Newsயாழ்.சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி!

யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி!

-

சர்வதேச ஒழுங்குபடுத்தல் தேவைகளை உறுதிப்படுத்திக் கொண்டு யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கு இடையிலான தொழிற்பாடுகள் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

எனினும், கொரோனா தொற்று நிலைமையால் அதன் நடவடிக்கைகள் 2020 மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை தற்காலிகமாகப் பிற்போடப்பட்டிருந்தன.

இந்நிலையில் யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கு இடையிலான தொழிற்பாடுகளை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பித்தல் தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் அமைச்சரால் மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை குறித்த விமான நிலையத்திலிருந்து தென்னிந்திய விமான நிலையம் வரை வாடகை விமானத் தொழிற்பாடுகள் மற்றும் நேர அட்டவணைக்கமைவான விமானப் பயணங்களை மேற்கொள்வதற்காக சர்வதேச ரீதியாகவும் உள்ளூரிலும் நிறுவப்பட்டுள்ள விமான நிறுவனங்கள் தற்போது வேண்டுகோள்களைச் சமர்ப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

சர்வதேச தரகராக அமெரிக்க நீதிமன்றத்தை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியர்

39 வயதான ஆஸ்திரேலியரான பீட்டர் வில்லியம்ஸ், ரஷ்யாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து ரகசியங்களை விற்ற குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுகளின்படி, வில்லியம்ஸ் ஒரு அமெரிக்க பாதுகாப்பு...

வெளிநாட்டு மாணவர்களுக்கான படிப்புகளை ரத்து செய்ய கல்வி அமைச்சருக்கு புதிய அதிகாரம்

வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி சேவைகள் (ESOS) சட்டத்தில் திருத்தங்கள் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் திருத்தங்கள் வெளிநாட்டு மாணவர்களுக்கான படிப்புகளை முற்றிலுமாக ரத்து...

ஒரு குழந்தையை வளர்க்க பெற்றோருக்கு எவ்வளவு செலவாகும்?

ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு செலவிடப்படும் பணத்தின் அளவு, செலவுகள் குறித்து நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்தத் தகவல் சுமார் $130,000 ஆண்டு வருமானம் கொண்ட...

தினமும் Meta Apps-ஐ பயன்படுத்தும் 3.5 பில்லியன் மக்கள்

உலகெங்கிலும் 3.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு Meta செயலியைப் பயன்படுத்துவதாக Meta தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் கூறுகிறார். 2025...

Coles, Woolworths மற்றும் Amazon வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியா முழுவதும் விற்கப்படும் பிரபலமான புரத பார் பிராண்டிற்கு திரும்பப் பெறுதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Muscle Nation தயாரித்த Custard Protein Bar – Cookies and...

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத சுரங்க வெடிப்பு விபத்து – இருவர் பலி

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் Cobar நகரில் அமைந்துள்ள Endeavour சுரங்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட எதிர்பாராத நிலத்தடி வெடிப்பு சம்பவத்தில் 2 தொழிலாளர்கள்...