Newsபாதுகாப்பு வேண்டி ஆஸ்திரேலியா வந்தவர் பாதுகாப்பு நிறுவனம் நடத்தும் வெற்றி பயண...

பாதுகாப்பு வேண்டி ஆஸ்திரேலியா வந்தவர் பாதுகாப்பு நிறுவனம் நடத்தும் வெற்றி பயண கதை

-

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட சாந்தன் என்பவர் ஆஸ்திரோலியாவிற்கு படகு மூலம் புகழிடம் தேடி வந்தார். தற்போது இவர் மெல்பனில் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றை சிறு வணிகமாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இதன் மூலம் பலருக்கும் வேலைவாய்ப்பு அளித்து வருகிறார்.

சமீபத்தில் வானொலி ஒன்றிற்கு சாந்தனு அளித்த பேட்டியில் தான் எவ்வாறு அகதியாக வந்து, தொழில் துவங்கும் அளவிற்கு உயர்ந்தார் என்ற கதையை விளக்கமாக கூறி உள்ளார்.

பேட்டியில் சாந்தன் கூறுகையில், இலங்கை ஏற்பட்ட நெருக்கடியான நிலை காரணமாக இனி அங்கு வாழ முடியாது என கருதி, படகு வழியாக மலேசியா சென்றடைந்தோம். அங்கு அகதி என்பதால் வேலைவாய்ப்பு கிடைப்பது மிக சிரமமாக இருந்தது. அப்படியே வேலை கிடைத்தாலும், மிக குறைவான சம்பளத்திற்கே பணியமர்த்தினர். இதனால் மாற்று வழி தேடி ஆக வேண்டும் என நினைத்து, அங்கிருந்து ஆஸ்திரேலியா வர முடிவு செய்தோம்.

மலேசியாவில் இருந்து 250 பேர் ஒரு கப்பலில் ஏறி ஆஸ்திரேலியா நோக்கி வரும் போது நடுக்கடலில் என்ஜின் பழுதானது. இதனால் கடலிலேயே 11 நாட்கள் வரை இருக்க வேண்டியதாக இருந்தது. பிறகு பழுதை சரி செய்து புறப்பட்டு வரும் போது, சர்வதேச எல்லையில் இந்தோனேஷிய கடற்படை எங்களை சிறைபிடித்து அழைத்துச் சென்றது. சில நாட்களில் நாங்களே உங்களை ஆஸ்திரேலியா அனுப்பி வைக்கிறோம் என்று சொன்னவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அதோடு, எங்களை வைத்து பராமரிக்க முடியாது என்றும் சொல்லி விட்டார்கள்.

பிறகு அங்கிருந்து தப்பித்து இந்தோனேஷியாவில் சில இடங்களில் பதுங்கி வாழ்ந்தோம். பிறகு படகு ஏற்பாடு செய்து ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவை வந்தடைந்தோம். அவர்கள் எங்களுக்கு 100 டாலர்கள் அளித்து, தங்குவதற்கு வீடு அமைத்துக் கொள்ள சொன்னார்கள். ஆங்கில அறிவு இல்லாததால் ஆரம்பத்தில் பல கஷ்டங்களை எதிர்கொண்டேன். பிறகு படிப்படியாக ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டேன். அங்கு 18 மாதங்கள் ஆய்வு நடத்திய பிறகே விசா வழங்கி, மெல்பர்ன் அனுப்பி வைத்தனர்.

முதலில் துணை ஒப்பந்த அடிப்படையில் சுத்தம் செய்யும் வேலைகளை செய்தேன். அதில் சொற்பமான வருமானமே கிடைத்தது. 2010 ல் இந்தியா சென்று திருமணம் செய்து கொண்டு, 2011 ல் என் மனைவியை இங்கு அழைத்து வந்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்த வேலை செய்ததால் ஓரளவிற்கு சமாளிக்க முடிந்தது. துணை ஒப்பந்த அடிப்படையில் பல வேலைகளை செய்தோம்.

பிறகு ஒப்பந்தகளை பெறும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதை வைத்து ஒப்பந்தங்களைப் பெற்று சுத்தம் செய்து பணிகளை செய்தோம். அதில் போட்டிகள் அதிகம் இருந்ததால், பிறகு பாதுகாப்பு நிறுவனத்தை துவங்க முடிவு செய்தோம். ஆனால் ஆஸ்திரேலிய விதிகளின் படி, பாதுகாப்பு நிறுவனம் துவங்க வேண்டுமானால், அது தொடர்பான பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இதனால் ஓராண்டு பட்டயப்பட்டிப்பை முடித்து பாதுகாப்பு நிறுவனத்தை துவக்கினோம். இன்று அகதிகளாக வருபவர்கள் பலருக்கும் உதவி வருகிறேன்.

சுத்தம் செய்வது மற்றும் பாதுகாப்பு இரண்டிலும் இருக்கும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. ஆயுதங்களை எடுத்துச் செல்வது, பணத்தை கொண்டு செல்வது, பணத்தை கொண்டு சென்று ஏடிஎம்.,களில் நிரப்புவது போன்ற பணிகளை செய்வது மிகவும் சவாலான விஷயங்களாக இருக்கும். அதே போல் நானும் , எனக்கு கீழ் பணிபுரிபவர்களும் தங்களின் சான்றை சரியாக வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு 12 மாதங்களுக்கு ஒரு முறையும் அதுபற்றி விக்டோரியா போலீசிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லா விட்டால் எங்களின் உரிமங்கள் ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

பல கஷ்டங்களை தாண்டி தான் இந்த நாட்டிற்கு வந்து தொழில் துவங்கி, எங்களையும் முன்னேற்றிக் கொண்டு, எங்களைப் போன்று அகதிகளாக வந்தவர்களுக்கும் வேலை வாய்ப்பு, சம்பளம் ஆகியவற்றை கொடுத்து முன்னேற்றி வருகிறோம். அதனால் முடியாது என எத்தனை பேர் என்ன சொன்னாலும் நாம் நம்பிக்கையுடன் நம்மை வளர்த்துக் கொள்வதற்கான வழிகளை தேட வேண்டும் என்றார் சாந்தன்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...