Newsஇலங்கையில் பாடசாலைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

இலங்கையில் பாடசாலைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

-

இலங்கையில் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஜுலை மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் பாடசாலை கற்பித்தல் பணிகளை முன்னெடுப்பது குறித்த அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, கடந்த வாரம் கிராமிய பகுதிகளில் பாடசாலைகள் முன்னெடுக்கப்பட்டமை போன்று, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து அசௌகரியமற்ற பாடசாலைகளை வழமைபோன்று முன்னெடுக்க வேண்டும்.

குறித்த பாடசாலைகளில், போக்குவரத்து பிரச்சினை உள்ள ஆசிரியர்கள், அதிபர்கள் ஊடாக, அந்த ஆசிரியர்களின் பிரத்தியேக விடுமுறையில் விடுவித்து, பொறுத்தமான நேர அட்டவணையை தயாரிக்க வேண்டும்.

அதேநேரம், கடந்த வாரம் பாடசாலைகள் இயங்காத நகரப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளை 3 நாட்களுக்கு இயக்க கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, செவ்வாய், புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரையில் குறித்த பாடசாலைகள் இயங்க வேண்டும்.

அந்தப் பாடசாலைகளில், ஆரம்பப் பிரிவு கற்பித்தல் பணிகளை முன்னெடுக்கும் நாட்கள் குறித்து, தீர்மானிக்கும் அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் வராத நாட்களில் இணையவழி முறைமையில், வீட்டுப் பாடங்களை வழங்குதல் உள்ளிட்ட முறைகள் ஊடாக கற்பித்தல் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

போக்குவரத்து பிரச்சினை காரணமாக, பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியாத ஆசிரியர்களுக்காக, குறித்த நாட்களை தனிப்பட்ட விடுமுறையாக கருதாதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Latest news

அதிக மருத்துவ மானியங்களை வழங்க தயாராகவுள்ள எதிர்க்கட்சி

ஆஸ்திரேலிய எதிர்க்கட்சியான லிபரல் கூட்டணி, Medicare-இல் 9 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளது. மொத்த பில்லிங் சேவைக்குள் பல நெருக்கடிகள் இருப்பதாக எதிர்க்கட்சித்...

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கிடைக்கவுள்ள பல சிறப்பு நன்மைகள்

நாட்டின் சுகாதாரத் துறையை வலுப்படுத்த, எதிர்காலத்தில் மருத்துவக் காப்பீட்டு நிதியில் பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்த ஆளும் தொழிலாளர் கட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி, 2030 ஆம் ஆண்டுக்குள் இலவச...

மிகப்பெரிய நிதி நெருக்கடியில் உள்ள விக்டோரியா

விக்டோரியன் மாநில அரசாங்கத்திற்குள் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. மாநிலம் தற்போது கடுமையான கடன் நெருக்கடியை எதிர்கொள்வதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். வரவிருக்கும் வேலை வெட்டுக்கள் குறித்த விவரங்களை மாநில...

பணியிட அழுத்தத்தைக் குறைக்க தயாராகும் விக்டோரியா

வேலையில் மன அழுத்தத்தைத் தடுக்க விக்டோரியன் அரசு பல புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. பணி அழுத்தத்தை நிர்வகிப்பது தொடர்பாக இந்தப் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இது...

புலம்பெயர்ந்தோரும் விண்ணப்பிக்கக்கூடிய பல புதிய வேலை வாய்ப்புகள்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட நிதிக்கு கூடுதலாக $500 மில்லியன் நிதியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் துறையில் புதிய...

25 ஆண்டுகளில் மெல்பேர்ண் வீட்டு விலைகளில் ஏற்பட்டிள்ள மாற்றம்

மெல்பேர்ணின் சராசரி வீட்டுச் சந்தையில் விலைகள் எவ்வாறு மாறிவிட்டன என்பது குறித்து ஒரு புதிய வெளிப்பாடு வெளியிடப்பட்டுள்ளது. இது PropTrack இன் தரவை அடிப்படையாகக் கொண்டது என்று...