Newsஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ உயிரினம்!

ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ உயிரினம்!

-

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் ஆழ்கடல் ஜந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த உயிரினம் என்னவாக இருக்கும் என குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜசோன் மோய்ஸ் என்ற மீனவர் பிடித்த அந்த உயிரினம் குறித்து அவர் கூறுகையில், நான் பார்த்ததிலேயே மிகவும் அவலட்சணமான கடல்வாழ் உயிரினம் இதுதான் என்கிறார்.

சமூக வலைதளங்களில் ட்ராப்மேன் பெர்மகுய் என்று அழைக்கப்படும் ஜெசோன், அவரது சொந்த ஊரான பெர்மகுய் கடற்கரையில் அந்த ஜந்துவை பிடித்ததாகக் கூறுகிறார்.

பிங்க் நிறத்துடனும், வீங்கிய கண்களுடனும், முகம் முழுக்க வாயாக இருப்பதுபோன்று பெரிய வாயுடனும், கூரிய பற்களுடனும் அந்த மீன் அகோரமாக காட்சியளித்துள்ளது.

சுமார் 540 மீட்டர் ஆழத்தில் கண்டறியப்பட்ட இந்த மீன் சுமார் 4 கிலோ எடையுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் ஜெசோன்.

ப்ளாப்ஃபிஷ் மீன்கள் சைக்ரோலுடிடே குடும்பத்தைச் சேர்ந்தவை. இது ஒரு ஆழ்கடல் மீன். இது ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா மற்றும் நியூசிலாந்தின் கரையோரங்களில் உள்ள ஆழமான நீரில் வாழ்கிறது. இந்த மீன்கள் 30 செ.மீட்டருக்கும் குறைவான வளர்த்தியுடையவை. கடல் மட்டத்தை விட 60 முதல் 120 மடங்கு அழுத்தம் அதிகமாக இருக்கக்கூடிய 600 முதல் 1,200 ஆழமான நீரில் வாழக்கூடியவை.

Latest news

Paracetamol பற்றி டிரம்ப் கூறிய பொய்யான தகவல்கள்

பொதுவான வலி நிவாரணி பற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கூற்றை விஞ்ஞானிகள் நிராகரித்துள்ளனர். அமெரிக்காவில் Tylenol என்ற பிராண்ட் பெயராலும் ஆஸ்திரேலியாவில் Paracetamol என்ற பிராண்ட்...

மீண்டும் பரிசீலனையில் உள்ள கூர்மையான ஆயுதச் சட்டங்கள்

கூர்மையான ஆயுதங்கள் தொடர்பான சட்டங்களை மறுபரிசீலனை செய்து புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த மேற்கு ஆஸ்திரேலிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பெர்த்தில் ஒரு விருந்தில் இளைஞர்கள் குழுவிற்கு இடையே...

சர்வதேச மாணவர்களுக்காக ஆஸ்திரேலிய அரசு மற்றொரு திட்டம்

பிராந்திய மற்றும் பெருநகர கல்வி வழங்குநர்களுக்கு இடையே சர்வதேச மாணவர்களின் விநியோகத்தை சமநிலைப்படுத்த ஆஸ்திரேலிய அரசாங்கம் புதிய அமைச்சரவை வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அமைச்சகத்தின் புதிய அறிவுறுத்தல்கள்...

விக்டோரியா மாநிலத்தில் அதிகரித்துவரும் குற்றச் செயல்கள்

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, விக்டோரியா தற்போது கடுமையான குற்ற அலையின் மத்தியில் உள்ளது. மாநிலம் முழுவதும் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மிக அதிகமாக...

பெர்த்தில் உள்ள சீன உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து!

பெர்த்தில் உள்ள ஒரு பிரபலமான சீன உணவகத்தின் சமையலறையில் எரிந்து கொண்டிருந்த எரிவாயு அடுப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முந்தைய நாள் உணவகம் மூடப்பட்டபோது, ​​எதிர்பாராத விதமாக...

சர்வதேச மாணவர்களுக்காக ஆஸ்திரேலிய அரசு மற்றொரு திட்டம்

பிராந்திய மற்றும் பெருநகர கல்வி வழங்குநர்களுக்கு இடையே சர்வதேச மாணவர்களின் விநியோகத்தை சமநிலைப்படுத்த ஆஸ்திரேலிய அரசாங்கம் புதிய அமைச்சரவை வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அமைச்சகத்தின் புதிய அறிவுறுத்தல்கள்...