Newsஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

-

ஆஸ்திரேலியாவில் சிங்கப்பூர் பெண் ஒருவர் வீடியோ அழைப்பில் ஈடுபட்ட போது கையடக்க தொலைபேசி சார்ஜர் வெடித்ததில் முதல் மற்றும் இரண்டாவது டிகிரி தீக்காயங்களுக்குள்ளாகியுள்ளது.

கையடக்க தொலைபேசியில் சார்ஜ் செய்துகொண்டே வீடியோ அழைப்பில் இருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் வசிக்கும் சிங்கப்பூரைச் சேர்ந்த பெண்ணுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

கையடக்க தொலைபேசி சார்ஜரைப் பயன்படுத்தும் போது தீப்பிடித்ததில், கைகளில் முதல் மற்றும் இரண்டாம் டிகிரி தீக்காயங்களுக்குள்ளானார்.

லியாங் என்னும் அப்பெண், நண்பர் ஒருவருடன் வீடியோ அழைப்பில் இருந்தபோது, தொலைபேசியின் பேட்டரி குறைவாக இருந்ததால், போனை சார்ஜரில் சொருகி சோபாவில் வைத்துள்ளார்.

அப்போது சார்ஜர் திடீரென்று வெடித்து தீப்பிடித்தள்ளது. இதனால் தன் முழுக்கை மேலாடை மற்றும் ஸ்வெட்டரால் தீயை அணைக்க முயற்சித்துள்ளார்.

மேலும் போர்வையை பயன்படுத்தி சார்ஜரையும் மூடியுள்ளார். பின்னர் தண்ணீரைப் பயன்படுத்தி தீயை அணைக்க முயற்சித்துள்ளார்.

தீயின் வேகம் சற்றும் குறையாததால் குளியலறைக்குள் மொத்தமாக வீசி தீயை முழுவதுமாக அணைத்துள்ளார்.

தீயை அணைத்த பின்னர் தனது கைகளில் பெரிய கொப்புளங்களைக் கவனித்தார். அவரது மகள் முதலுதவியாக கையில் களிம்பு தடவி விட்டார், மறுநாள் காலையில் தான் மருத்துவ உதவியை நாடி மருத்துவமனை விரைந்துள்ளார்.

மேலும் இந்த சார்ஜர் நண்பர் ஒருவரால் பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...