Newsஆஸ்திரேலியர்களுக்கு அநாமதேயத் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் எச்சரிக்கை!

ஆஸ்திரேலியர்களுக்கு அநாமதேயத் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் எச்சரிக்கை!

-

சிட்டினியில் வெளிநாட்டு மாணவர்கள் ஒன்பது பேர் சிட்னி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய அரசாங்க ஏஜென்ஸிகளிலிருந்து அழைப்பெடுப்பவர்கள் என்ற போர்வையில் அப்பாவி மக்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு மாணவர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேற்கு சிட்னியில் நடந்த பொலிஸ் நடவடிக்கையில் மேலும் எட்டுப்பேர் சிக்கியுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநாமதேயத் தொலைபேசி அழைப்புக்களின் மூலம் சுமார் 24 லட்சம் டொலர் பணத்தை மோசடி செய்து, பல்வேறு வங்கிக்கணக்குகளின் ஊடாக வெளிநாட்டுக்குக் கடத்தியிருப்பதாக இவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

இந்த குற்ற வலையமைப்பில் மேலும் பலர் கைதாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இவ்வாறான அநாமதேயத் தொலைபேசி அழைப்புகள் அவதானமாக இருக்குமாறு ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Latest news

சமூக ஊடகங்களில் “Back to school” புகைப்படங்களை இடுகையிடுவதைத் தவிர்க்கவும்

பள்ளி தொடங்கும் முன் சமூக ஊடகங்களில் "Back to school" புகைப்படங்களை இடுகையிடுவது குறித்து ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP) எச்சரிக்கை விடுத்துள்ளது . குழந்தைகளின் பள்ளி...

16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த அமேசான் நிறுவனம்

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் உலகளவில் சுமார் 16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செய்யறிவு (AI) தொழிநுட்பத்தின் வளர்ச்சியால், இணையவழி மற்றும்...

விக்டோரியா காட்டுத்தீயால் முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நகரத்திற்கான நீர் விநியோகம்

விக்டோரியாவின் Otways-இல் உள்ள Carlisle நதி காட்டுத்தீ Gellibrand நகரத்திற்கான நீர் விநியோகத்தை முற்றிலுமாக துண்டித்துவிட்டது . காட்டுத்தீ ஏற்படும் அபாயம் இருப்பதால், நீர் சுத்திகரிப்பு நிலையம்...

இந்தியாவில் பரவிவரும் வைரஸ் தொற்று – பல விமான நிலையங்கள் பரிசோதனை

இந்தியாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து , பல ஆசிய நாடுகள் விமான நிலையங்களில் கடுமையான பரிசோதனை முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. நிபா வைரஸ் என்பது பழ வௌவால்களால்...

மெல்பேர்ண் வீட்டில் இருந்து பல மதிப்புமிக்க நகைகள் மற்றும் ஓவியங்கள் திருட்டு

மெல்பேர்ணில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டில் இருந்து சுமார் $400,000 மதிப்புள்ள நகைகள் மற்றும் ஓவியங்கள் திருடப்பட்டுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளரான பெண்ணின் சகோதரர் வீட்டிற்கு...

பழைய ஐபோன்களுக்கு Triple-0 பாதிப்பு

Triple-0 உட்பட, சில பழைய ஆப்பிள் போன்கள் தொலைபேசி அழைப்புகளைப் பெறவோ அல்லது செய்யவோ தவறிவிடக்கூடிய ஒரு சிக்கலை விசாரித்து வருவதாக டெல்ஸ்ட்ரா அறிவித்துள்ளது. iOS 16.7.13...