Brisbaneஆஸ்திரேலியாவில் பெற்றோரின் செயலால் உயிரிழந்த சிறுமி - பொலிஸார் வெளியிட்ட தகவல்

ஆஸ்திரேலியாவில் பெற்றோரின் செயலால் உயிரிழந்த சிறுமி – பொலிஸார் வெளியிட்ட தகவல்

-

ஆஸ்திரேலியாவில் 8 வயதுடைய சிறுமி ஒருவரின் மரணம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் ஆஸ்திரேலிய மதக் குழுவைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரிஸ்பேனுக்கு தெற்கே உள்ள ஒரு வீட்டில் இந்த வருடம் ஜனவரி மாதம் 7ஆம் திகதி எலிசபெத் ஸ்ட்ரூஸ் என்ற சிறுமி உயிரிழந்துள்ளார்.

அவர் டைப் வன் நீரிழிவு நோயாளியாகும். கிட்டத்தட்ட ஒரு வாரம் நீரிழிவு நோய்கான ஊசி செலுத்திக் கொள்ளாமையினால் அவர் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

எலிசபெத் கடுமையாக நோய்வாய்ப்பட்டதால், பெற்றோர் மற்றும் அந்த குழுவினர் சிறுமிக்கு ஊசி வழங்காமல் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை மாத்திரம் செய்துள்ளதாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் உயிரிழந்த பெற்றோர் மீது கொலை, சித்திரவதை மற்றும் உயிர் வாழ்வதற்கு தேவையானவற்றை வழங்க தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த நிலையில் சிறுமியின் மரணம் தொடர்பாக 19 முதல் 64 வயதுக்குட்பட்ட மேலும் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்போவதாக தற்போது பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் விலங்கு பெயர்கள்

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான செல்லப் பெயராக கிரவுன் வாக்களிக்கப்பட்டுள்ளது. இது பூனைகள் மற்றும் நாய்கள் இரண்டிற்கும் பிரபலமான பெயராக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய செல்லப்பிராணி காப்பீட்டு நிறுவனமான...

காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் AFL வீரர்

ஆஸ்திரேலிய முன்னாள் கால்பந்து வீரர் ரிக்கி நிக்சன் தனது பேஸ்புக் கணக்கில் பதிவுகள் மூலம் காவல்துறையினரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவர் தனது...

மின்சார மிதிவண்டிகளை அதிகம் பயன்படுத்தும் குழந்தைகள் – உயரும் விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் மாற்றியமைக்கப்பட்ட மின்சார மிதிவண்டிகளைப் பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. இந்த மிதிவண்டியை மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை...

ஹார்வர்ட் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுக்கு தடையாக உள்ள டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், Harvard உள்ளிட்ட அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கான நிதியைக் குறைக்கத் தயாராகி வருகிறார். வெள்ளை மாளிகை சமர்ப்பித்த கோரிக்கைகளின் பட்டியலை Harvard பல்கலைக்கழகம் நிராகரித்த...

ஹார்வர்ட் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுக்கு தடையாக உள்ள டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், Harvard உள்ளிட்ட அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கான நிதியைக் குறைக்கத் தயாராகி வருகிறார். வெள்ளை மாளிகை சமர்ப்பித்த கோரிக்கைகளின் பட்டியலை Harvard பல்கலைக்கழகம் நிராகரித்த...

உலகின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராக மாறிய ஆஸ்திரேலியர்

உலகின் 100 செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக ஒரு ஆஸ்திரேலியர் பெயரிடப்பட்டுள்ளார். அந்த நபர் சுரங்க அதிபரும் பசுமை எரிசக்தி சாம்பியனுமான Andrew Forrest, அல்லது Twiggy...