Brisbaneஆஸ்திரேலியாவில் பெற்றோரின் செயலால் உயிரிழந்த சிறுமி - பொலிஸார் வெளியிட்ட தகவல்

ஆஸ்திரேலியாவில் பெற்றோரின் செயலால் உயிரிழந்த சிறுமி – பொலிஸார் வெளியிட்ட தகவல்

-

ஆஸ்திரேலியாவில் 8 வயதுடைய சிறுமி ஒருவரின் மரணம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் ஆஸ்திரேலிய மதக் குழுவைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரிஸ்பேனுக்கு தெற்கே உள்ள ஒரு வீட்டில் இந்த வருடம் ஜனவரி மாதம் 7ஆம் திகதி எலிசபெத் ஸ்ட்ரூஸ் என்ற சிறுமி உயிரிழந்துள்ளார்.

அவர் டைப் வன் நீரிழிவு நோயாளியாகும். கிட்டத்தட்ட ஒரு வாரம் நீரிழிவு நோய்கான ஊசி செலுத்திக் கொள்ளாமையினால் அவர் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

எலிசபெத் கடுமையாக நோய்வாய்ப்பட்டதால், பெற்றோர் மற்றும் அந்த குழுவினர் சிறுமிக்கு ஊசி வழங்காமல் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை மாத்திரம் செய்துள்ளதாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் உயிரிழந்த பெற்றோர் மீது கொலை, சித்திரவதை மற்றும் உயிர் வாழ்வதற்கு தேவையானவற்றை வழங்க தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த நிலையில் சிறுமியின் மரணம் தொடர்பாக 19 முதல் 64 வயதுக்குட்பட்ட மேலும் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்போவதாக தற்போது பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...