Newsரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆஸ்திரேலியா!

ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆஸ்திரேலியா!

-

ஆஸ்திரேலியா உக்ரைனுக்கு மேலும் 34 கவச வாகனங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதேவேளை, ரஷ்யாவிடமிருந்து தங்கத்தை இறக்குமதி செய்யத் தடை விதிக்கவிருப்பதாகப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசி (Anthony Albanese) தெரிவித்துள்ளார்.

உக்ரேன் சென்றுள்ள அவர் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தலைநகர் கீவ்வில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ரஷ்ய அமைச்சர்கள், செல்வந்தர்கள் என மேலும் 16 பேருக்குப் பயணத் தடை விதிக்கவிருப்பதாக ஆல்பனீசி கூறினார். ஆஸ்திரேலியா இதுவரை ரஷ்யர்கள் 843 பேருக்குத் தடைகளை விதித்துள்ளது.

உக்ரைனுக்கு மேலும் நூறு மில்லியன் டொலர் இராணுவ உதவி வழங்கப்படும் என்று ஆல்பனீசி கூறினார். ஆனால் அந்த மதிப்பு ஆஸ்திரேலிய டொலரா என்பதை அவர் குறிப்பிடவில்லை.

ஆஸ்திரேலியா உக்ரைனுக்குக் கணிசமான உதவிகளைச் செய்து வருவதாக ஜெலென்ஸ்கி கூறினார்.

Latest news

நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாறுமா?

நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாற வேண்டுமா என்பது குறித்த நீண்டகால விவாதம் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொண்டு நியூசிலாந்தின் பாதுகாப்பை...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...

உலகில் புற்றுநோய் குறித்த புதிய WHO அறிக்கை

உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் புற்றுநோய் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. 10 புற்றுநோய் நோயாளிகளில் 4 பேருக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்...

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

மறைந்த ஆஸ்திரேலிய வீரரின் நினைவாக அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடிகள்

ஜப்பானில் மலையில் பனிச்சறுக்கு விளையாடும்போது இறந்த ஆஸ்திரேலிய சறுக்கு வீரரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மெல்பேர்ணில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. அதன்படி, அவர் படித்த மெல்பேர்ணில்...