Newsயாழ்.சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி!

யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி!

-

சர்வதேச ஒழுங்குபடுத்தல் தேவைகளை உறுதிப்படுத்திக் கொண்டு யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கு இடையிலான தொழிற்பாடுகள் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

எனினும், கொரோனா தொற்று நிலைமையால் அதன் நடவடிக்கைகள் 2020 மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை தற்காலிகமாகப் பிற்போடப்பட்டிருந்தன.

இந்நிலையில் யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கு இடையிலான தொழிற்பாடுகளை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பித்தல் தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் அமைச்சரால் மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை குறித்த விமான நிலையத்திலிருந்து தென்னிந்திய விமான நிலையம் வரை வாடகை விமானத் தொழிற்பாடுகள் மற்றும் நேர அட்டவணைக்கமைவான விமானப் பயணங்களை மேற்கொள்வதற்காக சர்வதேச ரீதியாகவும் உள்ளூரிலும் நிறுவப்பட்டுள்ள விமான நிறுவனங்கள் தற்போது வேண்டுகோள்களைச் சமர்ப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

இளம் வயதிலேயே தொழில்முனைவோராக மாறிய ஆஸ்திரேலிய குழந்தைகள்

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த்திலிருந்து, பெரியவர்களை விட பண மேலாண்மை பற்றி தெளிவாகப் பேசும் குழந்தைகள் குழுவைப் பற்றிய செய்திகள் வந்துள்ளன. 6 ஆம் வகுப்பு படிக்கும் இந்தத்...

மின்சார பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பாக ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடி மீது 130 குற்றச்சாட்டுகள்

தள்ளுபடி விலை கடையான Panda Mart மீது மின் பாதுகாப்பு சட்டங்களை மீறியதாக 130 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன . Energy Safe Victoria கூறுகையில், மார்ச் 2025...

இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் மாயம்

இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாசரில் உள்ள சுல்தான் ஹசனூதின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க சில நிமிடங்களே இருந்த நிலையில், பிற்பகல்...

ஆஸ்திரேலிய குடியிருப்பாளர்களின் ஒரு குழுவை பாதிக்கும் UK பாஸ்போர்ட் சட்டம்

புதிய பிரிட்டிஷ்-ஐரிஷ் பாஸ்போர்ட் சட்டங்களால் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் அரசாங்கங்கள் பெப்ரவரி 25 முதல் அமல்படுத்தவுள்ள புதிய பாஸ்போர்ட் விதிகள் காரணமாக...

ஆஸ்திரேலிய குடியிருப்பாளர்களின் ஒரு குழுவை பாதிக்கும் UK பாஸ்போர்ட் சட்டம்

புதிய பிரிட்டிஷ்-ஐரிஷ் பாஸ்போர்ட் சட்டங்களால் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் அரசாங்கங்கள் பெப்ரவரி 25 முதல் அமல்படுத்தவுள்ள புதிய பாஸ்போர்ட் விதிகள் காரணமாக...

விக்டோரியாவின் காட்டுத்தீயால் ஏற்பட்ட சேதத்தை காட்டும் செயற்கைக்கோள் படங்கள்

விக்டோரியா மாநிலத்தில் காட்டுத்தீயால் அழிக்கப்பட்ட நகரங்களின் செயற்கைக்கோள் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக ஏற்பட்ட காட்டுத்தீயில் 290க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தப்...