Newsயாழ்.சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி!

யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி!

-

சர்வதேச ஒழுங்குபடுத்தல் தேவைகளை உறுதிப்படுத்திக் கொண்டு யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கு இடையிலான தொழிற்பாடுகள் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

எனினும், கொரோனா தொற்று நிலைமையால் அதன் நடவடிக்கைகள் 2020 மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை தற்காலிகமாகப் பிற்போடப்பட்டிருந்தன.

இந்நிலையில் யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கு இடையிலான தொழிற்பாடுகளை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பித்தல் தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் அமைச்சரால் மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை குறித்த விமான நிலையத்திலிருந்து தென்னிந்திய விமான நிலையம் வரை வாடகை விமானத் தொழிற்பாடுகள் மற்றும் நேர அட்டவணைக்கமைவான விமானப் பயணங்களை மேற்கொள்வதற்காக சர்வதேச ரீதியாகவும் உள்ளூரிலும் நிறுவப்பட்டுள்ள விமான நிறுவனங்கள் தற்போது வேண்டுகோள்களைச் சமர்ப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவில் நிதி மோசடியால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா? பெண்களா?

ஆஸ்திரேலியர்களில் 10 பேரில் ஒருவர் அட்டை மோசடியை அனுபவித்துள்ளதாக சமீபத்திய தரவு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 2023-24 நிதியாண்டிற்கான ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் நடத்திய கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது. கிரெடிட்...

பிரபல கடையில் பொருத்தப்பட்டுள்ள கேமரா – அதிருப்தியடைந்துள்ள வாடிக்கையாளர்கள்

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பிரபலமான ஷாப்பிங் மாலில் மார்பளவு உயரத்தில் அலமாரிகளில் பொருத்தப்பட்ட புதிய கேமரா அமைப்பைப் பற்றி வாடிக்கையாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். வூல்வொர்த்ஸின் பல கிளைகளில்,...

ஈஸ்டர் வார இறுதியில் பரபரப்பாக இருக்கும் விமான நிலையங்கள்

ஈஸ்டர் நீண்ட வார இறுதி காரணமாக ஆஸ்திரேலிய விமான நிலையங்கள் மிகவும் பரபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 9 முதல் 29 வரை சுமார்...

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் விலங்கு பெயர்கள்

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான செல்லப் பெயராக கிரவுன் வாக்களிக்கப்பட்டுள்ளது. இது பூனைகள் மற்றும் நாய்கள் இரண்டிற்கும் பிரபலமான பெயராக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய செல்லப்பிராணி காப்பீட்டு நிறுவனமான...

அல்பானீஸின் வீட்டின் முன் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நபர்

நியூ சவுத் வேல்ஸ் மத்திய கடற்கரையில் உள்ள பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வீட்டின் முன் ஒருவர் போராட்டம் நடத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவின் தேசிய வீட்டுவசதி நெருக்கடியின் மீது...

மெல்பேர்ணில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை உயரும் அறிகுறி

மெல்பேர்ணில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் அதிகரிக்கும் என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர். விக்டோரியன் அரசாங்க நிறுவனம் ஒன்றால் செய்யப்பட்ட வாடகைகளை திருத்தும் திட்டம் இதற்குக் காரணமாக...