Newsயாழ்.சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி!

யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி!

-

சர்வதேச ஒழுங்குபடுத்தல் தேவைகளை உறுதிப்படுத்திக் கொண்டு யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கு இடையிலான தொழிற்பாடுகள் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

எனினும், கொரோனா தொற்று நிலைமையால் அதன் நடவடிக்கைகள் 2020 மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை தற்காலிகமாகப் பிற்போடப்பட்டிருந்தன.

இந்நிலையில் யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கு இடையிலான தொழிற்பாடுகளை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பித்தல் தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் அமைச்சரால் மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை குறித்த விமான நிலையத்திலிருந்து தென்னிந்திய விமான நிலையம் வரை வாடகை விமானத் தொழிற்பாடுகள் மற்றும் நேர அட்டவணைக்கமைவான விமானப் பயணங்களை மேற்கொள்வதற்காக சர்வதேச ரீதியாகவும் உள்ளூரிலும் நிறுவப்பட்டுள்ள விமான நிறுவனங்கள் தற்போது வேண்டுகோள்களைச் சமர்ப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

14 ரஷ்யர்களை நாடு கடத்தும் ஆஸ்திரேலியா

உக்ரைன் மீதான சட்டவிரோத படையெடுப்பில் பங்கேற்ற 14 ரஷ்ய நபர்கள் மீது நிதி மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை (தடைகள்) பிறப்பிக்கப்போவதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. ரஷ்யாவில் மனித...

தெற்கு ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தேனீ வளர்ப்புத் தொழில்

தேனீக் கூடுகளை கடுமையாக சேதப்படுத்தும் Varroa Mite, தெற்கு ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பூச்சி இனம் தேனீக்களை அழிப்பதுடன், தேனீக்களுடன் தொடர்புடைய வைரஸ்களையும் பரப்புகிறது...

Hunter பள்ளத்தாக்கில் நாய் தாக்கியதில் ஆபத்தான நிலையில் உள்ள இளம்பெண்

நியூ சவுத் வேல்ஸ் Hunter பள்ளத்தாக்கில் உள்ள ஒரு வீட்டில் நாய் தாக்கியதில் பதின்ம வயது பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். காலை 11:30 மணியளவில்...

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகத் தடையின் பல குறைபாடுகள்

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீது ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடையைச் செயல்படுத்தப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறைகளில் உள்ள அபாயங்கள் மற்றும் குறைபாடுகளை ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்தத்...

புனித பூர்வீக தலத்தில் neo-Nazi தாக்குதல் நடத்தியதாக மேலும் நான்கு பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை மெல்பேர்ணில் உள்ள ஒரு புனித பழங்குடி முகாம் தளத்தை Neo-Naziக்கள் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, மேலும் நான்கு பேர் மீது போலீசார் குற்றம்...

நாய்களை கண்காணிக்க விக்டோரியா பூங்காவில் நிறுவப்பட்டுள்ள CCTV கேமராக்கள்

விக்டோரியாவின் Balaclava-இல் உள்ள Hewison Reserve பூங்காவில் நாய் நடைபயிற்சி செய்பவர்களைச் சரிபார்க்க CCTV கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. Hewison Reserve பூங்கா "Leash-free zone" அல்லது "நாய்கள்...