Newsகொந்தர்கள் (Hackers) யாரையெல்லாம் குறி வைக்கிறார்கள்?

கொந்தர்கள் (Hackers) யாரையெல்லாம் குறி வைக்கிறார்கள்?

-

கொந்தர்கள் (Hackers) யாரையெல்லாம் குறி வைக்கிறார்கள்? யாரெல்லாம் அகப்படுகிறார்களோ எல்லோரையும் குறி வைக்கிறார்கள். மீன் பிடிக்க வலை வீசுபவர்களுக்கு எந்த மீன் எங்கே இருக்கும் என்றெல்லாம் தெரியாது. வலையில் விழுவதெல்லாம் அவர்களுக்கு இரை. அவ்வளவுதான்.

நம்மிடம் பணம் இல்லை, எந்த ரகசியமும் இல்லை, அதனால் என்னை ஏன் குறி வைக்கப் போகிறார்கள் என்று எண்ணுகிறீர்களா?

அப்படிப்பட்ட ஆள்கள் முக்கியமாகத் தேவை. வேறு எந்த விதத்திலும் உங்களை அரசும் தேடப்போவதில்லை என்று தெரிந்தால், நீங்கள் அப்படிப்பட்ட அப்பாவி என்றால், அதன் காரணமாகவே உங்கள் திறன்பேசியையும் உங்கள் முகநூல்/என்னாப்பு/கீச்சு கணக்குகளைக் கைப்பற்றி வைத்துக் கொள்வார்கள்.

தேவைப்படும்போது உங்கள் கணினியில் உறங்கிக் கொண்டிருக்கும் சாம்பி என்னும் நடைப்பிணச் செயலியை எழுப்பிப் பிறரைத் தாக்கலாம், அல்லது வேறு யாரோ செய்ததை உங்கள் மீது குற்றஞ்சாட்டும் அளவுக்குத் தடயங்களை விதைக்கலாம். அறிவுக்கு நேர்ந்தது யாருக்கு வேண்டுமானாலும் செய்ய முடியும்.

எனவே உங்கள் நெருங்கிய உறவினர், நண்பர், உடன் பணிபுரிவோர் என்று எவரிடமிருந்தும் எது வந்தாலும் எச்சரிக்கையுடன் கையாளுங்கள். பரபரப்பான தொற்றிக் காணொளி என்று வந்தால் உடனே சொடுக்காதீர்கள். தவறான தொடுப்புகளைச் சொடுக்கினால் உங்களுக்குக் கொலைத்தண்டனை கூடக் கிடைக்கக்கூடும்.

-Mani Manivannan

Latest news

விக்டோரியாவில் சொத்து பாதுகாப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குற்றப் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த காலாண்டில் விக்டோரியாவில் குற்றச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட பிற பகுதிகள் Yarra...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

ரொபோக்களுக்கு உயிர்கொடுக்கும் மின்னணு தோல்

மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையுமே தற்போது ரொபோக்களும் செய்ய ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் மனிதர்களைப் போலவே ரொபோக்களும் வலி மற்றும் உணர்வுகளை உணர்ந்து எதிர்வினை ஆற்றும் வகையிலான...

“நான் நிரபராதி. நான் ஒரு நல்ல மனிதன்” – நீதிமன்றத்தில் வெனிசுலா அதிபர்

போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. 63 வயதான மதுரோ, நேற்று காலை நியூயார்க் கூட்டாட்சி...

“நான் நிரபராதி. நான் ஒரு நல்ல மனிதன்” – நீதிமன்றத்தில் வெனிசுலா அதிபர்

போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. 63 வயதான மதுரோ, நேற்று காலை நியூயார்க் கூட்டாட்சி...

சிட்னியின் மேற்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின் ஒருவர் மரணம்

சிட்னியின் மேற்கு Homebush பகுதியில், குடும்ப வன்முறை புகாரைத் தொடர்ந்து கைது செய்யச் சென்றபோது, ​​காவல்துறையினரால் மிளகு தெளிக்கப்பட்டதில் 52 வயது நபர் உயிரிழந்தார். இந்த சம்பவம்...