Newsஆஸ்திரேலிய நகருக்கு திரும்பிய தமிழ் குடும்பம் - பாடசாலை சென்ற சிறுமிகள்

ஆஸ்திரேலிய நகருக்கு திரும்பிய தமிழ் குடும்பம் – பாடசாலை சென்ற சிறுமிகள்

-

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தொழிற்கட்சி தலைமையில் புதிய அரசாங்கம் அமைந்த நிலையில், பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பத்தினர் தடுப்பு காவலில் இருந்து விடுக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டு முன்பு வாழ்ந்த ஆஸ்திரேலியாவின் பிலோலா நகரில் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில், பிரியா- நடேசலிங்கத்தின் குழந்தைகளான கோபிகா மற்றும் தர்ணிகா பிலோலா நகரில் முதல் நாள் பாடசாலைக்கு சென்று வந்துள்ளனர.

“எங்களது குழந்தைகள் பிலோலாவில் அமைதியாக குடியமர்ந்து கல்வியைப் பெற வேண்டும் என கடந்த 4 ஆண்டுகளில் பிரியாவும் நடேசும் பல முறை கூறியிருந்தனர். அது இன்று நடந்திருக்கிறது,” என Bring Priya, Nades and their girls home to Biloela குழு பதிவிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் அவர் கடைபிடித்த கடுமையான கொள்கையினால், சுமார் 4 ஆண்டுகள் தடுப்பு முகாமில் சிறைப்பட்டு கிடக்க வேண்டிய நிலை இக்குடும்பத்துக்கு ஏற்பட்டது.

Latest news

விலங்குகளுக்கு பதிலாக மனித இரத்தத்தை தேடும் கொசுக்கள்

கோடை காலத்தில் வெளியில் நேரத்தை செலவிடும் மக்களை கொசு தொல்லைகள் கடுமையாக பாதிக்கின்றன. பிரேசிலில் விஞ்ஞானிகள் நடத்திய டிஎன்ஏ பரிசோதனையில், விலங்குகளை விட கொசுக்கள் மனிதர்களைக் கடிக்க...

16 வயதுக்குட்பட்டவர்களின் 50,000 சமூக ஊடகக் கணக்குகளை நீக்குவதாக அரசாங்கம் உறுதி

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான சமூக ஊடகத் தடையின் முதல் வாரத்தில் 4.7 மில்லியன் சமூக ஊடகக் கணக்குகள் நீக்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் அன்னிகா...

வெனிசுலாவின் விடுதலைக்காக டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ரகசிய சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியா காட்டுத்தீயில் 228 வீடுகள் எரிந்து நாசம்

கடந்த வாரத்தில் விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 228 வீடுகள் உட்பட 700 கட்டிடங்களும், 400,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலங்களும் நாசமாகியுள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால்...