Newsஇலங்கையில் பாடசாலைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

இலங்கையில் பாடசாலைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

-

இலங்கையில் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஜுலை மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் பாடசாலை கற்பித்தல் பணிகளை முன்னெடுப்பது குறித்த அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, கடந்த வாரம் கிராமிய பகுதிகளில் பாடசாலைகள் முன்னெடுக்கப்பட்டமை போன்று, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து அசௌகரியமற்ற பாடசாலைகளை வழமைபோன்று முன்னெடுக்க வேண்டும்.

குறித்த பாடசாலைகளில், போக்குவரத்து பிரச்சினை உள்ள ஆசிரியர்கள், அதிபர்கள் ஊடாக, அந்த ஆசிரியர்களின் பிரத்தியேக விடுமுறையில் விடுவித்து, பொறுத்தமான நேர அட்டவணையை தயாரிக்க வேண்டும்.

அதேநேரம், கடந்த வாரம் பாடசாலைகள் இயங்காத நகரப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளை 3 நாட்களுக்கு இயக்க கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, செவ்வாய், புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரையில் குறித்த பாடசாலைகள் இயங்க வேண்டும்.

அந்தப் பாடசாலைகளில், ஆரம்பப் பிரிவு கற்பித்தல் பணிகளை முன்னெடுக்கும் நாட்கள் குறித்து, தீர்மானிக்கும் அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் வராத நாட்களில் இணையவழி முறைமையில், வீட்டுப் பாடங்களை வழங்குதல் உள்ளிட்ட முறைகள் ஊடாக கற்பித்தல் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

போக்குவரத்து பிரச்சினை காரணமாக, பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியாத ஆசிரியர்களுக்காக, குறித்த நாட்களை தனிப்பட்ட விடுமுறையாக கருதாதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Latest news

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி, தோஷாகானா வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய துப்பாக்கி கொள்முதல்

ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான Bondi தாக்குதலைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் (NSW)...

இளைஞர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள விக்டோரியன் பிரதமர் 

கடந்த சில நாட்களாக விக்டோரியாவின் Mordialloc கடலோரப் பகுதியில் இளைஞர்கள் குழுவின் கலவர நடத்தை பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள்...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

கிறிஸ்துமஸுக்கு முன்பு எரிபொருள் விலை எப்படி உயரும்?

கிறிஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்பு, குயின்ஸ்லாந்து முழுவதும் பெட்ரோல் விலை திடீரென அதிகரித்துள்ளது. இந்த பண்டிகை காலத்தில் இந்த அதிகரிப்பு "மிகவும் நியாயமற்றது மற்றும் எதிர்பாராதது" என்று...