News கொந்தர்கள் (Hackers) யாரையெல்லாம் குறி வைக்கிறார்கள்?

கொந்தர்கள் (Hackers) யாரையெல்லாம் குறி வைக்கிறார்கள்?

-

கொந்தர்கள் (Hackers) யாரையெல்லாம் குறி வைக்கிறார்கள்? யாரெல்லாம் அகப்படுகிறார்களோ எல்லோரையும் குறி வைக்கிறார்கள். மீன் பிடிக்க வலை வீசுபவர்களுக்கு எந்த மீன் எங்கே இருக்கும் என்றெல்லாம் தெரியாது. வலையில் விழுவதெல்லாம் அவர்களுக்கு இரை. அவ்வளவுதான்.

நம்மிடம் பணம் இல்லை, எந்த ரகசியமும் இல்லை, அதனால் என்னை ஏன் குறி வைக்கப் போகிறார்கள் என்று எண்ணுகிறீர்களா?

அப்படிப்பட்ட ஆள்கள் முக்கியமாகத் தேவை. வேறு எந்த விதத்திலும் உங்களை அரசும் தேடப்போவதில்லை என்று தெரிந்தால், நீங்கள் அப்படிப்பட்ட அப்பாவி என்றால், அதன் காரணமாகவே உங்கள் திறன்பேசியையும் உங்கள் முகநூல்/என்னாப்பு/கீச்சு கணக்குகளைக் கைப்பற்றி வைத்துக் கொள்வார்கள்.

தேவைப்படும்போது உங்கள் கணினியில் உறங்கிக் கொண்டிருக்கும் சாம்பி என்னும் நடைப்பிணச் செயலியை எழுப்பிப் பிறரைத் தாக்கலாம், அல்லது வேறு யாரோ செய்ததை உங்கள் மீது குற்றஞ்சாட்டும் அளவுக்குத் தடயங்களை விதைக்கலாம். அறிவுக்கு நேர்ந்தது யாருக்கு வேண்டுமானாலும் செய்ய முடியும்.

எனவே உங்கள் நெருங்கிய உறவினர், நண்பர், உடன் பணிபுரிவோர் என்று எவரிடமிருந்தும் எது வந்தாலும் எச்சரிக்கையுடன் கையாளுங்கள். பரபரப்பான தொற்றிக் காணொளி என்று வந்தால் உடனே சொடுக்காதீர்கள். தவறான தொடுப்புகளைச் சொடுக்கினால் உங்களுக்குக் கொலைத்தண்டனை கூடக் கிடைக்கக்கூடும்.

-Mani Manivannan

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s உணவகங்களில் கவுண்டர்களுக்கு முன்னால் ஒரு பிளாஸ்டிக் கவர்

அவுஸ்திரேலியாவில், துரித உணவு உணவக சங்கிலி அதன் உணவகங்களின் கவுன்டர்களுக்கு முன்னால் பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து சேவைகளில் பெரிய மாற்றம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகளுக்கான கட்டண முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்,...

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.