Newsஆஸ்திரேலிய நகருக்கு திரும்பிய தமிழ் குடும்பம் - பாடசாலை சென்ற சிறுமிகள்

ஆஸ்திரேலிய நகருக்கு திரும்பிய தமிழ் குடும்பம் – பாடசாலை சென்ற சிறுமிகள்

-

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தொழிற்கட்சி தலைமையில் புதிய அரசாங்கம் அமைந்த நிலையில், பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பத்தினர் தடுப்பு காவலில் இருந்து விடுக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டு முன்பு வாழ்ந்த ஆஸ்திரேலியாவின் பிலோலா நகரில் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில், பிரியா- நடேசலிங்கத்தின் குழந்தைகளான கோபிகா மற்றும் தர்ணிகா பிலோலா நகரில் முதல் நாள் பாடசாலைக்கு சென்று வந்துள்ளனர.

“எங்களது குழந்தைகள் பிலோலாவில் அமைதியாக குடியமர்ந்து கல்வியைப் பெற வேண்டும் என கடந்த 4 ஆண்டுகளில் பிரியாவும் நடேசும் பல முறை கூறியிருந்தனர். அது இன்று நடந்திருக்கிறது,” என Bring Priya, Nades and their girls home to Biloela குழு பதிவிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் அவர் கடைபிடித்த கடுமையான கொள்கையினால், சுமார் 4 ஆண்டுகள் தடுப்பு முகாமில் சிறைப்பட்டு கிடக்க வேண்டிய நிலை இக்குடும்பத்துக்கு ஏற்பட்டது.

Latest news

விக்டோரியாவில் 4 அவசர நிலை காட்டுத்தீகள்

விக்டோரியாவில் நான்கு அவசர நிலை காட்டுத்தீகளை தீயணைப்பு வீரர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இருப்பினும், காட்டுத்தீயால் ஏற்படும் சேதம் அதிகரித்து வருவதாகவும், பலத்த காற்று காரணமாக நிலைமை...

குயின்ஸ்லாந்தை தாக்கும் ஒரு புயல்

குயின்ஸ்லாந்து மாநிலம் ஒரு சூறாவளிக்கு தயாராகி வருகிறது. வெப்பமண்டல புயல் சூறாவளியாக மாற 60 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. Cairns இலிருந்து வடகிழக்கே...

குயின்ஸ்லாந்து வெள்ளத்தில் இறந்த 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்

குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து முதல்வர் David Crisafulli உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் ஆயிரக்கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில்,...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

Thai Pongal – Traditional Celebration

📅 15 January 2026🕗 8:00 AM – 11:00 AMIncludes traditional Pongal cooking, light refreshments, and the official launch of...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...