Newsகொந்தர்கள் (Hackers) யாரையெல்லாம் குறி வைக்கிறார்கள்?

கொந்தர்கள் (Hackers) யாரையெல்லாம் குறி வைக்கிறார்கள்?

-

கொந்தர்கள் (Hackers) யாரையெல்லாம் குறி வைக்கிறார்கள்? யாரெல்லாம் அகப்படுகிறார்களோ எல்லோரையும் குறி வைக்கிறார்கள். மீன் பிடிக்க வலை வீசுபவர்களுக்கு எந்த மீன் எங்கே இருக்கும் என்றெல்லாம் தெரியாது. வலையில் விழுவதெல்லாம் அவர்களுக்கு இரை. அவ்வளவுதான்.

நம்மிடம் பணம் இல்லை, எந்த ரகசியமும் இல்லை, அதனால் என்னை ஏன் குறி வைக்கப் போகிறார்கள் என்று எண்ணுகிறீர்களா?

அப்படிப்பட்ட ஆள்கள் முக்கியமாகத் தேவை. வேறு எந்த விதத்திலும் உங்களை அரசும் தேடப்போவதில்லை என்று தெரிந்தால், நீங்கள் அப்படிப்பட்ட அப்பாவி என்றால், அதன் காரணமாகவே உங்கள் திறன்பேசியையும் உங்கள் முகநூல்/என்னாப்பு/கீச்சு கணக்குகளைக் கைப்பற்றி வைத்துக் கொள்வார்கள்.

தேவைப்படும்போது உங்கள் கணினியில் உறங்கிக் கொண்டிருக்கும் சாம்பி என்னும் நடைப்பிணச் செயலியை எழுப்பிப் பிறரைத் தாக்கலாம், அல்லது வேறு யாரோ செய்ததை உங்கள் மீது குற்றஞ்சாட்டும் அளவுக்குத் தடயங்களை விதைக்கலாம். அறிவுக்கு நேர்ந்தது யாருக்கு வேண்டுமானாலும் செய்ய முடியும்.

எனவே உங்கள் நெருங்கிய உறவினர், நண்பர், உடன் பணிபுரிவோர் என்று எவரிடமிருந்தும் எது வந்தாலும் எச்சரிக்கையுடன் கையாளுங்கள். பரபரப்பான தொற்றிக் காணொளி என்று வந்தால் உடனே சொடுக்காதீர்கள். தவறான தொடுப்புகளைச் சொடுக்கினால் உங்களுக்குக் கொலைத்தண்டனை கூடக் கிடைக்கக்கூடும்.

-Mani Manivannan

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...