Newsகொந்தர்கள் (Hackers) யாரையெல்லாம் குறி வைக்கிறார்கள்?

கொந்தர்கள் (Hackers) யாரையெல்லாம் குறி வைக்கிறார்கள்?

-

கொந்தர்கள் (Hackers) யாரையெல்லாம் குறி வைக்கிறார்கள்? யாரெல்லாம் அகப்படுகிறார்களோ எல்லோரையும் குறி வைக்கிறார்கள். மீன் பிடிக்க வலை வீசுபவர்களுக்கு எந்த மீன் எங்கே இருக்கும் என்றெல்லாம் தெரியாது. வலையில் விழுவதெல்லாம் அவர்களுக்கு இரை. அவ்வளவுதான்.

நம்மிடம் பணம் இல்லை, எந்த ரகசியமும் இல்லை, அதனால் என்னை ஏன் குறி வைக்கப் போகிறார்கள் என்று எண்ணுகிறீர்களா?

அப்படிப்பட்ட ஆள்கள் முக்கியமாகத் தேவை. வேறு எந்த விதத்திலும் உங்களை அரசும் தேடப்போவதில்லை என்று தெரிந்தால், நீங்கள் அப்படிப்பட்ட அப்பாவி என்றால், அதன் காரணமாகவே உங்கள் திறன்பேசியையும் உங்கள் முகநூல்/என்னாப்பு/கீச்சு கணக்குகளைக் கைப்பற்றி வைத்துக் கொள்வார்கள்.

தேவைப்படும்போது உங்கள் கணினியில் உறங்கிக் கொண்டிருக்கும் சாம்பி என்னும் நடைப்பிணச் செயலியை எழுப்பிப் பிறரைத் தாக்கலாம், அல்லது வேறு யாரோ செய்ததை உங்கள் மீது குற்றஞ்சாட்டும் அளவுக்குத் தடயங்களை விதைக்கலாம். அறிவுக்கு நேர்ந்தது யாருக்கு வேண்டுமானாலும் செய்ய முடியும்.

எனவே உங்கள் நெருங்கிய உறவினர், நண்பர், உடன் பணிபுரிவோர் என்று எவரிடமிருந்தும் எது வந்தாலும் எச்சரிக்கையுடன் கையாளுங்கள். பரபரப்பான தொற்றிக் காணொளி என்று வந்தால் உடனே சொடுக்காதீர்கள். தவறான தொடுப்புகளைச் சொடுக்கினால் உங்களுக்குக் கொலைத்தண்டனை கூடக் கிடைக்கக்கூடும்.

-Mani Manivannan

Latest news

காப்பீடு பெறுவதற்காக மனைவியைக் கொன்ற கணவன்

குயின்ஸ்லாந்து பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த வழக்கில் புதிய துயரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான Graeme Davidson மற்றும் அவரது...

மூன்று விதமான மாடல் தொலைபேசிகளில் இனி Whatsapp வேலை செய்யாது!

உலகளவில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட Whatsapp, சில மணி நேரங்களுக்குள் மூன்று பிரபலமான தொலைபேசிகளில் வேலை செய்வதை நிறுத்திவிட்டது. உலகின் மிகவும் பிரபலமான செய்தியிடல்...

ஆஸ்திரேலியாவில் உணவுக்காக பணத்தை மிச்சப்படுத்துவதற்கான வழி

ஆஸ்திரேலியர்கள் காலாவதி திகதிக்கு அருகில் பொருட்களை வாங்குவதன் மூலம் ஆண்டுக்கு $315 சேமிப்பதாக கூறப்படுகிறது. பல்பொருள் அங்காடிகள் அதற்காக $5.3 பில்லியன் செலவிடுகின்றன. பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் பணத்தை மிச்சப்படுத்துவதற்காக...

தாய்லாந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய விதிகள்

ஆஸ்திரேலியர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த தாய்லாந்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, புதிய விதிகளின் கீழ், மே 1 முதல், அனைத்து வெளிநாட்டு...

தாய்லாந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய விதிகள்

ஆஸ்திரேலியர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த தாய்லாந்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, புதிய விதிகளின் கீழ், மே 1 முதல், அனைத்து வெளிநாட்டு...

Refugee Visa விண்ணப்பங்களை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு முடிவு

இங்கிலாந்தில் புகலிடம் கோரும் பல நாடுகளின் விசா விண்ணப்பங்களை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் இந்தச் சட்டத்தை...