Sportsஆஸ்திரேலியா அணிக்கு ஆறுதல் வெற்றி!

ஆஸ்திரேலியா அணிக்கு ஆறுதல் வெற்றி!

-

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் நிதானமாக துடுப்பெடுத்தாடிய சாமிக்க கருணாரத்ன 75 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

குசல் மெந்திஸ் 26 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் Josh Hazlewood, Pat Cummins மற்றும் Kuhnemann ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இதன்படி, 161 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா அணி 39.3 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பில் Alex Carey ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் துனித் வெல்லாலகே மூன்று விக்கெட்டுக்களையும் மற்றும் மஹீஸ் தீக்சன 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதற்கமைய, 5 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. போட்டியின் ஆட்ட நாயகனாக சாமிக்க கருணாரத்ன தெரிவு செய்யப்பட்ட நிலையில் தொடராட்ட நாயகனாக குசல் மெந்திஸ் தெரிவு செய்யப்பட்டார்.

Latest news

 மரண ஆபத்தை ஏற்படுத்தும் CellAED இயந்திரம் பற்றிய எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் வீடுகள் மற்றும் பணியிடங்களில் அவசர சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் 'CellAED' வகை Defibrillatorsகளைப் பயன்படுத்தும் மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை தயாரித்த நிறுவனத்தின் சரிவு...

அடுத்த வாரம் 2 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ள Samsung

Samsung தனது சமீபத்திய Galaxy A17 5G Smartphone மற்றும் Galaxy Tab A11+ டேப்லெட்டை வரும் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் அறிமுகப்படுத்தப்போவதாக...

போதைப்பொருட்களால் உயிரை மாய்த்துக் கொண்டு உறுப்புகளை தானம் செய்த உலகின் முதல் ஆஸ்திரேலியர்

தன்னார்வ மரணத்தைத் தூண்டுவதற்காக மருந்துகளைப் பயன்படுத்திய பிறகு, தனது உறுப்புகளை தானம் செய்த உலகின் முதல் நபராக ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் உருவெடுத்துள்ளதாக நம்பப்படுகிறது. கரேன் டங்கன்...

ஆபாச படங்களை உருவாக்குவதாக Grok AI நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு

எலான் மஸ்க்கின் Grok என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தன்னுடைய ஆடைகளை டிஜிட்டல் முறையில் அகற்றியதாக கூறி, ஒரு பெண் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு பேட்டியளித்துள்ளார் இது...

சிட்னியில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

ஆஷஸ் போட்டியின் முதல் நாளுக்கு முன்னதாக, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நாளை ரோந்து செல்ல, அதிக ஆயுதம் ஏந்திய நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினரின் ஒரு...

அரசாங்க வலைத்தளத்தை ஹேக் செய்த பிரிட்டிஷ் ஹேக்கருக்கு ஆஸ்திரேலியா வழங்கிய சிறப்பு விசா

ஒரு தனிநபர் பெறுவதற்கு மிகவும் கடினமான ஆஸ்திரேலிய விசா வகைகளில் ஒன்றை பிரிட்டிஷ் ஹேக்கர் ஒருவர் பெற முடிந்தது. ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் இணைய அமைப்பில் ஒரு முக்கியமான...