவரது கணவர் உட்பட அனைவரும் குடும்பமாக பாகிஸ்தானில் குடியேறிவிடவேண்டும் என்று சஜித்தாவை வற்புறுத்தினார்கள்.

ஆனால், அதனை மறுத்த சஜித்தா, குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஆஸ்திரேலிய வாழ்க்கை முக்கியமானது என்று கூறியிருக்கிறார்.

இந்த இழுபறி சில நாட்களாகவே தொடர்ந்திருக்கிறது. கடந்த 11 ஆம் திகதி இரவு, இந்த விடயம் வாக்குவாதமாக முற்றியபோது, சஜித்தாவின் வாய்க்குள் அவரது துப்பாட்டவை அடைந்த அவரது மாமனார், கோடரியால் வெட்டியிருக்கிறார்.

சத்தம் கேட்டு அவரது தந்தையார் அறைக்குள் ஓடிச்சென்று பார்த்தபோது, சஜித்தா இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்திருக்கிறார்.

ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள், பாகிஸ்தானிலுள்ள தூதரகத்தின் ஊடாக உரிய உதவிகளை மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்துள்ளது. சஜித்தாவின் மூன்று குழந்தைகளுடன் அவரது தகப்பானாருடன் தற்போது லாகூரில் உள்ளார்கள்.

Latest news

3G முழுமையாக நிறுத்தப்படும் திகதி குறித்த ஆஸ்திரேலியர்களுக்கு அறிவிப்பு

இன்னும் ஒரு வாரத்தில் ஆஸ்திரேலியாவில் அனைத்து 3G நெட்வொர்க்குகளும் முடக்கப்படுவதால் நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான சாதனங்கள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக ஆஸ்திரேலியாவின்...

ஆஸ்திரேலியர்களுக்கு 6 மாதங்களுக்கு இலவச Pre-Paid வழங்க தயாராக உள்ள Telstra

வாழ்க்கைச் செலவில் அவதிப்படும் ஆஸ்திரேலியர்களுக்கு 6 மாதங்கள் வரை இலவச முன்பணம் செலுத்தும் சேவைகளை வழங்க Telstra நடவடிக்கை எடுத்துள்ளது. Top Up உதவித் திட்டத்தின் கீழ்...

ஆஸ்திரேலியாவில் இருந்து முதல் முறையாக முடங்கிப்போன நோயாளிகளுக்கான புதிய சிகிச்சை

பக்கவாதம் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மூக்கில் இருந்து எடுக்கப்பட்ட நரம்பு செல்களைப் பயன்படுத்தும் உலகின் முதல் பரிசோதனையை ஆஸ்திரிய விஞ்ஞானிகள் குழு தொடங்கியுள்ளது. அதன்படி, குயின்ஸ்லாந்தில்...

உலகில் அதிக TikTok பயனர்களைக் கொண்ட முதல் 10 இடங்களில் ஆஸ்திரேலியா

உலகளவில் மிகவும் பிரபலமான சமூக ஊடக தளங்களில் ஒன்றான TikTok 1.5 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது.அதன்படி, ஒரு மாதத்தில் ஒருவர் டிக்டாக்கைப் பயன்படுத்தும் சராசரி...

மெல்பேர்ணில் விபத்துக்குள்ளான இலகுரக விமானம்

மெல்பேர்ணில் இன்று காலை இலகுரக விமானம் விபத்துக்குள்ளானது. காலை 11.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக விக்டோரியா அவசர சேவை பிரிவு தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான இலகுரக விமானம், பர்வான்,...

ஆஸ்திரேலியாவில் இருந்து முதல் முறையாக முடங்கிப்போன நோயாளிகளுக்கான புதிய சிகிச்சை

பக்கவாதம் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மூக்கில் இருந்து எடுக்கப்பட்ட நரம்பு செல்களைப் பயன்படுத்தும் உலகின் முதல் பரிசோதனையை ஆஸ்திரிய விஞ்ஞானிகள் குழு தொடங்கியுள்ளது. அதன்படி, குயின்ஸ்லாந்தில்...